செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

கடன் தீர்க்கும் கணபதி மந்திரம்

“ஓம் கணேசாய ருணம்
சிந்தி வரேண்யம்
ஹூம் நம்; பட்ஸ்வாஹா”

என்று கடன் நிவர்த்தி அடைய தினமும் ஒன்பது முறை கூறி வழிபட வேண்டும்.

“ஓம் க்லௌம் க்ரோம்
கணேசாய ருணம் சிந்தி
வரேண்யம் ஹூம் நம், பட் ஸ்வாஹா”

என எல்லா கடன்களுக்கும் ருண நாசன கணபதியை வணங்கிட வேண்டும்.

சனிக்கிழமைகளில் சதுர்த்தி

மூல நட்சத்திரம் வரும் நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வில்வத்தால் அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டால் கடனை திருப்பி கொடுத்தல் தடையின்றி நிறைவேறும்.

அஸ்த நட்சத்திர நாளில் அரிசி மாவு கொண்டு அரச மரத்தடி விநாயகரை அபிஷேகம் செய்து கடனை திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தால் கடன் அடைய வாய்ப்புகள் அதிகம் உருவாகும்.

திங்கள், 25 பிப்ரவரி, 2019

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும்.

இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது.

திருநெல்வேலிச் சீமையில் தாமிரபரணிக்கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் வசித்த காரியார் மற்றும் உடைய நங்கைக்குத் திரு மகனாராக நம்மாழ்வார் கலி பிறந்த 43 ஆவது நாளில் அவதரித்தார்

உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் அவரை "மாறன்" என்றே அழைத்தனர்.

மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது.
ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.

யானையை அடக்கும் அங்குசம் போல, பரன் ஆகிய திருமாலை தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாக தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார்.

கன்னியாகுமரி திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.

திருநெல்வேலியிலிருந்து திருக்குறுங்குடி

பதினாறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி கோவிலின் புளிய மரத்தின் அடியில் எவ்வித சலனமும் இல்லாமல் தவம் செய்து வந்தார்.

நாங்குநேரி வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

சடகோபன் என்பவர் நாலாயிரதிவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக அறியப்பெறுகிறார்.

வைணவர்கள் நம்மாழ்வாரே, திருமாலின் திருவடியாக இருப்பதாக நம்புகிறார்கள்.

அதனால் திருமால் திருவடி சடகோபம் என்று அழைக்கப்பெறுகிறது.

வானமாமலை தலத்தில் மட்டும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 7 பிப்ரவரி, 2019

சிவ அஷ்டோத்திர சத நாமாவளி

01. ஓம் சிவாய நமஹ
02. ஓம் மஹேச்வராய நமஹ
03. ஓம் சம்பவே நமஹ
04. ஓம் பினாகிநே நமஹ
05. ஓம் சசிசேகராய நமஹ

06. ஓம் வாம தேவாய நமஹ
07. ஓம் விரூபாக்ஷாய நமஹ
08. ஓம் கபர்தினே நமஹ
09. ஓம் நீலலோஹிதாய நமஹ
10. ஓம் சங்கராய நமஹ

11. ஓம் சூலபாணயே நமஹ
12. ஓம் கட்வாங்கிநே நமஹ
13. ஓம் விஷ்ணுவல்லபாய நமஹ
14. ஓம் சிபி விஷ்டாய நமஹ
15. ஓம் அம்பிகா நாதாய நமஹ

16. ஓம் ஸ்ரீ கண்டாய நமஹ
17. ஓம் பக்த வத்ஸலாய நமஹ
18. ஓம் பவாய நமஹ
19. ஓம் சர்வாய நமஹ
20. ஓம் திரிலோகேசாய நமஹ

21. ஓம் சிதிகண்டாய நமஹ
22. ஓம் சிவாப்ரியாய நமஹ
23. ஓம் உக்ராய நமஹ
24. ஓம் கபாலிநே நமஹ
25. ஓம் காமாரயே நமஹ

