வெள்ளி, 28 ஜூன், 2019

கொடிமரத்தை வழிபடும்

கொடிமரத்தை வழிபடும்

பலிபீடம்

பலிபீடம்

கடவுளுக்குப் பலி செலுத்தும் வழக்கம் பண்டையக் காலம் முதலே இருந்துள்ளது.
பலியானது திராவிடர் பண்பாட்டில் படையல் என்று அழைக்கப்பட்டது.
காய்கறி, கனிவகைகள், சமைக்கப்பட்ட உணவு மற்றும் மிருகங்களைப் பலியிடுவதும் இன்றளவும் பல சமயங்களில் உள்ளது.

பலிபீடம் இந்து சமயக்கோயில்களில் கொடிமரத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது.
ஆணவம், கன்மம், மாயை என்னும் மூவகை அழுக்குகளையும் களைந்த பின்பே இறைவனை அடைய இயலும் என்ற தத்துவத்தினை உணர்த்துவதற்காக இப்பீடங்கள் கோயில்களில் அமைக்கப்படுகின்றன.



ஞாயிறு, 2 ஜூன், 2019

கோரோசனை

சகலமும் வசியமாக பழங்கால முறை

சுத்தமான கோரோசனையை வெள்ளி,ஞாயிறு அன்று தேனுடன் கலந்தும்,
திங்கள் வியாழன் நேய்யுடன் கலந்தும்,
செவ்வாய் புதன் பாலுடன் கலந்தும் மையாக இட்டு செல்ல அனைத்தும் வசியமாகும்.
வேண்டிய காரியம் சித்திக்கும்.

செவ்வாய், 28 மே, 2019

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

திருமலை வெங்டகடாஜலபதிக்கு வெண் பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்தபாராயணத்தை வேத பண்டிதர்களை கொண்டு செய்ய லட்சுமிகடாட்சம் நிரந்தரமாகும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வீட்டில் தலைவாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருக்க அந்த வீட்டில் லட்சுமிகடாட்சம் ஏற்படும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

மகாலட்சுமிக்கு பச்சை பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்புநிற வஸ்திரம் சாத்தி வழிபட வசிய முண்டாகி செல்வவரத்து உண்டாகும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

ஓடும் வெள்ளை குதிரை படம் அடிக்கடி பார்க்க பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகல செல்வங்களும் வசமாகும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வெள்ளிகிழமை காலை சுக்ரஓரையில் சுக்ரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடசெல்வம் கிடைக்கும்.

வெள்ளி, 24 மே, 2019

தாரா தந்திர பூஜை

தாரா தந்திர பூஜை

மந்திரம் அனைத்து தாராக்களும் பொதுவான மந்திரமாகக் கருதப்படுகிறாது

ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா

வெள்ளைத் தாரா தேவிக்கு மேற்கூறிய மந்திரத்துடன் மேலும் சில சொற்கள் இணைக்கப்படுகின்றன

ஓம் தாரே துத்தாரே துரே மம ஆயு: புண்ய ஞான புஷ்டிம் குரு ஸ்வாஹா

தாராவின் பீஜாக்ஷரம் தாம்( ஆகும்

தாரா தியானம்

விச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம்புஜன்மஸ்திதாம்
கர்த்ரீம் கட்க கபால நீலநளினை: ராஜத்கரா மிந்துபாம்
காஞ்சீ குண்டல ஹார கங்கணலஸத் கேயூரமஞ்ஜீரதாம்
ப்ராப்தைர் நாகவரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்ரயாம்
பிங்காக்ரைகஜடாம் லலத்ஸ்வரஸனாம் தம்ஷ்ட்ராகராளானனாம்
சர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்
அக்ஷோப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்
தாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்
தாரா காயத்ரி
ஓம் தாராயை வித்மஹே மஹோக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

வெள்ளி, 17 மே, 2019

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும்.

மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம்.

பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றி பெற நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன், “வாழைப்பழம், பேரிச்சம்பழம், முந்திரி, தேன், கல்கண்டு” போன்றவற்றை ஒன்றாக கலந்து “பஞ்சாமிர்தம்” தயாரிக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு பஞ்சமுக தீபம் ஏற்றி, வணங்கி பஞ்சாமிர்தத்தை லட்சுமிக்கு நிவேதனம் வைத்து, அதை பிரசாதமாக உண்ண வேண்டும். பிறகு அந்த பிரசாதத்தை உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் உங்கள் தொழிலில் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் காக்கும். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் செய்யலாம்.

செவ்வாய், 14 மே, 2019

ஸ்ரீ வாசுகி ஜெயந்தி

ஸ்ரீ வாசுகி ஜெயந்தி 13/05/2019

Sree Naga Kannika Yantra ஸ்ரீ-நாக கன்னிகா யந்திரம்

ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். திருமணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 - 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.

ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள்.

பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.

கணவன்-மனைவிக்குள் சண்டை அடிக்கடி தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.

நாகங்களின் கடவுளாக விளங்குகிறார் மானசா தேவி. ஒரு முறை கடுமையான விஷத்தில் இருந்து சிவபெருமானை மானசா காப்பாற்றியுள்ளார் என வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருணையை கொண்டுள்ளார் அவர். தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் அதே அளவிற்கு சீற்றத்தையும் காண்பிப்பார்.

மழைக்காலத்தில் தான் மானசா தேவியை வணங்குவார்கள். அதற்கு காரணம் இந்நேரத்தில் தான் பாம்புகள் மிகவும் முனைப்புடன் செயல்படும். மானசா தேவிக்கான சடங்குகளை இந்தியாவில் உள்ள வட கிழக்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். கருவளம், பாம்பு கடியில் இருந்து குணமடைய மற்றும் பெரியம்மை, கொப்புளிப்பான் போன்ற வியாதிகளில் இருந்து குணமடையவும் இவரை வணங்குகின்றனர்.

திங்கள், 13 மே, 2019

Lunar Worship in Megala House Worship worship 27/06/2018

Megala House Poojairoom

வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன

வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன

வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்களை மீண்டும் புதியது போல் மின்னச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையில் உள்ள வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் வெள்ளி சிலைகளை சுத்தம் செய்வது வழக்கமாக இருக்கும். அப்படி அவற்றை சுத்தம் செய்யும் போது, அதனை பளிச்சென்று கொண்டு வர நன்கு சோப்பு பயன்படுத்தி தேய்ப்போம்.

இருப்பினும் அவற்றால் நம் உடலில் உள்ள சக்தி தான் குறையுமே தவிர, வெள்ளிப் பொருட்களானது பளிச்சென்று ஆகாது. ஆனால் வெள்ளிப் பொருட்களை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று மின்னச் செய்யலாம். இங்கு வெள்ளிப் பொருட்களை புதிது போன்று பளிச்சென்று மின்ன செய்யும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

மருத்துவ புத்தரின் பூஜை

மருத்துவ புத்தரின் பூஜை

பெளத்தர்கள் பெளர்ணமியை முன்னிட்டு புத்த பூஜையில் ஈடுபட்டனர்.

பல அறிஞர்களின் வீ டுகளும் அலுவலக அறைகளும் புத்தரின் அழகிய தோற்றம் உடைய சிலைகளையோ அல்லது படங்களையோ கொண்டிருக்கின்றன.

Laughing Buddha சிரிக்கும் புத்தர்

கிழக்கு திசையில் வைத்தல்

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும். பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

தென் கிழக்கு திசையில் வைத்தல்

சிரிக்கும் புத்தரை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார். சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜையின் மீது வைத்தல்

சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும். கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

பைசையகுரு சூத்திரத்தில் மருத்துவ புத்தரின் மந்திரங்கள்

:நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா

namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā

ஓம் நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

ஓம் ஹுரு ஹுரு சண்டாளி மாதங்கி ஸ்வாஹா

தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது.

ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்

புத்த பூர்ணிமா

மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

புதன், 3 ஏப்ரல், 2019

வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபம் ஏற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.
சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி தெளித்திட செல்வம் சேரும். மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி வெள்ளிக்கிழமை தினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால் பணம் கிடைக்கும்
தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.

