வெள்ளி, 22 ஜனவரி, 2016

035. நமஸ்காரம்

035. நமஸ்காரம்

மேஷம் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
ரிஷபம் சூரிய நமஸ்காரம் செய்து ஆத்ம ஒளி பெறுங்கள்.
மிதுனம் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.
சிம்மம் சூரிய உதயத்திற்குப் பின் தூங்குவதைத்  தவிர்க்கவும்.
சிம்மம் தினந்தோறும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து வருவது உடல்
ஆரோக்யத்திற்கு நல்லது.
தனுசு தினசரி காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வாருங்கள்.
மீனம் தினந்தோறும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்துவ
சுறுசுறுப்பாக உணர்வீர்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

034. பிரதட்சிணம்

034. பிரதட்சிணம்

மேஷம் முருகரைக் கோயிலில் பிரதட்சணம் செய்யுங்கள்.
ரிஷபம் சனிக்கிழமை கோயிலை சுற்றுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச்
சென்று 11 முறை வலம் வரவும்.
பணப் பிரச்னை நீங்கும்.
உறவினர் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மறையும்.
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை தோறும் காலையில் அம்பாள்
கோயிலுக்குச் சென்று 3 முறை வலம் வரவும். 
விருச்சிகம் நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும்.
தனுசு வியாழக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
தனுசு ஞாயிறுக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  
மகரம் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலை வலம் வரவும்.  
கும்பம் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லலாம்.
கும்பம் சனிக்கிழமைகளில் சிவன் கோயிலை வலம் வரவும்.  

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 21 ஜனவரி, 2016

033. அபிஷேகம்

033. அபிஷேகம்

மிதுனம் திங்கட்கிழமை சிவனுக்குப் பாலபிஷேகம் செய்து,
கோயிலுக்கு சங்கு வாங்கிக்கொடுங்கள்.
கடகம் திங்கட்கிழமைதோறும் அம்மனுக்கு எலுமிச்சை அபிஷேகம்
செய்து வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் துர்க்கைக்கு செவ்வாய்க்கிழமை அபிஷேகம் செய்து
அர்ச்சனை செய்வது நன்று.9 வாரம்.
சிம்மம் கருமாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடவும்.
கன்னி புதன்கிழமையில் நவகிரகத்தில் புதனுக்கு பால் அபிஷேகம்
செய்து தீபம் ஏற்றி வணங்கி வருவது புத்தி சாதுரியத்தை தரும்.
சிக்கலான பிரச்சனைகளையும் எளிதாக தீர்ப்பீர்கள்.5 வாரம்.
கன்னி சிவன் கோயிலில் அபிஷேகப் பொருட்களும் முடிந்தால்
சங்கு ஒன்றும் வாங்கிக் கொடுங்கள்.
துலாம் மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
6 வாரம்.
துலாம் எலுமிச்சை கனியைப் பிழிந்து சாறு எடுத்து அம்மனுக்கு
அபிஷேகத்திற்கு படைத்துவர வாழ்வில் வசந்தம் வீசும்.6 வாரம்.
துலாம் விநாயகர் அபிஷேகத்துக்கு பால், தேன், பழங்கள்  வாங்கி
தரலாம்.
மகரம் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள்.
மகரம் திங்கட்கிழமை அன்று சிவன் கோயிலில் பால் அளித்து அபிஷேகம்
செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

032. உணவைத் தவிர்

032. உணவைத் தவிர்

சிம்மம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்து அதற்கு பதில் பால்,
பழம் உண்ணலாம்.
மீனம் வியாழக்கிழமை ஒருவேளை உணவைத் தவிர்த்துப் பால் பழம்
என்று எடுத்துக் கொள்ளலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 19 ஜனவரி, 2016