26. ஓம் அந்தகாஸுர ஸூதநாய நமஹ
27. ஓம் கங்காதராய நமஹ
28. ஓம் லலாடாக்ஷõய நமஹ
29. ஓம் காலகாளாய நமஹ
30. ஓம் க்ருபாநிதயே நமஹ

31. ஓம் பீமாய நமஹ
32. ஓம் பரசுஹஸ்தாய நமஹ
33. ஓம் ம்ருகபாணயே நமஹ
34. ஓம் ஜடாதராய நமஹ
35. ஓம் கைலாஸவாஸிநே நமஹ

36. ஓம் கவசிநே நமஹ
37. ஓம் கடோராய நமஹ
38. ஓம் திரிபுராந்தகாய நமஹ
39. ஓம் வ்ருஷாங்காய நமஹ
40. ஓம் வ்ருஷபாரூடாய நமஹ

41. ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நமஹ
42. ஓம் ஸாமப்ரியாய நமஹ
43. ஓம் ஸ்வரமயாய நமஹ
44. ஓம் த்ரயீமூர்த்தயே நமஹ
45. ஓம் அநீச்வராய நமஹ

46. ஓம் ஸர்வஜ்ஞாய நமஹ
47. ஓம் பரமாத்மநே நமஹ
48. ஓம் ஸோமஸூர்யாக்நி லோசனாய நமஹ
49. ஓம் ஹவிஷே நமஹ
50. ஓம் யக்ஞ மயாய நமஹ

51. ஓம் ஸோமாய நமஹ
52. ஓம் பஞ்வக்த்ராய நமஹ
53. ஓம் ஸதாசிவாய நமஹ
54. ஓம் விச்வேச்வராய நமஹ
55. ஓம் வீரபத்ராய நமஹ

56. ஓம் கணநாதாய நமஹ
57. ஓம் ப்ரஜாபதயே நமஹ
58. ஓம் ஹிரண்ய ரேதஸே நமஹ
59. ஓம் துர்தர்ஷாய நமஹ
60. ஓம் கிரீசாய நமஹ

61. ஓம் கிரிசாய நமஹ
62. ஓம் அநகாய நமஹ
63. ஓம் புஜங்கபூஷணாய நமஹ
64. ஓம் பர்க்காய நமஹ
65. ஓம் கிரிதன்வநே நமஹ

66. ஓம் கிரிப்ரியாய நமஹ
67. ஓம் க்ருத்தி வாஸஸே நமஹ
68. ஓம் புராராதயே நமஹ
69. ஓம் மகவதே நமஹ
70. ஓம் ப்ரமதாதிபாய நமஹ

71. ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நமஹ
72. ஓம் ஸூக்ஷ்மதனவே நமஹ
73. ஓம் ஜகத்வ் யாபினே நமஹ
74. ஓம் ஜகத் குரவே நமஹ
75. ஓம் வ்யோமகேசாய நமஹ

76. ஓம் மஹா ஸேந ஜநகயா நமஹ
77. ஓம் சாருவிக்ரமாய நமஹ
78. ஓம் ருத்ராய நமஹ
79. ஓம் பூதபூதயே நமஹ
80. ஓம் ஸ்தாணவே நமஹ

81. ஓம் அஹிர் புதன்யாய நமஹ
82. ஓம் திகம்பராய நமஹ
83. ஓம் அஷ்டமூர்த்தயே நமஹ
84. ஓம் அநேகாத்மநே நமஹ
85. ஓம் ஸாத்விகாய நமஹ

86. ஓம் சுத்த விக்ரஹாய நமஹ
87. ஓம் சாச்வதாய நமஹ
88. ஓம் கண்டபரசவே நமஹ
89. ஓம் அஜாய நமஹ
90. ஓம் பாசவிமோசகாய நமஹ

91. ஓம் ம்ருடாய நமஹ
92. ஓம் பசுபதயே நமஹ
93. ஓம் தேவாய நமஹ
94. ஓம் மஹாதேவாய நமஹ
95. ஓம் அவ்யயாயே நமஹ