லட்சுமி கடாட்சம் பெருக

லட்சுமி கடாட்சம் பெருக

உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி.

பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள்.

வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.

01. கல்கண்டு

02. மஞ்சள்... குங்குமம்

03. கல் உப்பு

04. தேன்,

05. நாணயங்கள்

06. பால்,

07. தானியக் கதிர்

08. ஓடும் வெள்ளை குதிரை படம் அடிக்கடி பார்க்க

09. பச்சைபட்டு உடுத்திய லட்சுமி படத்தினை
நவதானியங்களை மஞ்சள் துணியில் முடிந்து கடை / ஆபீஸ் வாசலில் கட்டி,கல்லாவிலும் போட்டு வைக்க வியாபாரம் நஷ்டம் என்பதே இருக்காது.
சிறிது கல் உப்பை ஒருகின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால் கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் .
உங்கள் வீட்டு பணப்பெட்டியில் மல்லிகைபூ ஏலக்காய் பச்சைகற்பூரம் சந்தனம் வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமை களில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும் ..

செவ்வாயின் பாகன்

செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

குன்றி மணி

குன்றி மணி

வாங்கி வந்து சுத்தம் செய்து ஒரு பச்சை நிற துணியில் கட்டி பூஜை அறையில் 9நாள் வைத்து தினமும் தீபதுபம் காட்டி வரவும் எந்த மந்திர உச்சரிப்பும் தேவையில்லை 10ம் நாள் இவற்றை மூன்று பங்காக பிரித்து ஒன்றை பூஜை அறையிலும் மற்றொன்றை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும் இன்னொன்றை உங்கள் பாக்கெட் அல்லது பேக் பர்ஸில் வைக்க தன ஆகார்ஷனம் உண்டாகும்

குன்றி மணிகள் பலவகை உண்டு அனைத்தும் தன ஆகர்ஷனம் தரகூடியது
ஆபிஸ் கடை மற்றும் வீட்டின் வரவேரற்பறை ஆகிய இடங்களில் படத்தில் காட்டியது போல் ஒரு கண்ணாடி டம்பளர் அல்லது கண்ணாடி பவுலில் ஒரு ருபாய் 5 ருபாய் நாணயங்களை போட்டு தண்ணீர் ஊற்றி அதில் மஞ்சள் நிற பூவை போட்டு வைத்து தினமும் பார்த்து வந்தால் பணவரவு மிகுதியாகும் ஆபிஸ் கடை வைத்துள்ளவர்கள் கல்லா பெட்டியின் மேல் வைத்துக்கொள்ளவும் தினமும் பூவையும் தண்ணீரையும் மாற்றவும்

செவ்வாய், 2 ஏப்ரல், 2019

லட்சுமி கடாட்சம்

லட்சுமி கடாட்சம்

01. காலை எழுந்தவுடன் பசுவின் முகத்தில் விழிப்பது அல்லது பசு வடிவ பொம்மைகளை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அதன் முகத்தில் விழிக்கலாம்.

02. வெள்ளிக்கிழமை தோறும் ஐந்துமுக விளக்கேற்றுவது உகந்தது.

03. பவுர்ணமி அன்று விஷ்ணுவிற்கு பழ வகைகள் நைவேத்தியம் செய்து அதை சாப்பிடுவதும் நல்லது.

04. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பது மட்டுமல்லாமல்,

சனி, 2 மார்ச், 2019

சந்திராஷ்டமம்

சந்திராஷ்டமம்

அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

சந்திராஷ்டம் வரும் நாறில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை சாத்தி வழிப்பட்டுவிட்டு வாருங்கள்.

பிரச்சனைகள் படிப்படியாக மறைவதை காணலாம்.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்

“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.

சனிக்கிழமைகளில் சதுர்த்தி

மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

திங்கள், 25 பிப்ரவரி, 2019

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும்.

இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.

திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் அவதரித்தார்

உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.

மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.

யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி

பதினாறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார்.