031. தீபம் சைவம் வழிபாடு

031. தீபம் சைவம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம்
ஏற்றி வர காரிய தடைகள்  நீங்கும்.
தொழில், வியாபாரம் சிறக்கும். 
மேஷம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய் விளக்கேற்றுங்கள்.
4 வாரம்.
மேஷம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மேஷம் சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி
வைத்து வழிபடலாம் 8 வாரம்.
மேஷம் மாரியம்மனை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வணங்கி
வர கஷ்டங்கள் தீரும்.
மனநிம்மதி உண்டாகும்.
மேஷம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.
மேஷம் லிங்கோத்பவருக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.
ரிஷபம் வெள்ளிக்கிழமையில் நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபமேற்றி
அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். 6 வாரம்.
மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 
ரிஷபம் சனி பகவானுக்கு சனிக்கிழமை அன்று நல்லெண்ணெய்
தீபமேற்றி வழிபடுவது நன்மை தரும். 8 வாரம்.
மிதுனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நல்லது.
கடகம் தக்ஷிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபடவும். 3 வாரம்.
கடகம் வியாழக்கிழமை அன்று குருபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு
வழிபட்டால் வந்தவினைகள் அகலும்.
கடகம் துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி 4 வாரம்
கடகம் சிவாலயத்தில் உள்ள நடராஜப்பெருமான் சந்நதியில் விளக்கேற்றி
வழிபடவும்.
கடகம் தேங்காய் மூடியில் நெய்யிட்டு திரிபோட்டு விளக்கேற்றி
விநாயகர் கோயிலில் வையுங்கள் .
சிம்மம் ஞாயிற்றுக்கிழமையில் சிவசூரியனை தீபம் ஏற்றி வழிபட்டு
வர கடன் பிரச்சனை குறையும்.
முன்னேற தேவையான உதவிகள் கிடைக்கும்.7 வாரம்
சிம்ம ராசி சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும். 8 வாரம்.
நாகரை வழிபடுவது நல்லது. ராகு 4 வாரம்.
சிம்மம் செவ்வாய்க்கிழமை துர்க்கைக்கு நெய் விளக்கேற்றுங்கள்.
கன்னி வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக் கொண்டைக்
கடலை கொடுக்கவும்.3 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு
நெய் தீபமேற்றி வழிபட்டால், ஒளிமயமான வாழ்க்கை அமையும்.
விருச்சிகம் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
8 வாரம்.
விருச்சிகம் சனிக்கிழமைகளில் சனிபகவான் சந்நதியில் எள்முடிச்சு
விளக்கேற்றி வைக்கலாம்.8 வாரம்.
தனுசு நாயன்மார் சந்நதியில் விளக்கேற்றுவது நன்மை தரும்.
தனுசு சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபாடு
செய்யுங்கள். 7 வாரம்.
தனுசு வெள்ளிக்கிழமை துர்க்கை தேவிக்கு நெய் தீபமேற்றி வழிபட்டால்
வளமான வாழ்வு வந்தமையும்.
மகரம் புதன்கிழமையன்று புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டு
வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
மகரம் வியாழக்கிழமை நவகிரக சந்நதியில் நெய்விளக்கேற்றுங்கள்.
3 வாரம்.
கும்பம் விநாயகரை வணங்கி சனிக்கிழமை தேங்காயை உடைத்து
அதன் 2 மூடிகளிலும் நெய் நிரப்பி அதில் திரியிட்டு
விளக்கேற்றுங்கள்.11 வாரம்
கும்பம் சுக்ர பகவானுக்கு வெள்ளிக்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் நலம் கூடும். 6 வாரம்.
கும்பம் வெள்ளியன்று துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி 
வழிபடுங்கள். 4 வாரம்.
கும்பம் வெள்ளிக்கிழமை துர்க்கா தேவிக்கு நெய் தீபமிட்டு வழிபாடு
செய்தால் மகிழ்ச்சி வந்து சேரும்.
கும்பம் நவக்கிரக சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.9 வாரம்.
மீனம் தினமும் அருகில் உள்ள விநாயகர் கோயிலில் விளக்கேற்றி வைத்து
வணங்குவது நலம்.
மீனம் முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு
வழிபட்டால் வாழ்க்கையில் செல்வம் சேரும். 6 (or) 9 வாரம்.
மீனம் வியாழக்கிழமை கோயிலில் நெய்விளக்கேற்றி கருப்புக்
கொண்டைக் கடலையை கொடுக்கவும்.3 வாரம்
மீனம் சண்டிகேஸ்வரர் சந்நதியில் விளக்கேற்றி வழிபடவும்.
மீனம் குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 18 ஜனவரி, 2016