96. ஓம் ஹரயே நமஹ
97. ஓம் பூஷதந்தபிதே நமஹ
98. ஓம் அவ்யக்ராய நமஹ
99. ஓம் பகதேத்ரபிதே நமஹ
100. ஓம் தக்ஷாத்வரஹராய நமஹ

101. ஓம் ஹராய நமஹ
102. ஓம் அவ்யக்தாய நமஹ
103. ஓம் ஹஸஸ்ராக்ஷாய நமஹ
104. ஓம் ஸஹஸ்ரபதே நமஹ
105. ஓம் அபவர்க்கப்ரதாய நமஹ

106. ஓம் அனந்தாய நமஹ
107. ஓம் தாரகாய நமஹ
108. ஓம் பரமேச்வராய நமஹ


பார்வதி அஷ்டோத்திர சத நாமாவளி

சிவன் அஷ்டோத்திர சத நாமாவளி

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

முடிதும்பை

முடிதும்பை Leucas Aspera

25 தும்பை பூக்களை, ½ டம்ளர் காய்ச்சிய பாலில் இட்டு, ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்குக் குடிக்க கொடுக்க குழந்தைகளின் தொண்டையில் கட்டிய கோழை வெளிப்படும்.

10 துளிகள் அளவு தும்பை பூச்சாற்றை, காலையில் மட்டும் குழந்தைகளுக்கு உள்ளுக்குள் கொடுக்க குழந்தைகளுக்கான சளி, இருமல், விக்கல் தீரும்.

தும்பை இலைச் சாறு 10 முதல் 15 மிலி வரை குடிக்க வேண்டும். தினமும் காலையில் மட்டும் 15 நாட்கள் செய்ய ஒவ்வாமை தீரும்.

தும்பைச் செடியை, இலை, பூக்களுடன் பறித்து வந்து, நன்கு கொதிக்க வைத்த தண்ணீரில் இட்டு வேது பிடிக்க ஒற்றைத் தலைவலி குணமாகும்.

தும்பைப்பூவைத் துணியில் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து, 15 துளிகள் அளவு, அதே அளவு தேனுடன் கலந்து காலையில் குடித்துவர, நாக்கு வறட்சி,தாகம், அசதி போன்றவை தீரும்.

வீட்டருகே எளிதாக கிடைக்கும் தும்பை இலையில் துவையல் செய்வது எப்படி? மூலிகை சமையல் !!

தேவையானவை:
தும்பை இலை – ஒரு கப்,
இஞ்சி – ஒரு துண்டு,
உளுத்தம் பருப்பு கால் கப்,
காய்ந்த மிளகாய் 4, புளி
சிறிதளவு, உப்பு தேவையான அளவு,
பெருங்காயம் கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை:
ஒரு வாணிலியில் எண்ணெய்விட்டு உளுத்தம் பருப்பு, தும்பை இலை இரண்டையும் தனித்தனியே வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.

இஞ்சி, நறுக்கிய காய்ந்த மிளகாய், பெருங்காயம் இவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளங்கள்.
பின்னர் அதில் வறுத்த தும்பை இலை, உளுத்தம் பருப்பு அரைத்து விடவும்.

சிறிது எண்ணெயில் கடுகு தாளித்தல தும்பை துவையல் ரெடி.
இதனை சூடாக பரிமாறவும்.

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

எந்த தெய்வத்தை எத்தனை முறை வலம் வர வேண்டும்

ஒவ்வொரு தெய்வத்தையும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபாடு செய்ய வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

விநாயகரை ஒரு முறையும்,

சூரிய பகவானை இரண்டு முறையும்,

ஈஸ்வரனையும், அம்மனையும் 3 முறை வலம் வர வேண்டும்.

மகான்களின் சமாதியை 4 முறை வலம் வர வேண்டும்.

விஷணுவை நான்கு முறையும்,

தோஷ நிவர்த்திக்காக பெருமாளையும், தாயாரையும் வணங்குபவர்கள் 4 முறை வலம் வர வேண்டும்,

லட்சுமி தாயாரை ஐந்து முறையும்,

அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

நவக்கிரகங்களை 9 முறை வலம் வர வேண்டும்,

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

கோவிலுக்குள் ஆலய பலிப்பீடம், கொடிக்கம்பம் முன்பு தான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.