நாங்குநேரி வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார்.

வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள்.

அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.

வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

சிவ அஷ்டோத்திர சத நாமாவளி

01. ஓம் சிவாய நமஹ
02. ஓம் மஹேச்வராய நமஹ
03. ஓம் சம்பவே நமஹ
04. ஓம் பினாகிநே நமஹ
05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ
07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
08. ஓம் கபர்தினே நமஹ
09. ஓம் நீலலோஹிதாய நமஹ
10. ஓம் சங்கராய நமஹ

11. ஓம் சூலபாணயே நமஹ
12. ஓம் கட்வாங்கிநே நமஹ
13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
18. ஓம் பவாய நமஹ
19. ஓம் சர்வாய நமஹ
20. ஓம் திரிலோகேசாய நமஹ

21. ஓம் சிதிகண்டாய நமஹ
22. ஓம் சிவாப்ரியாய நமஹ
23. ஓம் உக்ராய நமஹ
24. ஓம் கபாலிநே நமஹ
25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
27. ஓம் கங்காதராய நமஹ
28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
29. ஓம் காலகாளாய நமஹ
30. ஓம் க்ருபாநிதயே நமஹ

31. ஓம் பீமாய நமஹ
32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
33. ஓம் ம்ருகபாணயே நமஹ
34. ஓம் ஜடாதராய நமஹ
35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

36. ஓம் கவசிநே நமஹ
37. ஓம் கடோராய நமஹ
38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
43. ஓம் ஸ்வரமயாய நமஹ
44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
45. ஓம் அநீச்வராய நமஹ

46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
47. ஓம் பரமாத்மநே நமஹ
48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
49. ஓம் ஹவிஷே நமஹ
50. ஓம் யக்ஞ மயாய நமஹ

51. ஓம் ஸோமாய நமஹ
52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
53. ஓம் ஸதாசிவாய நமஹ
54. ஓம் விச்வேச்வராய நமஹ
55. ஓம் வீரபத்ராய நமஹ

56. ஓம் கணநாதாய நமஹ
57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
59. ஓம் துர்தர்ஷாய நமஹ
60. ஓம் கிரீசாய நமஹ

61. ஓம் கிரிசாய நமஹ
62. ஓம் அநகாய நமஹ
63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
64. ஓம் பர்க்காய நமஹ
65. ஓம் கிரிதன்வநே நமஹ

66. ஓம் கிரிப்ரியாய நமஹ
67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
68. ஓம் புராராதயே நமஹ
69. ஓம் மகவதே நமஹ
70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
74. ஓம் ஜகத் குரவே நமஹ
75. ஓம் வ்யோமகேசாய நமஹ

76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
78. ஓம் ருத்ராய நமஹ
79. ஓம் பூதபூதயே நமஹ
80. ஓம் ஸ்தாணவே நமஹ

81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
82. ஓம் திகம்பராய நமஹ
83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
84. ஓம் அநேகாத்மநே நமஹ
85. ஓம் ஸாத்விகாய நமஹ

86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
87. ஓம் சாச்வதாய நமஹ
88. ஓம் கண்டபரசவே நமஹ
89. ஓம் அஜாய நமஹ
90. ஓம் பாசவிமோசகாய நமஹ

91. ஓம் ம்ருடாய நமஹ
92. ஓம் பசுபதயே நமஹ
93. ஓம் தேவாய நமஹ
94. ஓம் மஹாதேவாய நமஹ
95. ஓம் அவ்யயாயே நமஹ

96. ஓம் ஹரயே நமஹ
97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
98. ஓம் அவ்யக்ராய நமஹ
99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

101. ஓம் ஹராய நமஹ
102. ஓம் அவ்யக்தாய நமஹ
103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

106. ஓம் அனந்தாய நமஹ
107. ஓம் தாரகாய நமஹ
108. ஓம் பரமேச்வராய நமஹ


பார்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

முடிதும்பை

முடிதும்பை Leucas Aspera

25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.

10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.

தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.

தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.

வீட்டருகே எளிதாக கிடைக்கும் தும்பை இலையில் துவையல் செய்வது எப்படி? மூலிகை சமையல் !!