030. தானம் செய்ய

030. தானம் செய்ய மேஷம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும். 9 வாரம். மேஷம் ஞாயிற்றுக்கிழமையில் நவகிரகம் சுற்றி கோதுமை அளியுங்கள். 7 வாரம். மேஷம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். 7 வாரம். மேஷம் துவரம் பருப்பை வேதபாடசாலைக்கு வாங்கிக் கொடுங்கள். மேஷம் இயன்ற அளவு துவரம்பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள். ரிஷபம் துவரம் பருப்பு தானம் செய்யுங்கள். ரிஷபம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். 7 வாரம். ரிஷபம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி இயன்றளவு மொச்சை வாங்கி நவகிரக சந்நதியில் அளியுங்கள். 6 வாரம். மிதுனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகம் சுற்றி மொச்சையைக் காணிக்கையாக்குங்கள். 6 வாரம். மிதுனம் ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சூரியனுக்கு செப்புத்தட்டில் கோதுமை படைத்து இரண்டையும் தானமாக அளியுங்கள்.7 வாரம். மிதுனம் கருப்புக் கொண்டைக்கடலையை வியாழக்கிழமை கோயிலில் கொடுத்து, நவகிரகம் சுற்றி நெய்தீபம் ஏற்றவும்.3 வாரம் மிதுனம் புதன்கிழமைகளில் மாணவர்களுக்குப் பச்சை நிறப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுக்கலாம்.5 வாரம் மிதுனம் துவரம்பருப்பு தானம் செய்யுங்கள். கடகம் கோயிலுக்கு சங்கு வாங்கித் தரலாம். கடகம் செவ்வாய்க்கிழமை துர்க்கை கோயிலில் கருப்பு உளுந்து கொடுங்கள். 7 வாரம் கடகம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள்.7 வாரம். கடகம் திங்கட்கிழமை சிவன் சந்நதியில் நெல்லை காணிக்கையாக அளித்து வணங்குங்கள். சிம்மம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்து ராமரை வழிபடுங்கள். சிம்மம் செவ்வாய்க்கிழமை நவகிரக சந்நதியில் கருப்பு உளுந்து அளியுங்கள். 9 வாரம் கன்னி முருகன் கோயிலுக்கு பவழம் தானம் செய்யலாம். கன்னி குருவாயூரப்பன் சந்நதிக்கு துவரம் பருப்பை சமர்ப்பியுங்கள். 6 வாரம். 5 வாரம் துலாம் வெள்ளிக்கிழமை ஏழைப் பெண்மணிக்கு சிறிய வெள்ளிப் பொருள் அல்லது வெள்ளிக்காசு அளித்தல் நன்று. விருச்சிகம் குடை மற்றும் பாத அணி தானம் செய்யலாம். விருச்சிகம் இயன்ற அளவு துவரம் பருப்பை யாராவது ஏழைக்குக் கொடுங்கள். விருச்சிகம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள். விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு செப்புத் தட்டில் கோதுமை வைத்து அளியுங்கள்.7 வாரம் தனுசு குடை தானம் செய்வது நல்லது. தனுசு புதன்கிழமைகளில் மாணவர்களுக்கு பச்சை நிறப் பொருட்களை அன்பளிப்பாகக் கொடுங்கள். தனுசு ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யலாம். 7 வாரம். மகரம் கோயிலுக்கு சங்கும் வாங்கித் தரலாம். மகரம் வியாழக்கிழமையில் மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்யுங்கள்.3 வாரம் கும்பம் சனிக்கிழமை ஏழைகளுக்கு உணவு அளித்து கோயிலில் உங்கள் பெயரில் அர்ச்சனை செய்யுங்கள்.  மீனம் வேதம் பயிலும் மாணவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் குரு பகவானின் திருவருளுக்குப் பாத்திரமாவீர்கள். மீனம் செவ்வாயன்று முருகர் சந்நதியில் துவரம் பருப்பு கொடுக்கவும். மீனம் ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யுங்கள். 7 வாரம். மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

029. பெயர்ச்சி கால பரிகாரங்கள்

029. பெயர்ச்சி கால பரிகாரங்கள்

மேஷம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்தில் உங்கள் பெயரில் அர்ச்சனை
செய்து கொள்ளவும்.
ரிஷபம் சனிப்பெயர்ச்சி நாளன்று சனி பகவானுக்கு அர்ச்சனை செய்வது
நன்மை தரும்.
மிதுனம் குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள சிவாலயத்திற்கு
சென்று குருபகவானை தரிசித்து சிறப்பு அர்ச்சனை செய்து கொள்வது
நல்லது.
கடகம் பாம்பு கிரகங்களின் பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப சாந்திப்
பரிகாரங்களை முறையாக செய்தால் தேம்பும் வாழ்க்கை மாறும்.
செல்வம் வருவதில் இருந்த தடைகள் அகலும்.
கடகம் சனிபெயர்ச்சியன்று அருகில் உள்ள ஆலயத்தில் வெண்பொங்கல்
நைவேத்யம் செய்து விநியோகிக்கலாம்.
சிம்மம் சனிப்பெயர்ச்சி நாளன்று சிவாலயத்திற்குச் சென்று
சனிபகவானுக்கு அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கன்னி சனிப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்திற்குச் சென்று
பக்தர்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்யலாம்.
துலாம் சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று
அர்ச்சனை செய்துகொள்வது நல்லது.
விருச்சிகம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
தனுசு சனிப்பெயர்ச்சி நாள் அன்று ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை
செய்துகொள்வது நல்லது.
மகரம் சனிப்பெயர்ச்சி நாளன்று அருகில் உள்ள ஆலயத்தில் சனி
பகவானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு உங்களால் இயன்ற
அன்னதானம் செய்யலாம்.
மீனம் சனிப்பெயர்ச்சியன்று ஆலயத்திற்கு சென்று உங்கள் பெயரில்
அர்ச்சனை செய்யலாம்.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