கோயிலில் ஒவ்வொரு சுவாமிக்கும் தனித்தனியாக நமஸ்காரம் செய்யக் கூடாது. கொடிமரத்திற்கு வெளியில் செய்தால் எல்லா சுவாமிக்கும் சேர்த்து நமஸ்காரம் செய்த புண்ணியம் கிட்டும்.

ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.

வியாழன், 24 ஜனவரி, 2019

நவகிரக சந்திரன் வழிபடுவது

நவகிரக சந்திரன் வழிபடுவது

2, 11, 20, 29 தேதிகளில் பிறந்தவர்கள்,

கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண
நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்

சந்திரன் தேய்பிறையாக அமைந்தாலும், நீசம், பகை பெற்று இருந்தாலும்,

ஜாதகர்களுக்கு மனநிலை பாதிக்கும். தூக்கம் கெடும். பயம் உண்டாகும். பெண்களால் சங்கடம் ஏற்படும்.

சந்திர பலம் குறைந்தவர்கள் வெள்ளை அல்லி மலர்களைச் சந்திரனுக்கு அணி வித்து வணங்கலாம்.

வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவிக்கலாம். நெய் கலந்த பால் பாயசம் நைவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் அளிக்கலாம்.

திருப்பதி மலையின் மேல் உள்ள பாபநாச (சந்திர தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனைத் தரிசிப்பது நல்லது.

வழிபாட்டு மந்திரம்

ததிசங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்
நமாமி சசினம் ஸோமம்
சம்போர் முகுடபூஷணம்

நிறம்: வெள்ளை

தானியம்: அரிசி

வாகனம்: வெள்ளை குதிரை

பலன்கள்: தடங்கல் நீங்கும், முன்னேற்றம் ஏற்படும்.

நவகிரக சூரியன் வழிபடுவது

நவகிரக சூரியன் வழிபடுவது

சூரியன் - 10 சுற்றுகள்

தானியம்: கோதுமை

வாகனம்: ஏழு குதிரை பூட்டிய தேர்

பகை, நீசம் பெற்றிருந்தாலோ,

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள்,

சிம்ம ராசி,

கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள்

உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் தகுதி உண்டாகும்.

உடலில் உஷ்ணாதிக்கம் அதிகம் இருக்கும். கம்பீரமான தோற்றம் அமையும். காடு, மலை, வனாந்தரங்களில் வசிக்கப் பிடிக்கும். சூடான உணவை ரசித்து உண்பீர்கள்.

ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள்

சூரியனின் கிழமை ஞாயிறு. அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பரிகாரம் செய்து கொள்ளலாம். 11 மணி முதல் 12 மணிக்குள் குரு ஹோரையிலும் செய்யலாம்.

சூரியனுக்கு செந்தாமரை மலர் சூட்டி, செந்நிறப் பட்டு ஆடை அணிவித்து, அர்ச்சனை செய்யலாம். கோதுமை தானம் கொடுப்பது நல்லது.

சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேகம் செய்து சிவப்பு வஸ்திரம் சிவப்புமணி செந்தாமரையால் அலங்காரம் செய்து, சூரிய மந்திரங்களை ஓதி கற்பூர ஆரத்தி எடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் சூரியக் கிரகதோஷம் நீங்கும்.

புதன், 9 ஜனவரி, 2019

0170. தொழிலில் இலாபம் அடைய

தொழிலில் இலாபம் அடைய அயோத்யா காண்டத்தில் யாத்ரா தானத்தை காலை, மதியம், இரவு என்று மூன்று வேளைகளில் பாராயணம் செய்ய வேண்டும்.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்



அயோத்யா காண்டம்: சர்க்கம் 32


=======================================================================
உமா ஸம்ஹிதா
அர்தகாம: படேத் ஸர்கம் யாத்ரா தான கதாம்சகம்
ராமஸ்யாரண்ய கமன ஸமயே து த்ரிஸந்த்யகம் !!