தேவையானவை:
தும்பை இலை – ஒரு கப்,
இஞ்சி – ஒரு துண்டு,
உளுத்தம் பருப்பு கால் கப்,
காய்ந்த மிளகாய் 4, புளி
சிறிதளவு, உப்பு தேவையான அளவு,
பெருங்காயம் கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஒரு வாணிலியில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, தும்பை இலை இரண்டையும் தனித்தனியே வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி, நறுக்கிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளங்கள்.
பின்னர் அதில் வறுத்த தும்பை இலை, உளுத்தம் பருப்பு அரைத்து விடவும்.

சிறிது எண்ணெயில் கடுகு தாளித்தல தும்பை துவையல் ரெடி.
இதனை சூடாக பரிமாறவும்.

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

விநாயகரை ஒரு முறையும்,

சூரிய பகவானை இரண்டு முறையும்,

ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்.

மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்.

விஷணுவை நான்கு முறையும்,

தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,

லட்சுமி தாயாரை ஐந்து முறையும்,

அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.

ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.

வியாழன், 24 ஜனவரி, 2019

நவகிரக சந்திரன் வழிபடுவது

நவகிரக சந்திரன் வழிபடுவது

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்,

கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்

சந்திரன் தேய்பிறையாக அமைந்தாலும், நீசம், பகை பெற்று இருந்தாலும்,

ஜாதகர்களுக்கு மனநிலை பாதிக்கும். தூக்கம் கெடும். பயம் உண்டாகும். பெண்களால் சங்கடம் ஏற்படும்.

சந்திர பலம் குறைந்தவர்கள் வெள்ளை அல்லி மலர்களைச் சந்திரனுக்கு அணி வித்து வணங்கலாம்.

வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவிக்கலாம். நெய் கலந்த பால் பாயசம் நைவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் அளிக்கலாம்.

திருப்பதி மலையின் மேல் உள்ள பாபநாச (சந்திர தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனைத் தரிசிப்பது நல்லது.

வழிபாட்டு மந்திரம்

ததிசங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் முகுடபூஷணம்

நிறம்: வெள்ளை

தானியம்: அரிசி

வாகனம்: வெள்ளை குதிரை

பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

நவகிரக சூரியன் வழிபடுவது

நவகிரக சூரியன் வழிபடுவது

சூரியன் - 10 சுற்றுகள்

தானியம்: கோதுமை

வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்

பகை, நீசம் பெற்றிருந்தாலோ,

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்,

சிம்ம ராசி,

கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்

உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் தகுதி உண்டாகும்.

உடலில் உஷ்ணாதிக்கம் அதிகம் இருக்கும். கம்பீரமான தோற்றம் அமையும். காடு, மலை, வனாந்தரங்களில் வசிக்கப் பிடிக்கும். சூடான உணவை ரசித்து உண்பீர்கள்.

ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள்

சூரியனின் கிழமை ஞாயிறு. அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பரிகாரம் செய்து கொள்ளலாம். 11 மணி முதல் 12 மணிக்குள் குரு ஹோரையிலும் செய்யலாம்.

சூரியனுக்கு செந்தாமரை மலர் சூட்டி, செந்நிறப் பட்டு ஆடை அணிவித்து, அர்ச்சனை செய்யலாம். கோதுமை தானம் கொடுப்பது நல்லது.

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

புதன், 9 ஜனவரி, 2019

0170. தொழிலில் இலாபம் அடைய

தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும் ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி வரும் வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி, குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும் அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி நிறைவு செய்யவும்.

0169. சீதா ஜெயந்தி

0169. சீதா ஜெயந்தி

சீதா தேவி தோன்றிய நாளான பங்குனி நவமி அன்றே , "சீதா ஜெயந்தி" என்றும் "சீதா நவமி" என்றும் பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர்.

