வெள்ளி, 27 ஜனவரி, 2017

0100. தீபமிட்டு , தானம் செய்யது வழிபாடு

0100. தீபமிட்டு , தானம் செய்யது வழிபாடு

விருச்சிகம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு நெய் விளக்கேற்றி துவரம்பருப்பை
அளியுங்கள். 9 வாரம்.
மகரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கருப்புக் கொண்டைக் கடலையை
காணிக்கையாக செலுத்தி நெய் விளக்கேற்றுங்கள். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 26 ஜனவரி, 2017

099. ரத்த தானம்

099. ரத்த தானம்

மிதுனம் செவ்வாய்க் கிழமைகளில் இளைஞர்கள் ரத்த தானம் செய்வது
சிறந்த பரிகாரம்.
கடகம் ரத்ததானம் செய்யுங்கள்.
கன்னி இயன்றபோது ரத்ததானம் செய்யுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை இளைஞர்கள் ரத்த தானம் செய்யலாம்.
மகரம் முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

ரிஷபம் வெள்ளிக்கிழமையில் பெருமாளுக்கு வெண் தாமரையால்
அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து வழிபட
வாழ்வில் வளம் பெறும்.
குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை நவகிரக சந்நதியில் சுக்கிரனுக்கு அர்ச்சனை
செய்து மொச்சை அளியுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

097. கடன் தொல்லை நீங்க

097. கடன் தொல்லை நீங்க

வழிபாடு :

கணகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமையில் படித்தல் நன்று,
வீட்டில் லக்ஷ்மி படத்திற்கு லட்சுமி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்து
பூஜித்தால் கடன் தொல்லை நீங்கி வளம் பெறலாம்.

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்:-

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா: 1

முக்தா முஹீர்விதததீ
வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
ஸாகர ஸம்பவாயா: 2

ஆமீலிதாட்ச மதிகம்ய
முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
பூஜங்க சயாங்கனாயா 3

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
விபாதி
காமப்ரதா பகவதோபி
கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
கமலாலயாயா: 4

காலாம்புதாலி லலிதோரஸி
கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
பார்கவநந்தனாயா: 5

ப்ராப்தம் பதம் ப்ரதமத:
கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

விச்வாம ரேந்த்ர பதவீ
ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
மிந்திராயா 7

இஷ்டா விசிஷ்ட மதயோபி
யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
மம புஷ்கர விஷ்டராயா 8

தத்யாத் தயானுபவனோ
த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
நயனாம் புவாஹ: 9

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
குரோஸ்தருண்யை! 10

ஸ்ருத்யை நமோஸ்து
சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
புருஷோத்தம வல்லபாயை 11

நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
நந்தனானி
ஸாம்ராஜ்யதான
விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
கலயந்து மான்யே 16

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

ஸரஸிஜ நிலயே ஸரோஜ
ஹஸ்தே
தவல தராம்சுக
கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
ப்ரஸீத மஹ்யம் 18

திக்தஸ்திபி கனக கும்ப
முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
அம்ருதாப்தி புத்ரீம் 19

கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல்,
பணம் செலவு செய்தால் கூடாது.
இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது.
இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

096. வைகுண்ட ஏகாதசி

096. வைகுண்ட ஏகாதசி

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் :