தாம் எதிர்பார்த்த பணம் அல்லது பொருள் தனக்குக் கை கூடாமை, உத்தியோகத்தால் சம்பள உயர்வு ஏற்படாமை, கொடுக்கல் வாங்கல்களில் தகராறு முதலிய பணக்கஷ்டங்கள் நிவர்த்தி ஆவதற்கும் பொதுவாக மேன்மேலும் பணம் விருத்தியாவதற்கும் ஸ்ரீ ராமன் காட்டிற்குப் போகுமுன் செய்த "யாத்ரா தானத்தை" விவரிக்கும் அயோத்யா காண்டம் 32-வது சர்க்கத்தை தினம் மூன்று காலங்களிலும் பாராயணம் செய்ய வேண்டும்.



நிவேதனம் : ஐந்து வாழைப்பழங்கள்.


ஸங்கல்பம்


ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத
ஸ்ரீ ராமசந்த்ர ப்ரபோ: ப்ரசாதன, அஸ்ம
து பாத்தேஷூ அர்த்த பரேஷூ கர்மஸூ
புஷ்கல தநாவாப்யர்த்தம் "யாத்ராதான"
த்மக ஸ்ரீமத் ராமாயண கட்ட பாராயணம்
அஹம் கரிஷ்யே1

ஸ்ரீ வால்மீகி நம:
ஸ்ரீ ஹனுமான் நம:
ஸ்ரீ ராமன் நம:

ஸர்க்கம் 32
யாத்ராதானம்


தத: சாஸநமாஜ்ஞாய ப்ராது: ஸூபதரம் ப்ரியம் !
கத்வா ஸ ப்ரவிவேஷாஸூ ஸூயஜ்ஞஸ்ய நிவேஷனம் !!


ராமன் பிராம்மணர்களுக்குத் தானம் கொடுக்கிறார் என்ற புண்ணியகரமான வார்த்தையைக் கேட்டு லட்சுமணன், தன்னை அழைத்துப் போக ராமன் சம்மதித்ததைப் பற்றி அடங்காத ஆனந்தமடைந்தார். பிறகு அவருடைய உத்திரவுப்படி ஸூயக்ஞருடைய வீட்டிற்குப் போய் அக்னிஹோத்திர சாலையில் அவரைக்கண்டு நமஸ்காரம் செய்து," மித்திரரே! வாரும். உலகத்தில் ஒருவரும் செய்யத் துணியாத காரியத்தைச் செய்த என் தமையனுடைய வீட்டிற்கு வந்து பாரும்," என்று அழத்தார். ஸூயக்ஞர் காலையில் செய்ய வேண்டிய அக்னிஹோத்திரத்தை முடித்துவிட்டு சகல லக்ஷ்மியும் விளங்கும் ராமனுடைய அந்தப்புரத்திற்கு லட்சுமணனுடன் வேகமாகப் போனார்.


மஹா ஞானியான ஸூயக்ஞரைக் கண்டு ராமனும் சீதையும் பரபரப்புடன் எழுந்து கைகூப்பி, ஹோம அக்னியை உபசரிப்பது போல வலம் வந்து வணங்கினார்கள். உத்தமமான தங்கத் தோள் வளைகளையும், தங்கச் சரட்டில் சேர்க்கபட்ட நவரத்தினங்களையும், குண்டலங்களையும், கைவளைகளையும், புஜகீர்த்திகளையும் இன்னும் பல அபூர்வமான ரத்தினங்களையும் ராமன் ஸூயக்ஞருக்குக் கொடுத்து உபசரித்தார். பிறகு சீதை நினைவுபடுத்தியபின் "மித்திர!, இந்த ஹாரத்தையும் தங்கக் கொடியையும் ஒட்டியாணத்தையும் தங்களுடைய பாரியைக்கு சீதை கொடுக்க விரும்புகிறாள். அதை அங்கீகரிக்கும்படி ப்ரார்த்திக்கிறேன். மேலும், தான் வனத்திற்குப் போகும் சமயத்தில் விசித்திரமாய் வேலை செய்யப்பட்ட இந்தக் கேயுரங்களையும் தோள் வளைகளையும் தங்களுடைய பத்தினிக்குக் கொடுக்கும்படி பிரார்த்திக்கிறாள். பலவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு விலையுயர்ந்த விரிப்புடைய இந்தக் கட்டிலைத் தாங்கள் அங்கீகரிக்கவேண்டும் என்று விரும்புகிறாள். என் மாமா எனக்குக் கொடுத்த சத்ருஞ்ச்ஜயனென்ற யானையையும் இன்னும் ஆயிரம் யானைகளையும் தங்களுக்குக் கொடுக்கிறேன்," என்றார். ஸூயக்ஞர் யானைகளை பெற்றுக்கொண்டு ராம லட்சுமணனையும் சீதையையும் ஆசிர்வதித்தார்.


பிறகு பிரம்மா தேவராஜனைக் கட்டளை இடுவது போல் ராமன் மிகுந்தப் பிரியத்துடன், "லட்சுமண, அகஸ்த்தியருடைய புத்திரரையும் விவாமித்திரருடைய புத்திரரையும் இங்கே வருவித்து, லோகத்தில் பயிர்களை ஜலத்தால் போஷித்து வளர்ப்பது போல், அந்தப் பிராம்மண உத்தமர்களுக்கு ரத்தினங்களைக் கொடுத்துத் திருப்தி செய். அனேகமாயிரம் பசுக்களையும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்களையும் வேண்டியவரையில் கொடு.


"யஜூர்வேத தைத்ரீய சாகையை அத்யயனம் செய்பவர்களுக்கு ஆசாரியரான ஒரு பிராம்மணோத்தமர் ஒவ்வொரு நாளும் என் தாயின் வீட்டிற்கு வந்து, மிகுந்த பக்தியுடன் அவளுக்கு ஆசிர்வாதம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மஹாவித்துவான். வேதங்களின் ரகசியங்களை அறிந்தவர். வாகனங்கள், பட்டுகள், போர்வைகள், வேலைக்காரர்கள் முதலியவைகளை வேண்டியவரையில் அவர்க்குக் கொடு. நமது வீட்டில் வெகுநாளாகப் பழகிக்கொண்டிருக்கும் நமது மந்திரியும் சாரதியுமான சித்ரரதரென்பவருக்கு எண்ணிறந்த ஆடுகளையும் ஆயிரம் மாடுகளையும் ரத்தினங்களையும் வஸ்த்திரங்களையும் தான்யங்களையும் கொடுத்துத் திருப்தி செய். வேதத்தில் கடம் காலாபமென்ற பாகங்களை அத்யயனம் செய்துகொண்டு பலாச தண்டத்தைத் தரிக்கும் பல பிரம்மசாரிகள் என்னால் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்கள். எப்பொழுதும் வேதாத்யனம் செய்து கொண்டிருப்பதால் ஆகாரம் தேட அவர்களுக்குப் பொழுதில்லை. இயற்கையாகவே சுறுசுறுப்பு இல்லாதவர்கள். ருசியான பதார்த்தங்களில் விருப்பமுள்ளவர்கள். ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட எண்பது வாகனங்களையும், தான்யங்களைச் சுமக்க ஆயிரம் எருதுகளையும், நிலங்களை உழுவதற்கு இருநூறு மாடுகளையும், பால் தயிர் இவைகளுக்காக ஆயிரம் பசுக்களையும் அவர்களுக்குக் கொடு. மேகலையென்ற அரைநூல் மாலையைத் தரிக்கும் அனேக பிரம்மசாரிகள் தங்களுக்கு விவாகம் செய்யவேண்டுமென்று என் தாயை அண்டியிருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பசுக்களைக் கொடு. அதனால் கௌசல்யை திருப்தி அடையட்டும்," என்று கட்டளையிட்டார். ராமனால் குறிபிடப்பட்ட தனம் முதலியவைகளை அந்தப் பிராம்மணர்களுக்கு லட்சுமணன் குபேரனைப் போல தானே கொடுத்தார்.


பிறகு தாரைதாரையாகக் கண்ணீர்ப் பெருக்கிக்கொண்டு நிற்கும் பரிவாரங்களில் ஒவ்வொருவருக்கும் சௌக்கியாகப் பிழைப்பதற்குப் போதுமான தனத்தை ராமன் தானே கொடுத்து, " நாங்கள் திரும்பி வரும் வருவரையில் என் அரண்மனையையும் லட்சுமணனுடைய வீட்டையும் சூன்யமாக வைக்காமல் நீங்கள் அங்கிருந்து பாதுகாக்க வேண்டும்", என்றார். பிறகு தன் பொக்கிஷத் தலைவனைத் தருவித்தும், "என் ஐசுவரியம் முழுவதையும் இங்கே கொண்டு வா" என்று உத்தரவு செய்தார். அவைகளை, வேலைக்காரர்கள் குப்பல்களாகக் குவித்தார்கள். பிறகு ராமலட்சுமணர்கள் அவைகளைப் பிராம்மணச் சிறுவர்களுக்கும் கிழவர்களுக்கும் ஏழைகளுக்கும் போதுமான வரையில் கொடுத்தார்கள்.


அப்போது கர்க்கரிஷியின் வம்சத்தில் பிறந்த ஒரு ஏழை பிராம்மணன் அங்கே வந்தார். அவருக்குத் திரிஜடரென்று பெயர். ஏழ்மைத் தனத்தால் தேகம் முழுவதும் மஞ்சள் வர்ணம் படர்ந்திருந்தது. வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லை ஒவ்வொன்றாகப் பொறுக்கி ஜீவனம் செய்கிறவர். மிகவும் வயது சென்றவர். தன் மனைவி மக்களுடன் காட்டில் வசிப்பவர்.


இளம் பெண்ணான அவருடைய மனைவி, குழந்தைகளை அவருக்குக் காட்டி, "ஸ்வாமி, நாம் ஏழ்மைத்தனத்தை எவ்வளவு காலம் பொறுக்க முடியும்?. தங்கள் கையிலுள்ள கோடாலி, கலப்பை, மண்வெட்டி முதலியவற்றை எறிந்துவிட்டு நான் சொல்லுகிறபடி கேளுங்கள். தங்களுக்கு ஏதாவது திரவியம் கிடைக்க வேண்டுமென்ற எண்ணமிருந்தால் தர்மமே அவதாரம் எடுத்திருக்கும் ராமனைத் தரிசனம் செய்யுங்கள்", என்றாள். அவர் தன் பத்தினியின் வார்த்தையை ஒப்புக் கொண்டு தன் கந்தை வஸ்த்திரத்தை மறைத்துக் கொண்டு ராமனுடைய அந்தப்புரத்திற்குப் போகும் வழியால் அங்கே வந்து சேர்ந்தார். பிறகு அங்கிரஸ் முதலிய மஹரிஷிகளுக்கு சமமான தேஜசுள்ள அந்தப் பிராம்மணரை ஐந்தாவது கட்டுவரையில் ஒருவரும் தடுக்கவில்லை. அவர் ராமனுக்கு அருகில் போய், " ராஜபுத்திர! இந்த உலகம் முழுவதையும் உன் கீர்த்தி வியாபித்திருக்கிறது. நான் பெரிய குடும்பி. அவர்களை போஷிக்க என்னிடத்தில் வேண்டிய தனமில்லை. காட்டில் உதிர்ந்த நெல்லுகளைப் பொறுக்கி ஒவ்வொரு நாளும் ஜீவனம் செய்கிறேன். ஆகையால் என்னிடத்தில் கிருபை செய்யவேண்டும்" என்றார்.


இந்தப் பிராம்மணன் பெரிய குடும்பி, மஹாதரித்திரன். இவருக்குத் தனத்தில் எவ்வளவு ஆசை இருக்கிறதென்று பரீக்ஷிக்க விரும்பிப் புன்சிரிப்புடன் வேடிக்கையாக , "ஸ்வாமி!, எண்ணிறந்த என் பசுக்களில் ஒரு ஆயிரம் கூட இன்னும் தானம் கொடுக்கப்படவில்லையே. தங்கள் கையிலிருக்கும் கழியை சுழற்றி எறியுங்கள். அது எங்கே விழுகிறதோ அதுவரையில் இருக்கும் பசுக்கள் தங்களுடையத்" என்றார்.


உடனே அந்தப் பிராம்மணன் வெகு பரபரப்புடன் தன் வஸ்த்திரத்தை இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டு, முழு பலத்துடன் கழியைச் சுழற்றி எறிந்தார். அது சரயு நதிக்கு அக்கரையில் அனேகமாயிரம் பசுக்களுக்கு நடுவில் விழுந்தது. அப்பொழுது ராமன் அந்தப் பிராம்மணரை மிகுந்தப் பிரியத்துடன் ஆலிங்கனம் செய்து, சரயு நதிக்கரையிலிருந்து அந்த மாட்டு மந்தைகள் யாவற்றையும் திரிஜடருடைய வீட்டிற்கு ஒட்டிக் கொண்டு போய்ச் சேர்க்கும்படி இடையர்களுக்கு உத்தரவு செய்து, "ஸ்வாமி!, தாங்கள் என்னிடத்தில் கோபிக்காமலிருக்கப் பிரார்த்திக்கிறேன். தங்களுடைய ஒப்பற்ற பலத்தை அறிய விரும்பியே கழியைச் சுழற்றி எறியும்படி தங்களைச் சொன்னேன். வேடிக்கையாகச் செய்ததே தவிர வேறல்ல. இன்னும் ஏதாவது வேண்டியிருந்தால் கேட்கும்படி பிரார்த்திக்கிறேன். தங்களுக்கு யாதொரு தடையும் வேண்டியதில்லை. பிராம்மணர்களுடைய உபயோகத்திற்காகவே என் ஐசுவரியம் முழுவதையும் சம்பாதித்து இருக்கிறேன். தங்களைப் போன்ற மஹான்களுக்கு அது உபயோகப்பட்டால் அது எனக்கு அளவற்ற கீர்த்தியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்", என்று அவரை சமாதானம் செய்தார். திரிஜடரும் அவருடைய மனைவியும் அந்த மாட்டு மந்தைகளைப் பெற்றுக் கொண்டு அளவற்ற ஆனந்தமடைந்து கீர்த்தி, பலம், பிரீதி, சுகம் முதலிய மங்களங்கள் குறைவில்லாமல் விருத்தியாக வேண்டுமென்று மனப்பூர்வமாக ராமனை ஆசீர்வதித்தார்கள்.


பிறகு ராமன் தன் பராக்கிரமத்தால் தர்மமாக சம்பாதிக்கப்பட்ட அளவற்ற ஐசுவரியத்தைத் தன் மித்திரர்களுக்கும் பரிவாரங்களுக்கும் தகுந்த உபசாரத்துடனும் மரியாதையுடனும் கொடுத்தார். அங்கிருந்த பிராம்மணர்களும், மித்திரர்களும், வேலைக்காரர்களும், தரித்திரர்களும், பிச்சைக்காரர்களும் ஆக எல்லோரும் தங்களுடைய யோக்கியதைக்கும் ஆசைக்கும் தகுந்தபடி ராமனால் கொடுக்கப்பட்ட தானத்தால் திருப்தி அடைந்தார்கள். திருப்தி அடையாதவர்கள் ஒருவரும் இல்லை.


த்விஜ; ஸூஹ்ருத் ப்ருத்யஜனோதவா ததா
தரித்ர பிக்ஷாசரணச்ச யோ பவேத் !
ந தத்ர கச்சிந் ந பபூவ தர்பிதோ
யதார்ஹ ஸம்மாநந தான ஸம்ப்ரமை: !!
ஸர்க்கம் 32
யாத்ரா தானம் நிறைவு பெற்றது.


மங்கள ஸ்லோகங்கள் கூறி நிறைவு செய்யவும்.