'நான் என்னுடைய கணவருடன்தான் இருப்பேன். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் ஆதரவாக இருந்து ஒன்றாக வாழ்வோம், அந்நியோன்யமாக இருப்போம்' என்று ஒரு பெண் உறுதி மேற்கொள்ளவே இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில் திருமணமான பெண்கள் தங்களின் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான , ஒற்றுமையான வாழ்விற்காகவும் சீதா தேவியை வேண்டி விரதம் இருந்தால் , இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. திருமணம் தள்ளிப்போகும் கன்னிப்பெண்களும் இவ்விரதத்தை மேற்கொண்டால், ராமபிரானைப் போல அழகும் பண்பும் நிறைந்த கணவன் கிடைப்பான்.

விடியற்காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் பூஜையறையை சுத்தம் செய்யவேண்டும்.ராமர், சீதா, லட்சுமணன் மற்றும் அனுமன் சேர்ந்து இருக்கும் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்க வேண்டும்.விளக்கை ஏற்றி, சீதா சஹஸ்ரநாமத்தை கூறி மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

அன்னைக்குப் பிரசாதமாக பழம், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் போன்றவற்றை படைத்து வழிபடலாம்.பின்பு சீதா தேவியின் வாழ்க்கைக் கதையை பக்தியோடு படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

வீட்டில் ராமாயணம் படிக்க

0168. சீதா கல்யாணம்

0168. சீதா கல்யாணம்

வால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீ மத் ராமாயணத்திலுள்ள ஒவ்வொரு காண்டத்திலும், சிற்சில கட்டங்களை பாராயணம் செய்தால் அந்தச் செயல் சுலபமாக நிறைவேறும் என்று கூறப்பட்டுள்ளது.

திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்க

பால காண்டம் சீதா கல்யாணம் பாராயணம் காலை, மாலை

சீதா கல்யாணம்

1

வானவர் பெருமானும் மனநினைவினன் ஆகக்
’தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை,
பூ, நகு மணி, வாசம் புனைநகர் அணிவீர்’ என்று
ஆனையின் மிசை ஆணை அணிமுரசு அறைவித்தான்

வானவர்களுக்கெல்லாம் தலைவனாகிய ராமன் சீதையைத் தன் மனத்தில் நினைத்திருக்க, அதே நேரம் அந்தச் சீதையின் தகப்பன் ஜனகன் என்ன செய்தான் தெரியுமா?

‘தேன் உண்ணும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்ட சீதைக்கு, நாளை திருமணம்’ என்று அறிவித்தான், ‘ஆகவே, இந்த அழகிய மிதிலா நகரத்தைப் பூக்கள், சிறந்த மணிகள், ஆடைகளைக் கொண்டு மேலும் அலங்கரியுங்கள்’ என தன் மக்களுக்கு ஆணையிட்டான்.

உடனே, வள்ளுவர்கள் யானைமேல் ஒரு பெரிய முரசைத் தூக்கி வைத்தார்கள், அதைப் பலமாக ஒலித்தபடி அந்நகரின் தெருக்களில் சென்று, அரசனின் கட்டளையைச் சொன்னார்கள்.

2

உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண்ணுறல் அரிது என்றும் கருதுதல் அரிதம்மா,
எண்ணுறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண்ணுறு திருநாளே ஒத்தது அம் மணநாளே

உடனடியாக, மிதிலை நகரம் அருமையாக அலங்கரிக்கப்பட்டது. அப்போது அந்த ஊரில் நிலவிய செல்வச் செழிப்பை, யாரும் ஓர் இடத்தில் பார்த்திருக்கவே முடியாது, அவ்வளவு ஏன், உலகில் இத்துணை செல்வம் இருக்குமா என்று மனத்தால் கற்பனை செய்வதுகூட சிரமம்.

எல்லாராலும் மதிக்கப்படுகின்ற ஒளியைக் கொண்ட விண்ணுலகத்தின் தலைவனாகிய இந்திரன் முடி சூடும் நாள் மிகச் சிறப்பானது என்று சொல்வார்கள். உண்மையில் அது எப்படிப்பட்டது என்று நமக்குத் தெரியாது, மண்ணில் உள்ள நமக்கெல்லாம் அந்த நாளைக் காண்பிப்பதுபோல் அமைந்தது, சீதையும் ராமனும் மாலை சூடும் இந்த மண நாள்தான்.