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும்
கிடைக்கும்.
2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்
3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து
பிள்ளைகள் பெற்றான்)
5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது
6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில்
இருந்து விடுதலை பெற்றான்)
7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின்
உபதேசப்படி, விரடம் இருந்த நாள்
8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது
9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்
10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்
11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன்
தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)
12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்
13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக்
கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன்
விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)
16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த்
தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)
17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்
18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்
19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம்
இருந்த நாள்
20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்
21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்
22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள்
அகலும்
23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி
எனப்படுகின்றது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக்
கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட
ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு
வாகனங்களில் உலா வருகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும்
உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில்
வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும்
அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர்
கூட்டம் கூடும்.
இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான
தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்
2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து
விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக)
இருக்கவேண்டும்.
குளிர்ந்த நீரை குடிக்கலாம் .
ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் .
ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க
துளசியை சாப்பிடவேண்டும்.
பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது.
குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள்,
நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)
உண்ணலாம்.
4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு
சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை
ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.
கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .
5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது .
துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என
அழைக்கிறோம் .
துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக
நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல்
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில்
உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய்
ஆகியவை முக்கியமானவை.)
துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும்.
இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.
6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில்
ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி
தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து
(பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக
முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி,
பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும்
விரதமாக அமைந்து உள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் 13ம் வருசாபிஷேகம் - ஆவணி மாதம்
29ம் தேதி (14.09.2016) சித்திரை நட்சத்திரமும். புதன்கிழமை கூடிய சுப‌தின‌ம்.


மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 20 ஜூலை, 2016

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

094. சைவம் ஆலய தரிசணம் பகுதி = II

கன்னி தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பரை தரிசித்து வாருங்கள்.
கன்னி தஞ்சாவூர்-திருக்கருகாவூர் வழியில் தென்குடித்திட்டை உள்ளது.
தட்சிணாமூர்த்தி நின்ற நிலையில் ராஜகுருவாக அருள்பாலிக்கும் தலத்தை
தரிசித்து வாருங்கள்.
கன்னி காஞ்சிபுரத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஏகாம்பரேஸ்வரரையும்,
ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் பிரதோஷ நாளில் வணங்குங்கள்.
கன்னி காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசிக்கலாம்.
கன்னி திருத்தணி முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சி உச்சிபிள்ளையாரை தரிசித்து வாருங்கள்.
துலாம் செஞ்சிக்கு அருகேயுள்ள மேல்மலையனூர் அங்காள
பரமேஸ்வரியை தரிசித்து வாருங்கள்.
துலாம் திருச்சிக்கு அருகில் உள்ள சமயபுரம் மாரியம்மன் ஆலயத்திற்குச்
சென்று தரிசிக்கலாம்.
துலாம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தேப்பெருமாநல்லூர்
சிவாலயத்திற்குள் அருளும் அன்னதான தட்சிணாமூர்த்தியை தரிசித்து
வாருங்கள்.
துலாம் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் சென்று மதுரகாளியம்மனை
தரிசித்து குங்குமார்ச்சனை
செய்துகொள்வதும், அம்மனின் அருட்பிரசாதமான குங்குமத்தினை தினமும்
நெற்றியில் இட்டுக்கொள்வதும் நல்லது.
துலாம் வேதாரண்யம் அருகேயுள்ள தகட்டூர் காசி பைரவரை அஷ்டமி திதி
நாள் அல்லது சனிக்கிழமையில் சென்று தரிசனம் செய்யுங்கள்.
துலாம் தம்பதியராக திருக்கடையூர் சென்று அபிராமி, அமிர்தகடேஸ்வரரை
தரிசித்து வரவும்.
விருச்சிகம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று வாருங்கள்.
விருச்சிகம் திருச்சி, பெரம்பலூருக்கு அருகேயுள்ள சிறுவாச்சூர் அம்மனை
தரிசித்துவிட்டு வாருங்கள்.
விருச்சிகம் பூந்தமல்லியில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 40 கி.மீ.
தொலைவில் உள்ளது இலம்பையங்கோட்டூர்.
இத்தலத்தில் கால்களை சம்மணமிட்டு அமர்ந்து மார்புக்கு அருகே
சின்முத்திரையைக் காட்டும் வித்தியாச வடிவில் தட்சிணாமூர்த்தியை
தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் அறுபடைவீடுகளுக்கும் சென்று வருவது நன்மை தரும்.
விருச்சிகம் திருத்தணி தணிகைவேலனை தரிசிக்க நன்மை உண்டாகும்.
விருச்சிகம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
விருச்சிகம் பழனி முருகனை வணங்கி வர குடும்ப பிரச்னை தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.
தொழில் வியாபாரம் சிறக்கும். 
விருச்சிகம் காரைக்காலுக்கு அருகிலுள்ள திருநள்ளாறில் அருள்பாலிக்கும்
ஸ்ரீதர்ப்பாரேண்யஸ்வரரையும், ஸ்ரீசனிபகவானையும் ஏதேனும் ஒரு
சனிக்கிழமை அல்லது வியாழக் கிழமையில் வணங்குங்கள்.
தனுசு சென்னை-திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு முன்
தட்சிணாமூர்த்திக்கு தனிக் கோயில் உள்ளது.
சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகோடு அருள் ததும்பும்
திருமுகத்தோடு வீற்றிருக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.  
தனுசு பிள்ளையார்பட்டி சென்று கற்பக விநாயகரை தரிசிப்பதால் நலம்
பெறுவீர்கள்.
தனுசு திருவள்ளூருக்கு அருகேயுள்ள திருவாலங்காடு தலத்தில் அருளும்
நடராஜரை திருவாதிரை நட்சத்திர நாளில் நெய் தீபமேற்றி
வணங்குங்கள்.
மகரம் குடும்பத்தினருடன் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று
அம்பிகையை தரிசிப்பதால் சிரமங்கள் விலகி நன்மை காண்பீர்கள்.
மகரம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்து வாருங்கள்.
மகரம் தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு பஞ்சநதீஸ்வரர்
திருக்கோயிலில் அருள்புரியும் தட்சிணாமூர்த்தி திருவடியின் கீழ் ஆமையுடன்
திருக்காட்சியளிக்கிறார்.
இவரை இயன்றபோதெல்லாம் தரிசித்து வாருங்கள்.
மகரம் வேலூருக்கு அருகேயுள்ள சேண்பாக்கம் தலத்தில் அருளும் விநாயகரை
சதுர்த்தி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள்.
மகரம் சென்னைக்கு அருகில் உள்ள திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்து
வருவது நன்மை பயக்கும்.
மகரம் தஞ்சாவூர் பிரகதீஸ்வரரையும் அங்குள்ள வாராஹியையும் தரிசித்து
வாருங்கள்.
கும்பம் திருநள்ளாறு சென்று வரவும்.
கும்பம் குருபகவான் தன் மகன் கசனுக்காக தவம் புரிந்த தலம்,
குருவித்துறை.
மதுரை பேருந்து நிலையத்திலிருந்து குருவித்துறைக்கு செல்ல
பேருந்துகள் உள்ளன.
இத்தலத்திற்கு சென்று தரிசித்து வாருங்கள்.
கும்பம் தஞ்சை பெரிய கோயில் வாராஹிக்கு அபிஷேக, ஆராதனைகள்
செய்ய எடுத்த காரியம் தடையின்றி நிறைவேறும்.
கும்பம் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திருக்கண்டியூரில் அருள்பாலிக்கும்
பிரம்மசிரகண்டீஸ்வரரை எள் தீபமேற்றி வணங்குங்கள்.
கும்பம் அபிதகுசலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வர ஸ்வாமிக்கு
அபிஷேக ஆராதனை செய்து வழிபடலாம்.
மீனம் சிதம்பரம் நடராஜரை தரிசித்து வாருங்கள்.
மீனம் திருத்தணி முருகனை சஷ்டி திதி நாளில் சென்று வணங்குங்கள்.
மீனம் திருச்செந்தூர் சென்று செந்தில் ஆண்டவனை வழிபடலாம்.
மீனம் சென்னை பாடியில் உள்ளது திருவலிதாயம் திருக்கோயில்.
மிகவும் தொன்மையான இத்தலத்தில் வீராசன கோலத்தில் தட்சிணாமூர்த்தி
அருள்கிறார்.
இயன்ற போதெல்லாம் சென்று வாருங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 14 ஜூன், 2016