028. சைவம் வழிபாடு பகுதி = I

028. சைவம் வழிபாடு பகுதி = I

மேஷம் விநாயகரை வழிபட்டு வர வினைகள் தீரும். 11 வாரம்.
மேஷம் பார்வதி பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
மேஷம் துர்கையை வழிபடுவது நல்லது.
மேஷம் சமயபுரத்தாளை வணங்கி வாருங்கள்.
மேஷம் நடராஜர் வழிபாடு நலம் பயக்கும்.
மேஷம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மேஷம் செந்திலாண்டவரை வணங்க துயரங்கள் குறையும்.
ரிஷபம் விநாயகப்பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
ரிஷபம் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
ரிஷபம் முருகரை வணங்குங்கள். 6 வாரம்.
ரிஷபம் பார்வதி- பரமேஸ்வரரை வழிபட்டு வரவும்.
ரிஷபம் சக்தி வழிபாடு நலம் தரும்.
ரிஷபம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வாருங்கள்.
ரிஷபம் பராசக்தியை வழிபடவும்.
மிதுனம் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
மிதுனம் விநாயகர் வழிபாடு, வினை தீர்க்கும்.11 வாரம்.
மிதுனம் சரஸ்வதி தேவியை வணங்கி வரவும்.
மிதுனம் ஸத்குரு ஞானானந்தரை வணங்கி வரவும்.
மிதுனம் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மிதுனம் துர்க்கை வழிபாடு உகந்தது. 4 வாரம்.
கடகம் பஞ்சமுக கணபதியை வணங்கி வரவும்.11 வாரம்.
கடகம் விநாயகப்பெருமானை வழிபட்டு வர தடைகள் விலகும்.11 வாரம்.
கடகம் சக்தி வழிபாடு நலம் தரும்.
கடகம் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
கடகம் பிரத்யங்கரா தேவியை வணங்கி வரவும்.
கடகம் துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்னைகளும் தீரும்.
4 வாரம்.
தடைகள் நீங்கும்.
கடகம் ஸ்ரீகாளியம்மனை வணங்க அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும்.
மனதில் அமைதி பிறக்கும்.
கடகம் அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும்.
எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
கடகம் கருமாரி அம்மனை வழிபடுவதும் நல்லது.
கடகம் சோமாஸ்கந்தரை வணங்கி வரவும்.
கடகம் பைரவர் வழிபாடு வெற்றி தரும்.6 வாரம்.
சிம்மம் பராசக்தியை வழிபடுவது நல்லது.
சிம்மம் சரபேஸ்வரரை வணங்கி வரவும்.
சிம்மம் சிவனை வணங்குங்கள்.
சிம்மம் அங்காள பரமேஸ்வரியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 11 வாரம்.
சிம்மம் புவனேஸ்வரி தேவியை வணங்கி வாருங்கள்.
சிம்மம் காலபைரவரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம்.
சிம்மம் பைரவர் வழிபாடு உகந்தது.
கன்னி முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கன்னி சிவபெருமானை வழிபட்டு வரவும்.
கன்னி நந்தியம்பெருமானை வழிபட தடைகள் தீரும்.
கன்னி ஸ்ரீதுர்க்கையை வழிபட்டு வரவும். 4 வாரம்.
கன்னி குன்றின் மீது அமர்ந்துள்ள குமரனை வழிபட்டு வாருங்கள்.6 வாரம்.
கன்னி நடராஜப் பெருமானை வணங்கி வரவும்.
கன்னி அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
கன்னி அஷ்டதசபுஜ துர்கையை வணங்கி வரவும்.4 வாரம்.
கன்னி பூவராக ஸ்வாமியை வழிபட்ட வரவும்.
கன்னி விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.11 வாரம்.
கன்னி தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

027. தோஷங்கள் நீக்கும் கருடாழ்வார்!

4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.
5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.