3

புயல் உள, மின் உள, பொருவின் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணிசெய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்ததே

சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தச்சனால் செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தைப்போல் அது தெரிகிறது. ஏன்?

அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களுடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.

அங்கே பெண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்களது இடையைப் பார்க்கும்போது, மின்னல்கள் உள்ளன எனலாம்.

பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்களெல்லாம் பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.

இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக அமர்ந்துள்ளனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்கிறார்கள்.

இப்படி மேகம், நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?

4

எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரசர் வெள்ளம்
குஞ்சரக் குழாத்தின் சுற்ற, கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனுவலானும் மேரு மால் வரயில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேரிடை சென்று சேர்ந்தான்

எறிகின்ற ஆயுதங்களைக் கொண்ட பல சிறந்த அரசர்கள், குறை ஏதும் இல்லாமல் இந்தப் பூலோகத்தை ஆளுகிறார்கள். அவர்கள் இப்போது ஒரே இடத்தில் கூடியிருக்கிறார்கள், அதைப் பார்க்கும்போது வலிமையான யானைக் கூட்டத்தைப்போல் தோன்றுகிறது. அதன் நடுவே, கொற்றவன் தசரதன் வீற்றிருக்கிறான்.

அப்போது, மாப்பிள்ளை ராமன் தேரேறி வருகிறான்! மண்டபத்தினுள் நுழைகிறான்!

பகைவர்கள்மீது கோபத்தைச் செலுத்துகிற வில்லைப் பயன்படுத்துவதில் சிறந்தவன் அந்த ராமன், இப்போது திருமண அலங்காரங்களுடன் அவனைப் பார்க்கும்போது, மேரு மலையில் சூரியன் உதித்ததுபோல் இருக்கிறது!

5

சிலை உடைக் கயல் வாள் திங்கள் ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலையிடை முகிழ்ப்பத் தேர்மேல் முன் திசை முளைத்தது அன்னாள்,
அலைகடல் பிறந்து பின்னை அவனியில் தோன்றி மீள,
மலையிடை உதிக்கின்றாள்போல் மண்டபம் அதனில் வந்தாள்

ராமன் மட்டுமா? சீதையும் மலையில் உதிக்கிற பிரகாசத்துடன்தான் வருகிறாள்!

சீதையின் உடல், சிவந்த, பொன் போன்ற ஒரு பூக்கொம்பு. புருவங்கள், இரு வில்கள், அவற்றுக்குக் கீழே, கண்களாக இரண்டு கயல் மீன்கள், முகம், ஒளி நிறைந்த சந்திரனைப்போல.

இப்படிப்பட்ட சந்திரனுக்கு மத்தியில் ஒரு முல்லை அரும்பு மலர்ந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு புன்சிரிப்பு சீதையின் முகத்தில்!

முன்பு ஒருநாள், அலைகள் நிறைந்த பாற்கடலில் தோன்றிய திருமகள் அவள், இப்போது பூமியில் சீதையாகப் பிறந்திருக்கிறாள், தேர் மேல் ஏறி, கிழக்குத் திசையில் உள்ள மண்டபத்தில் வந்தாள்!

6

இந்திரன் சசியொடும் எய்தினான், இளம்
சந்திரன் மௌலியும் தன் தையலாளுடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாளுடன்
அந்தரம் புகுந்தனன் அழகு காணவே!

சீதையும், ராமனும் திருமணம் செய்துகொள்கிற அழகைக் காண்பதற்காக வந்த விருந்தினர்களின் பட்டியல் மிகப் பெரியது. அதில் முக்கியமான மூவரைமட்டும் இங்கே பார்க்கலாம்!

முதலில், இந்திரன் தன்னுடைய மனைவியாகிய இந்திராணியுடன் வந்தான்!

அடுத்து, தலையில் பிறைச் சந்திரனைச் சூடிய சிவபெருமான், தன் மனைவி உமையுடன் வந்தான்!