093. வைணவம் வழிபாடு பகுதி = II

093. வைணவம் வழிபாடு பகுதி = II

துலாம் உலகளந்த பெருமாளை வணங்கி வாருங்கள்.5 வாரம்
துலாம் தந்வந்திரி வழிபாடு உடல்நலம் காக்கும்.
துலாம் பெருமாளை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
துலாம் ஸ்ரீ ராதாகிருஷ்ணரை வழிபட்டு வரவும்.5 வாரம்
துலாம் மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்னை தீரும்.
மன நிம்மதி கிடைக்கும்.6 வாரம்.
துலாம் ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும் 8 வாரம்.
விருச்சிகம் அன்னை வாராஹியை வழிபடவும்.
விருச்சிகம் சங்கரநாராயணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
விருச்சிகம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
விருச்சிகம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு மஹாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம். 6 வாரம்
தனுசு பெருமாள் வழிபாடு உகந்தது. 5 வாரம்.
தனுசு ஹயக்ரீவரை வணங்கி வாருங்கள்.5 வாரம்.
தனுசு ஸ்ரீலக்ஷ்மிநாராயணனை வணங்கி வாருங்கள்.6 வாரம்.
தனுசு லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
தனுசு காமதேனு வழிபாடு கவலையைத் தீர்க்கும்.
தனுசு ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
மகரம் திருவேங்கடவனை வழிபட்டு வரவும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ ரங்கநாதப் பெருமாளை வழிபடுவது நல்லது. 5 வாரம்
மகரம் ஸ்ரீ ராமரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் நாராயணனை வணங்கி வர நன்மைகள் பெருகும்.5 வாரம்
மகரம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்
மகரம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மகரம் சஞ்சீவிராயனை வணங்கி வரவும்.8 வாரம்
மகரம் ஆஞ்சநேயரை வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.
மனக் குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும். 
கும்பம் குருவாயூரப்பனை வணங்கி வாருங்கள்.5 வாரம்
கும்பம் மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச்
சேர்த்துக் கொள்ளலாம். 5 வாரம்
கும்பம் ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும்.5 வாரம்.
கும்பம் பள்ளிகொண்ட பெருமாளை வணங்கி வரவும்.5 வாரம்.
கும்பம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
கும்பம் மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.6 வாரம்.
மீனம் பெருமாளை வழிபட்டு வரவும். 5 வாரம்
மீனம் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வரவும். 6 வாரம்.
மீனம் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைச் சேர்த்துக்
கொள்ளலாம்.5 வாரம்
மீனம் கருடாழ்வாரை வணங்கி வரவும்.4 (OR) 7 வாரம்.
மீனம் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வரவும். 5 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 28 ஏப்ரல், 2016