விஷ்ணு ஸ்தலங்களில் கருடாழ்வார் ‘பெரிய திருவடி’ என்று
அழைக்கப்படுகிறார்.
இவர் பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்குகிறார்.
ஆலயங்களில் தரிசிக்கும் கருட வாகனம் மனித உருவத்துடன் கருடன்
போன்ற முக தோற்றத்தில் காட்சியளிப்பார்.
முகத்தில் பெரிய மீசை, அலகு இருக்கும்.
உடல் முழுவதும் அஷ்ட நாகங்களை ஆபரணமாக தரித்திருப்பார்.
ஒரு காலை முழங்காலிட்டு மற்றொரு காலை ஊன்றி அமர்ந்த நிலையில்
இரு கரங்களையும் எம்பெருமானின் திருப்பாதங்களை தாங்குவதற்காக
நீட்டியிருப்பார்.
இரு புறமும் பெரிய இறக்கைகள் இருக்கும்.
பெருமாள் கோயில்களில் கொடி மரமானது துவஜ ஸ்தம்பம் என்றும்
கருட ஸ்தம்பம் என்றும் அழைக்கப்படுகிறது.
பெருமாள் கருடனை வாகனமாக ஏற்றபோது,
‘வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய்’ என்று
வரமளித்தார்.
கருட தரிசனம் சுப சகுனமாகும்.
கருடன் மங்கள வடிவினன்.
வானத்தில் கருடன் வட்டமிடுவதும், கத்துவதும் நல்ல அறிகுறியாக
கருதப்படுகிறது.
ஸ்ரீரங்கத்தில் மிகப்பெரிய கருடன் அருள்பாலிக்கிறார்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கல் கருடன் மிகவும்
பிரசித்தி பெற்றது.
ஜாதகத்தில் புத்திர தோஷம், ருணம், ரோகம், சத்ரு பீடை, பில்லி, சூனியம்
போன்றவற்றை நீக்கி சகல சவுபாக்கியங்களும் தரக்கூடியவர் கருடாழ்வார்.
ராகு, கேது போன்ற சர்ப்ப தோஷங்களை நீக்கி மங்களத்தை அருள்வார்.
அவரை வணங்கி சகல வளங்களும் நலன்களும் பெறுவோமாக.
கணவருக்கு என்றால் நாக சதுர்த்தி அன்று விரதம்.
”மக்களைப்பெற்ற மகராசிகளும் பெறப்போகும் மகராசிகளும்”
தன் பிள்ளைகளின் நல்வாழ்வு கோரி விரதம் செய்வார்கள்.

கருட பஞ்சமி விரதம்

கருடனுக்கு புடவை பாம்புக்கு கருடன் பகை.
கட்டம் போட்ட 9கஜ புடவை மட்டுமே கருடனுக்கு அணிவிக்கப்படுகிறது.

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

026. நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

026. நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்
2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி
3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்
4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை
5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி
6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா
7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு
8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்
9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி

ஜேதிட கேள்விக்கு பதில் தெரிய தேதி, நட்சத்திரம்,நேரம்,திசை இருப்பு ராசி நவாம்ச ஜாதகம் கட்டம் mprme.jothidam@gmail.comக்கு அனுப்பவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை கேட்கலாம்.

நன்றி,
R.Megala Gopal.

025. பாராயணம் செய்ய

025. பாராயணம் செய்ய

மேஷம் அனுமன் சாலிசா படிப்பதும் கேட்பதும் நல்லது.
மேஷம் “சுப்பிரமணிய புஜங்கம்’’ பாராயணம் செய்யவும்.
செவ்வரளி மலரை அம்மனுக்கு படைத்து வர துன்பங்கள் யாவும் நீங்கும்.
மேஷம் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழை படித்து வரவும்.
மேஷம் விநாயகர் அகவலும், கந்தர் ஷஷ்டி கவசமும் பாராயணம் செய்யவும்.
மேஷம் கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள்.
ரிஷபம் கோளறு திருப்பதிகத்தை அன்றாடம் பாராயணம் செய்யுங்கள்.
ரிஷபம் மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம் படித்து வாருங்கள்.
ரிஷபம் கந்த சஷ்டி கவசம் சொல்லுங்கள்.
ரிஷபம் கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு
நீங்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.
ரிஷபம் மஹாலக்ஷ்மி அஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மிதுனம் தினம் ஒரு தேவாரப் பாடலை படித்து வருவது நல்லது.
மிதுனம் நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்து வர காரியத்தடை நீங்கும்.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். 
மிதுனம் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். 
கடகம் தமிழிலோ, வட மொழியிலோ “சுந்தர காண்டம்’’ பாராயணம் செய்வது
அதிக நன்மை தரும்.
கடகம் அபிராமி அந்தாதி பாடல்களைப் படித்து வருவதும் அற்புதமான
பலனைத் தரும்.
கடகம் கந்தசஷ்டி கவசம் படித்து வாருங்கள்.
சிம்மம் "மஹாதேவா மஹாதேவா' என்று ஜபித்துக் கொண்டே சிவபெருமானை
தரிசியுங்கள்.
சிம்மம் ஸ்ரீஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யவும் 
சிம்மம் த்ரியம்பகம் என்று ஆரம் பிக்கும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தை
பாராயணம் செய் யவும். "
கன்னி புருஷசூக்தம் பாராயணம் செய்யவும்.
கன்னி விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா
தடைகளும் நீங்கும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும். 
கன்னி கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.
கன்னி புதன்கிழமை தோறும் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்து
வருவது நல்லது.
கன்னி இயலாதவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்களை பாடி
இறைவனை வணங்கலாம்.
கன்னி ‘நமசிவாய’ நாமம் சொல்லுங்கள்.
துலாம் ‘தனம்தரும் கல்விதரும்...’ என்று தொடங்கும் அபிராமி அந்தாதி பாடலை
தினமும் 5 முறை சொல்லவும்.
துலாம் லஷ்மி அஷ்டோத்திரம் படித்து மகாலட்சுமியை வணங்க செல்வம் சேரும்.
செல்வாக்கு உயரும். 
துலாம் கந்தர் அனுபூதி படித்து வாருங்கள்.
துலாம் ஸ்ரீராமஜெயம் பாராயணம் செய்யவும்.
ஹரே ராம ஹரே கிருஷ்ண பாராயணமும் செய்யலாம். 
விருச்சிகம் ஸ்ரீதுர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.
விருச்சிகம் ஷண்முக கவசம் சொல்வது அல்லது கேட்பது மன உறுதி வளர்க்கும்.
விருச்சிகம் சுப்பிரமணிய புஜங்கம், கந்தசஷ்டி கவசம் கேட்கவும். விநாயகரை
வழிபடவும்.
விருச்சிகம் திருப்புகழ் பாராயணம், கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்வது
நலம்.
தனுசு தக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் படிப்பது, சொல்வது நன்மையைத் தரும்.
நிம்மதி தரும்.
தனுசு செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமான் சன்னிதியில் சண்முக கவசம்
படித்து வழிபாடு செய்து வந்தால் வேதனைகள் அனைத்தும் விலகி ஓடும்.
தனுசு மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவது நல்லது.
தனுசு முடிந்தால் ஹனுமான் சாலிசா படித்து வரவும்.
மகரம் ஸ்ரீதுர்க்கா ஸூக்தத்தைப் பாராயணம் செய்யலாம்.
மகரம் ஆஞ்சநேய கவசம் படிப்பது மேன்மை தரும்.
மகரம் பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள்.
அபிராமி அந்தாதியில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது
மிக, மிக நன்மை தரும்.
கும்பம் சிவபுராணத்தை தினமும் மாலை வேளையில் படிப்பது நல்லது.
கும்பம் ராமநாமம் சொல்லி அனுமனை வழிபடவும்.
கும்பம் சனி அஷ்டகம் பாராயணம் செய்யலாம்.
கும்பம் பகவத்கீதையை பொருளுணர்ந்து படிக்கலாம்.
கும்பம் பகவத்கீதை படித்து ஸ்ரீகிருஷ்ணனை வணங்கி வர எல்லா பிரச்னைகளும்
தீரும்.
மன மகிழ்ச்சி உண்டாகும்.
மீனம் கந்த சஷ்டி கவசம் சொல்வது நன்மை தரும்.
மீனம் திருவாசக பாடல்களை பொருளுணர்ந்து படித்து வரவும்.
மீனம் கோளறு பதிகத்தை பாராயணம் செய்யலாம்.
மீனம் ஸ்கந்த குரு கவசம் படித்து வரவும்.
மீனம் நவகிரக துதி சொல்லவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

024. சொல்ல வேண்டிய மந்திரம்

024. சொல்ல வேண்டிய மந்திரம்

மேஷம் “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும். 
மேஷம் ‘ஓம் ஷண்முகாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
மேஷம் “ஓம் ஷட் ஷண்முகாய நம” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை  சொல்லவும்.
மேஷம் சிவனுக்குரிய மந்திரத்தினை தினமும் சொல்லுங்கள். 
ரிஷபம் ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை
தினமும் 5 முறை சொல்லவும்.
ரிஷபம் ‘‘ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை கூறவும்.
ரிஷபம் ‘நமசிவாய’ நாமம் சொல்லுங்கள்.
ரிஷபம் “ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும். 
ரிஷபம் ‘ஓம் ப்ரக்ருத்யை நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
மிதுனம் “ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும். 
கடகம் “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.. 
கடகம் ‘ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும்.
கடகம் தினசரி 108 முறையாவது “ராம’’ நாமத்தை ஜபிக்கவும்.
சிம்மம் “ஓம் நமச்சிவாய” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும். 
சிம்மம் ‘ஓம் ஸ்ரீசிவாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும்.
சிம்மம் “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும். 
கன்னி ‘ஓம் ஸ்ரீஅச்சுதாய நமஹ’ என்ற மந்திரத்தை
தினமும் 6 முறை சொல்லவும்.
கன்னி புதன்கிழமை தோறும் ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை 
108 முறை உச்சரித்து வாருங்கள்.
கன்னி “ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 5 முறை சொல்லவும். 
துலாம் “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும். 
விருச்சிகம் சிவனுக்குரிய மந்திரத்தினை தினமும் சொல்லுங்கள்.
விருச்சிகம் “ஓம் ஸ்ரீம் துர்க்காயை நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும். 
தனுசு “ஓம் சத்குருவே நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 12 முறை சொல்லவும். 
தனுசு "குருர் பிரம்மா, குருர் விஷ்ணு, குருர் தேவோ
மகேஸ்வரஹோ குருர் சாட்சாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா""
குரு மந்திரத்தை அவ்வப்போது சொல்லவும். "
மகரம் “ஓம் ஸ்ரீம் கணபதயே நமஹ” என்ற  மந்திரத்தை
தினமும் 9 முறை சொல்லவும். 
கும்பம் “ஓம் ஸம் சனைச்சராய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 11 முறை சொல்லவும். 
கும்பம் ‘‘ ஓம் நமோ நாராயணா’’ என்று
தினமும் 108 முறை கூறுங்கள்
மீனம் முடிந்தவரை ராம நாம ஜெபம் செய்யலாம்.
மீனம் “ஓம் ஷம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை
தினமும் 15 முறை சொல்லவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

023. சைவம் ஆலய தரிசணம் பகுதி = I

023. சைவம் ஆலய தரிசணம் பகுதி = I

மேஷம் திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள்.
மேஷம் தஞ்சாவூர் சென்று பெருவுடையாரையும், நந்தியம்பெருமானையும்
பிரதோஷ நாளில் தரிசிப்பது நன்மை தரும்.
மேஷம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள ஆலங்குடி குருபகவானை
தரிசித்து வாருங்கள்.
மேஷம் புன்னைநல்லூர் மாரியம்மனை வணங்கி வாருங்கள்.
மேஷம் கும்பகோணம்-ஆடுதுறைக்கு அருகேயுள்ள திருக்கோடிக்காவல்
தலத்தில் அருள்பாலிக்கும் பாலசனீஸ்வரரை பூசம் நட்சத்திரத்தன்று
தரிசித்து வாருங்கள்.
மேஷம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள ஆலங்குடியில் அருள்பாலிக்கும்
ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஏதேனும் ஒரு
வியாழக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
மேஷம் சிதம்பரத்தில் அருளும் தில்லைக் காளியை தரிசித்து வாருங்கள்.
மேஷம் குடும்பத்துடன் பழனி மலைக்குச் சென்று பழனி
ஆண்டவனை வணங்கி வாருங்கள்.
மேஷம் அறுபடை முருகன் கோயில் ஏதேனும் ஒன்றுக்கு அடிக்கடி தரிசனம்
செய்து விட்டு வரவும்.
மேஷம் உத்திரமேரூருக்கு அருகேயுள்ள திருப்புலிவனம் சிம்மகுரு
தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கடலூர் மாவட்டம் ஓமாம்புலியூர் எனும் ஊரில் வீற்றிருக்கும் அருள்மிகு
ஸ்ரீபிரணவ வியாக்ரபுரீஸ்வரரை உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று
வில்வார்ச்சனை செய்து நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
ரிஷபம் மயிலாடுதுறை - குத்தாலத்திற்கு அருகேயுள்ள க்ஷேத்ரபாலபுரம்
பைரவரை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் காஞ்சிபுரம்-அரக்கோணம் பேருந்து வழியில் கம்மவார்பாளையம்
நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோயிலுக்குச் சென்று குருபகவானை
தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கும்பகோணம் கும்பேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் கும்பகோணம் - மயிலாடுதுறை பாதையிலுள்ள திருவாவடுதுறையில்
அருளும் கோமுக்தீஸ்வரரை உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று
வில்வார்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
ரிஷபம் திருத்தணி முருகனை தரிசித்து வாருங்கள்.
ரிஷபம் தஞ்சாவூர் அருகிருலுள்ள தென்குடித் திட்டை எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீவசிஷ்டேஷ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் கொண்டை
கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்.
ரிஷபம் கும்பகோணம் நகரத்திலேயே அமைந்துள்ள நாகேஸ்வரன் கோயிலுக்குச்
சென்று தரிசித்து வாருங்கள்.
மிதுனம் சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் இயன்றபோது பாடல் பெற்ற தலங்களுக்கு சென்று வாருங்கள்.
மிதுனம் நாகப்பட்டினத்தில் அருளும் கயாரோகணேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம்-பேரம்பாக்கம் வழியில் தக்கோலம்
உள்ளது.
தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் ‘உத்கடி’ ஆசனத்தில்
அமர்ந்த தட்சிணாமூர்த்தியின் திருவுருவை தரிசித்து வாருங்கள்.
மிதுனம் குடும்பத்தினருடன் சிதம்பரம் சென்று நடராஜப்பெருமானை தரிசித்து
பிரார்த்தனை செய்துகொள்வதன் மூலம் கூடுதல் நன்மை அடைவீர்கள்.
மிதுனம் விழுப்புரத்திற்கு அருகிலுள்ள பனையபுரம் எனும் ஊரில் அருள்பாலிக்கும்
ஸ்ரீபனங்காட்டீஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பூரம் அல்லது உத்திரட்டாதி
நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
கடகம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருவேதிக்குடி ஈசனை தரிசித்து
வாருங்கள்.
கடகம் தஞ்சாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரகதீஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது
தசமி திதி நாளில் நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
கடகம் திருவண்ணாமலை சென்று அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக
ஆராதனைகள் செய்து நாகாபரணம் சாற்றி வழிபடுவதால் வேண்டிய
வரங்களைப் பெறுவீர்கள்.
கடகம் சென்னை - குன்றத்தூரில் அமைந்திருக்கும் நாகேஸ்வரரை
தரிசித்து வாருங்கள்.
கடகம் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது, சுருட்டப்பள்ளி
நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம்.
சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டைக்குச் சென்றால் இத்தலத்தை
அடையலாம்.
குரு பகவான், தாம்பத்ய தட்சிணாமூர்த்தியாக இங்கு அருள்கிறார்.
அவரை தரிசித்து வாருங்கள்.
கடகம் திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருப்பாச்சூரில் அருளும் பாசூர்
அம்மனை தரிசித்து வாருங்கள்.
கடகம் திங்களூர் சென்று தரிசனம் செய்து விட்டு வரவும்.
கடகம் பழனி மலையில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானையும், சித்தர்
பெருமான் போகரையும் சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள்.
கடகம் நெல்லை மாவட்டம், பொன்னாக்குடி தலத்தில் அருளும்
அருணாசலேஸ்வரரை பௌர்ணமி திதி அல்லது தசமி திதி நாளில் நெய்
தீபமேற்றி வணங்குங்கள்.
கடகம் பிள்ளையார்ப்பட்டி சென்று விநாயகரை வழிபடுங்கள்.
சிம்மம் சமயபுரம் மாரியம்மனை தரிசித்து வாருங்கள்.
சிம்மம் திருப்பனந்தாள் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅருணஜடேசுவரரை
உத்திராடம் நட்சத்திரம் நடைபெறும் நாள் அல்லது அமாவாசை திதியில்
தீபமேற்றி வணங்குங்கள்.
சிம்மம் தேனி-மதுரை வழியில் 1 கி.மீ. தூரத்தில் உள்ள அரண்மனைப் புதூரில்
இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. சென்றால்
வேதபுரியை அடையலாம்.
இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலித்து
வருகிறார்.
சென்று தரிசித்து வாருங்கள்.
சிம்மம் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரை வணங்க எல்லா
நன்மைகளும் உண்டாகும்.
எதிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம் திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீசெந்தில் ஆண்டவரை உத்திராடம்
நட்சத்திரம் நடைபெறும் நாளில் வணங்குங்கள்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தியை நெய் தீபமேற்றி வணங்குங்கள்.
சிம்மம் புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் எனும் தலத்திலுள்ள நாகநாதரை
தரிசித்து வாருங்கள்.
சிம்மம் கோயமுத்தூருக்கு அருகில் உள்ள ஈச்சநாரி திருத்தலத்திற்குச் சென்று
விநாயகரை தரிசித்து வரவும்.
சிம்மம் கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருபுவனத்தில் எழுந்தருளியிருக்கும்
ஸ்ரீசரபேஸ்வர ஸ்வாமியை தரிசிக்க தடைகள் விலகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.