பின்னர், தாமரை மலரில் வாழும் பிரம்மன், தன் மனைவியாகிய சொல்லரசி, சரஸ்வதியுடன் வந்தான்!

7

மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்

ராமனும், சீதையும் திருமண மேடையில் ஏறிவிட்டார்கள்!

அவனோ, வெற்றியையும் பெருமையையும் உடைய வீரன். அவளோ, அவனது அன்புக்கு உரியவள், இனிய துணையாகத் திகழும் அன்னம். இவர்கள் இருவரையும் மணக்கோலத்தில் பார்க்கும்போது, போகமும் யோகமும் ஒன்றாகச் சேர்ந்துவந்தாற்போல் இருக்கிறது!

8

கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்

சக்கரவர்த்தித் திருமகனாகிய ராமனுக்கு எதிரே வந்து நின்ற ஜனகன், அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்துகொடுத்தான்.

’பரம்பொருளாகிய திருமாலும், தாமரையில் வாழும் திருமகளையும்போல, என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!’

9

வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்,
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்

வீரனாகிய ராமன், திருமணத்துக்குரிய மந்திரங்கள் முழுவதையும் சொன்னான், சூடான நெருப்பில் நெய் ஊற்றித் திருமணத்துக்குரிய ஹோமங்களை முறைப்படி செய்து முடித்தான். தளிரைப்போல் மென்மையான பெண்ணாகிய சீதையைக் கைப்பிடித்தான்!

10

ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நான்மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல்கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டினம், ஆர்த்தன வேலை!

அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள், பலவிதமான நூல்களும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் சத்தமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!

0167. தேங்காய் மூடி விளக்கு

0167. தேங்காய் மூடி விளக்கு

எல்லா பரிகாரங்களும் செய்து விரக்தி அடைந்தவர்கள்

பெரிய அளவில் பரிகாரமோ , பூஜையோ , ஹோமமோ செய்ய
முடியாதவர்கள் அல்லது செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் , வசதி இல்லாதவர்கள்

ஞாயிறு - சூரியன் கோளையும் ,
திங்கள் - சந்திரன் கோளையும் ,
செவ்வாய் - செவ்வாய் கோளையும் ,
புதன் - புதன் கோளையும் ,
வியாழன் - குரு கோளையும் ,
வெள்ளி - சுக்கிரன் கோளையும் ,
சனி - சனி கோளையும் கிழமைகளை ஆதிக்கம் செய்கின்றன

எனவே 7 நாட்களும் ஒவ்வொரு கோளுக்கு உகந்த நாட்கள்

( ராகு , கேது கோள்கள் கிடையாது , அதனால் தினமும் ராகு காலம் , எம கண்டம் என அவற்றிக்கென நேரம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது )

வாரத்திற்கு ( 7 நாட்களுக்குள் ஒருமுறை ) ஒரு நாள் 7 விளக்கு போட்டு வர வேண்டும்

நாம செய்து கொண்டிருக்கிற தவறை நமக்கு உணர்த்தி , நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர வைப்பதற்க்காக ,ஆரம்பத்துல கொஞ்ச நாள் சோதனை ங்கற பேர் ல ரொம்ப படுத்தி எடுத்துருவார். என்ன நடந்தாலும் பொறுமையாக விடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்ட செய்வதில் தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

கெட்ட விஷயங்கள், கஷ்டங்கள் - துன்பங்கள் எல்லாமே நம்மை விட்டு விலக ஆரம்பிக்கும் , நல்ல விஷயங்கள் ஒவ்வொன்றாக கண்டிப்பா நடக்க ஆரம்பிக்கும் . நாம் எந்த நிலையில் இப்போ இருந்தாலும் , முன்னேற்றத்த நோக்கி போக ஆரம்பிப்போம். அதற்க்கு சில சிக்கல்களும் , அதை தீர்க்கும் வழி முறைகளையும் அவரே கொடுப்பார் , இதுதான் இந்த வழிபாட்டோட முதல் அறிகுறி . இந்த மாற்றம் வெளிப்படையாகவே நமக்கு தெரியும் .