092. நவகிரக வழிபாடு

092. நவகிரக வழிபாடு

மேஷம் சூரியநாராயணனை வணங்கி வாருங்கள். 7 வாரம்.
மேஷம் குரு சிம்ம ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கின்றார்
முருகப்பெருமான் வழிபாடு உங்கள் முன்னேற்றத்திற்கு வித்திடும்.
6 வாரம். 
மேஷம் சனீஸ்வரர் வழிபாடு, சங்கடம் தீர்க்கும், 8 வாரம்.
மேஷம் அஷ்டமத்துச் சனிக்கு சனிக்கிழமை தோறும், சனிக்கவசம் பாடி
சனி பகவானை வழிபட்டால் காரியத் தடைகள் அகலும்.
ரிஷபம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
ரிஷபம் சனிக்கிழமைதோறும் மல்லிகை மலரை அருகிலிருக்கும்
நவகிரகங்களுக்கு அர்ப்பணிக்கவும்.
ரிஷபம் சனிக்கிழமை நவகிரகங்களைச் சுற்றி நல்லெண்ணெய் விளக்கேற்ற
வேண்டும். 
ரிஷபம் ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து சனி கவசம் பாடி,
சனி பகவானை வழிபடுவதோடு எள் தீபம் ஏற்றுவதும் நன்மை தரும்.
மிதுனம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
மிதுனம் புதன் கிழமையில் நவகிரகத்தில் புதனை நெய்தீபம் ஏற்றி வணங்க
எல்லா நன்மைகளும் உண்டாகும்.
கல்வியில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோவிலுக்கு சென்று நெய்
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
மிதுனம் நவகிரக சந்நதியில் துவரம் பருப்பு அளியுங்கள். 
கடகம் 2-ல் குரு இருப்பதால் நடராஜப் பெருமான் வழிபாடு
நன்மையை வழங்கும்.
அதிசார குருவின் ஆதிக்க காலத்தில் குரு வழிபாட்டை
மேற்கொள்ளுங்கள்.
கடகம் புதன்தோறும் அருகிலிருக்கும் நவகிரக கோயிலுக்கு சென்று நெய்தீபம்
ஏற்றி அர்ச்சனை செய்யவும்.
சிம்மம் நவகிரக வழிபாடு செய்வது நல்லது.9 வாரம்.
சிம்மம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில்
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
கன்னி குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
கன்னி சனிபகவானை வழிபட்டு வரவும். 8 வாரம்.
துலாம் வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து சுக்கிரபகவானை வணங்கி
மொச்சை சுண்டல் நைவேத்தியம் செய்ய செல்வம் சேரும்.
வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை மகாலட்சுமியைத் துதித்து நவகிரக சந்நதியில் உள்ள
சுக்கிரனுக்கு மொச்சை அளியுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்கிழமையில் விரதம் இருந்து மாலையில் சிவன்,
நவகிரகங்களை வணங்கி செவ்வாய் பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு
வர எதிர்ப்புகள் விலகும்.
பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.
விருச்சிகம் வியாழன் தோறும் நவகிரஹ குருபகவானுக்கு விளக்கேற்றி
வழிபடவும்.
விருச்சிகம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
விருச்சிகம் பிரதி சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்முடிச்சிட்ட விளக்கு
ஏற்றி வைத்து வழிபடலாம்.
தனுசு சூரியபகவானை வழிபட்டு வரவும். 7 வாரம்.
தனுசு திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசித்து வாருங்கள்.
தனுசு அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவகிரக குருவை
வணங்கி நெய்தீபம் ஏற்றி வலம் வர மனம் தெளிவடையும்.
தனுசு புதன், சனிக்கு ப்ரீதி செய்வது நல்லது.
தனுசு சனிப் பிரீதி செய்யவும்.
தனுசு வியாழன்தோறும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
3 வாரம்.
தனுசு சனிக்கிழமை நவகிரகம் சுற்றி  அனுமனைத் துதித்து கருப்பு
நிறப்பொருட்களை தானம் கொடுங்கள். 
தனுசு சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு நல்லெண்ணை
தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் 
நிம்மதியை தரும். 8 வாரம்.
மகரம் வியாழனன்று நவகிரகத்தைச் சுற்றுங்கள்.9 வாரம்.
மகரம் சனிபகவானை வழிபட்டு வரவும்.8 வாரம்.
கும்பம் சனிபகவானை வழிபட்டு வரவும்.
கும்பம் அருகிலிருக்கும் கோயிலிலுள்ள நவகிரங்களுக்கு அர்ச்சனை
செய்யுங்கள்.  
மீனம் வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோயிலுக்கு
சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். 3 வாரம்.
மீனம் கருப்புக் கொண்டைக் கடலையை சிறிதளவு வெல்லத்துடன் நவகிரக
சந்நதியில் வியாழக்கிழமை கொடுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 25 ஏப்ரல், 2016

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

091. பாராயணம் செய்ய,தீபம் வழிபாடு

மேஷம் செவ்வாய்க் கிழமையில் முருகனுக்கு தீபம் ஏற்றி வணங்கி
கந்தர் சஷ்டி கவசம் படிக்க எல்லா பிரச்னைகளும் தீரும்.
காரிய வெற்றி உண்டாகும்.9 வாரம்.
மேஷம் சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை ஆதித்ய ஹிருதயம்
சொல்லி, நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு சகல
சவுபாக்கியங்களும் உண்டாகும்.7 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 29 மார்ச், 2016

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

090. பிரதட்சிணம்,விநியோகம் செய்க

ரிஷபம் வியாழக்கிழமை நவகிரகத்தைச் சுற்றி இனிப்பு விநியோகம்
செய்யுங்கள்.
மீனம் வெள்ளிக்கிழமையன்று நவகிரகத்தைச் சுற்றி மொச்சையைக்
காணிக்கையாக்குங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

089. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = II

ஒவ்வொரு தடவை மந்திரம் சொல்லும் போதும் ஒரு சிகப்பு அரலிப்பூ
போட்டு வழிபட வேண்டும்.
தூப தீபம் காட்டி பூசையை முடிக்கவும்.
பின்னர் ராகு, கேதுக்களே உங்களினால் எனக்குண்டாண சகல
தோசங்களும் நீங்கி நான் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ
நீங்கள் அருள் புரிய வேண்டும் என வேண்டி பூசையை நிறைவு
செய்ய வேண்டும்.
9 நாட்கள் இவ்வாறு பூசை செய்த பின் 10ம் நாள் அரிசி, பருப்பு,
தேங்காய், காய் கனிகள் (vetablels and Friuts) உடன் உரிய
தட்சனை வைத்து ஒரு பிராமணரிற்கு தானம் கொடுக்கவும்.
(அப்படி முடியாத பட்சத்தில் பூசை செய்த பொருட்களை பிள்ளையார்
கோவிலில் வைத்து விட்டு தானத்தை ஒரு பிராமணரிற்கு கொடுக்கவும்.)
பின்பு பிள்ளையாரிற்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்யவும்.
நான்கு சன்னியாசிகளிற்கு உரிய தட்சணையுடன் உணவளிக்கவும்.
இந்த பரிகார பூசை ஆரம்பிப்பதற்கு முன் ஒவ்வொரு நாளும் முதலில்
வினாயகர் பூசை செய்ய வேண்டும்.
பஞ்ச முக தீபம் நல்லெண்ணை ஊற்றி ஏற்றி வைத்து வினாயகரிற்கு மலர்
தூவி, தூப, தீப, நைவேத்திய, ஆராதனை செய்து பின் ஓம் வக்ரதுண்ட
மஹாகாய சூர்ய கோடி சமப்பிரப நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேசு
சர்வதா (16 தடவை) என்று வினாயகரை வழிபட்ட பின்னரே சர்ப்ப தோச
பரிகார பூசையை செய்ய வேண்டும்.

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தின்

(I) திருநெல்வேலி மாவட்டத்தின் சங்கரன் கோயில் சிவனும், பெருமாளும்
ஒருவராய் இணைந்திருக்கும் கோயில் என்பதால் இந்தக் கோயிலில் உள்ள
மூலவர் சங்கர நாராயணர் ஆகும்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தச் சிலையின் திருவடிகளை கதிரவன்
தழுவுவதாகக் கூறப்படுகிறது.
சிவனுக்கும் பார்வதிக்கும் தனித் தனி சந்நிதிகளும் இங்குண்டு.
இந்தக் கோயிலில் நெல்லையிலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது.
இங்கே உள்ள பிரஹாரத்தின் ஒரு பக்கமாய் புற்று மண் பிரசாதம்
சேமிக்கப் படுகிறது.
இந்தப் புற்று மண்ணை நீரில் குழைத்துப் பற்றுப் போல் நெற்றியில் இட்டுக்
கொள்வார்கள்.
கெடுபலன்களும் குறையும் என்று சொல்வார்கள்.
கோயில் சந்நிதியில் நாகத்தின் தலை உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால் ஊற்றி 
அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.

(II) திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரம் சங்கரன் கோயில்
கோயில் சந்நிதியில் நாகத்தின் உடம்பு உள்ளது.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
அம்பாசமுத்திரத்திலேயே பரிகார பொருட்கள் வாங்கிக்கொள்ளவும்.
கோயில் அருகில் கடையில்லை.

(III) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோயில் என்ற ஊருக்கு
பெயர்க் காரணமாய் திகழ்வது அருள்மிகு நாகராஜா திருக்கோயில்.
நாகராஜாவிற்கு வழிபாடுகள் நடத்தியப் பிறகு புற்று மண் பிரசாதமாக
வழங்கப்படுகிறது. 
இக்கோயிலிற்கு வெளியே அரச, வேம்பு மரங்களின் இணை நிழலில்
விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
இவரைச் சுற்றி வேலி போல நாகராஜர் சிலைகள் உள்ளன.
நாகத்தின் மீது வாழை பழம் வைத்து, மஞ்சளைத் தூவியும், பால்
ஊற்றி அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வணங்குகின்றனர்.
கோயில் அருகில் கடை உள்ளது.
நாகராஜனை வணங்குகின்றவர்கள் நோய் நொடியின்றி நலமெல்லாம்
பெற்று வாழ்வர் என்பதும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில
சரும நோய்கள் கூட நாகராஜரை தொடர்ந்து வணங்குவதால் மறைந்து
போகும் என்றும் இத்திருக்கோயில் விவர ஏடு தெரிவிக்கிறது. 
வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நாக தோஷங்களைப் போக்கும்
முக்கியத் தலமாகவும் இத்திருத்தலம் திகழ்கிறது.
கோயில் சந்நிதியில் நாகத்தின் வால் உள்ளது.

068. எந்த கணத்தில் பூஜை செய்யலாம் இதைப் பார்த்து ஏத்த கணத்தில்
பூஜை செய்யவும்.
இந்தத் தோசம் விலக ராகு காலத்தில் இந்த பரிகார பூஜை செய்யவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

088. ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் பகுதி = I

ஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்
(குரு), வெள்ளி (சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள்.
ராகு, கேது ஆகிய இரண்டும் சாயா (நிழல்) கிரகங்கள்.
ஒருவரது முன்ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு, கேது
வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
ஒருவரது கர்ம வினைக்கு ஏற்பவே ஜாதகக் கட்டத்தில் ராகு, கேது
இடம்பெறும்.
இருவரும் திசைகள் மற்றும் பிற கிரக தசையின் புத்திகளில் யோக, அவ
யோகங்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள்.
ராகு, கேதுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு.
இருக்கும் இடத்தை பொருத்து யோக, அவயோகங்களை தருவார்கள்.
மிகப் பெரிய ராஜ யோகத்தை அளிக்கும் வல்லமை இந்த 2 கிரகங்களுக்கும்
உண்டு.
பொதுவாக லக்னத்துக்கு 3, 5, 6, 9, 11 போன்ற ஸ்தானங்களில் உள்ள ராகு,
கேது திடீர் தனயோகம், எதிர்பாராத வளர்ச்சி, திடீர் அதிர்ஷ்டங்கள்,
யோகங்கள் போன்றவற்றை தருவார்கள்.
லக்னத்துக்கு 9ம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகு
அல்லது கேது இருந்தால் ஏட்டுக் கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும்
பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும் புத்தி
சாதுர்யமும் வெளிப்படும்.
கல்வி, அறிவு தருவதில் ராகு கேது மிக முக்கியமானவர்கள்.
மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள்
அவசியம்.
திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் ராகு, கேதுக்கள்
முக்கிய பங்கு வகிக்கின்றன.
பொருத்தம் பார்க்கும்போது ராகு கேது அமைப்பை பார்த்து முடிவு செய்வது
மிக அவசியம்.
10ம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற
முடியும்.
செவ்வாயுடன் ராகு சேர்ந்து இருந்தால் பல கலைகளில் வித்தகராகலாம்.
சனியும் ராகுவும் சேர்ந்து இருந்தால் கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங்,
அனிமேஷன் போன்ற துறைகள் அமையும்.
லக்னத்துக்கு 12ல் கேது இருந்தால் மோட்ச அம்சம் என்பார்கள்.
ஒருவரது ஜாதகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய
ராசிகளில் ராகு இருந்தால் உயர்தர ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
ஒருவர் கோடீஸ்வர பட்டம் பெற்று யோக வாழ்க்கை வாழ குரு, கேது
சேர்க்கை மிக முக்கிய அம்சம்.
ராகு திசை, கேது திசை நடப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.
கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் பரிகார பூஜை செய்யலாம்.

ராகு கேதுக்களிற்கான சர்ப்ப தோச பரிகாரம் :-

ராகு ராகுவின் அருள் பெற துர்க்கை அம்மன், கருமாரி அம்மன் ஆகிய
தெய்வங்களை வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (வடக்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
விஷ்ணு துர்க்கை வழிபாடு பல தடைகளை நீக்கும்.
கேது கேதுவின் அருள் பெற விநாயகர், சித்ரகுப்தர் ஆகிய தெய்வங்களை
வழிபடலாம்.
நவதிருப்பதிகளில் தொலைவில்லி மங்கலம் (தெற்கு கோவில்) பரிகார
ஸ்தலமாகும்.
சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு அபிஷேக, ஆராதனைகள்,
அர்ச்சனை செய்து வழிபடலாம்.
கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்புமிக்கதாகும்.
மாரியம்மன் வழிபாடு, புற்றுக்கு பால்வைத்து வழிபாடு செய்து வரவும்
சர்ப்ப தோசம் நீங்கும்.
மாதசிவராத்திரி நாட்களிலும், மகா சிவராத்திரியிலும் முறைப்படி
நோன்பு நோற்று சிவவழிபாடு செய்து வர சர்ப்ப தோசம் நீங்கும்.
குளக்கரையில் வேப்பமரம், அரசமரம் இணைந்துள்ள இடத்தில் இரண்டு
நாகங்கள் இணைந்துள்ள நாகர் சிலை செய்து பிரதிஸ்டை செய்ய சர்ப்ப
தோசம் நீங்கும்.
வினாயகர் மகாமந்திர வழிபாடு, வினாயகர் கவச வழிபாடு, வினாயகர்
விரத வழிபாடு முறைப்படி செய்து வர சர்ப்பதோசம் விலகும் கரும்பாம்பு
(இரும்பு) செம்பாம்பு(செம்பு) செய்து, (இரும்பில் பாம்பு செய்ய
முடியாவிட்டால் வெள்ளியில் பாம்பு செய்யலாம்) அவற்றை ஒரு இரும்பு
அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் வைத்து அவை முழுகும் வரை
நல்லெண்ணை ஊற்றி பூசை அறையில் வைத்து, மலர் தூவி, தூப, தீப,
ஆராதனை செய்து (சாம்பிராணி தூபம், நெய் தீபம, கற்பூர தீபம் காட்டி)
ராகு கேதுவை நினைத்து வழிபடவும்.

மந்திரம்

மந்திரம் சொல்லி; சிகப்பு அரலிப்பூவினால் (சிகப்பு அரலிப் பூ கிடைக்காத
பட்சத்தில் விபூதியினால் மந்திரம் சொல்லலாம்) வழி படவேண்டும்.
இந்த பூசை இரவு 6 மணிக்கு மேலேயே செய்யப்படவேண்டும்.

ராகு மந்திரம்----

ஓம் நாக த்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தன்னோ ராகு ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹிறியும் ராகுவே நம . (108 தடவை)

கேது மந்திரம்----

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ கேது ப்ரயோதயாத் (108 தடவை).
ஓம் ஹ{ம் கேதுவே நம. (108 தடவை)

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal..