புதன், 13 ஜனவரி, 2016

021. பூமாலை சாத்துக

021. பூமாலை சாத்துக

மேஷம் செவ்வாய்தோறும் செவ்வரளிப்பூ வாங்கி அருகிலிருக்கும் அம்மனுக்கு
மாலையாக சாத்தி வழிபடவும்.
ரிஷபம் தாமரை மலரை பெருமாளுக்கு சார்த்தி வர பொருளாதார
நிலைமை உயரும்.
ரிஷபம் வெள்ளிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாளுக்கு தாமரை மலரை
சாற்றி வழிபடவும்.
எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்.
கடகம் திங்கட்கிழமைதோறும் மல்லிகைப்பூவை அருகிலிருக்கும் அம்மனுக்கு
அர்ப்பணிக்கவும்.
அம்மன் அருளால் அனைத்தும் நல்ல விதமாகவே நடக்கும். 
சிம்மம் ஞாயிற்றுகிழமைதோறும் தாமரைப்பூவை அருகிலிருக்கும் பெருமாளுக்கு
சாத்தி வழிபடவும்.
பெருமாள் கடாக்ஷத்தால் அனைத்து நல்ல காரியங்களும் நடக்கும். 
துலாம் மல்லிகை மலரை துர்க்கைக்கு கொடுக்கவும்.
அம்பாள் அருளால் உங்கள் தேவைகள் நிறைவேறும். 
விருச்சிகம் செம்பருத்தி பூக்களை பறித்து அருகிலுள்ள முருகன் கோயிலில் உள்ள
வேலுக்கு பூஜை செய்யவும்.
முருகனின் அருள் உங்கள் குடும்பத்திற்கு முழுமையாக சேரும். 
விருச்சிகம் நவகிரகங்களுக்கும் மலர்கள் வாங்கிக் கொடுக்கவும்.
தனுசு சாமந்தி மலரை குருவிற்கு அர்ப்பணிக்கவும். 
தனுசு செவ்வந்திமலரை சிவனுக்கு அர்ப்பணிக்கலாம்.
அப்பனின் அருளால் அனைத்தும் நல்ல விதமாகவே நடக்கும்.
அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள்.
உங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள்.
மகரம் தாயாருக்கு தாமரை மலர் சாத்தி வழிபடவும்.
மகரம் சங்கு புஷ்ப மலரை சிவனுக்கு சாத்துங்கள்.
எருக்கம்பூவை விநாயருக்கு அர்ப் பணியுங்கள்.
உங்கள் வாழ்வில் வசந்தம் வீசும். 
கும்பம் அம்பாளுக்கு மல்லிகை மலர் கொடுத்து வழிபட காரிய
வெற்றி கிடைக்கும்.
கும்பம் விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை வாங்கிக் கொடுக்கவும்.
கும்பம் எருக்கம்பூவை அருகிலிருக்கும் சிவனுக்கு அர்ப்பணித்து வர
உங்களின் வாழ்வில் முக்கியமான காரியங்கள் அனைத்தும் நடந்தேறும்.
மீனம் சிவ பெருமானுக்கு தாமரை மலரை சமர்ப்பிக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: