திங்கள், 15 அக்டோபர், 2018

0116. அர்த்த நாரீஸ்வரர்

0116. அர்த்த நாரீஸ்வரர்

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர்.
ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன்.
கயிலைநாதன் தான் என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார்.

தன் கணவரை விட்டு ஒரு கணமும் பிரியா வரம் வேண்டும் என்று தவமிருந்தாள்.
கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார்.
சிவனை கண்ட பார்வதி ஒரு நாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.

பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார்.
இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கெளரி விரதநாள்.

கேதார கெளரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும் கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன்
பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.
இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

ஸ்ரீ் அர்த்த நாரீஸ்வரர் காயத்ரி
ஓம் தபஸ்ய ச வாம பாகமாய வித்மஹே
சிவசக்த்யாய தீமஹி
தன்னோ அர்த்த நாரீஸ்வரா ப்ரசோதயாத்!

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும்.
வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0115. சங்கர-நாராயணர்

0115. சங்கர-நாராயணர்

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள்.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த ஆடித் தபசு

சிவன் மற்றும் விஷ்ணு ஒரே தெய்வம், இரண்டு தெய்வங்களை ஒரே வடிவமாக வணங்க வேண்டுமென்று சைவ சமயத்தவர்களும் இந்துக்களும் விரும்பினர்.

ஆடி தபசு
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை

ஸ்ரீ் சங்கர நாராயணர் காயத்ரி

ஓம் சிவா-விஷ்ணு ச ஏக ரூபமாய வித்மஹே
தபஸ் சக்த்யாய தீமஹி
தன்னோ சங்கர நாராயண ப்ரசோதயாத்!

Sri Sankara Narayana Gayathri

Om Siva-Vishnu cha Yega Roobamaya Vithmahe
Thapas Sakthyaya Theemahi
Thanno SankaraNarayana Praschothayath

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0114. தத்த ஜெயந்தி

0114. தத்த ஜெயந்தி

தத்தாத்ரேயர்

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.

இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.

அவதாரங்களில் 'சிறந்த அவதாரம்' என்று வியாசரால் வணங்கப்பட்டவர்.

'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

இதை செய்யும் சித்தி செய்த உடல்கட்டு மந்திரம் போட்டுக் கொள்ளவும்.

விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

0113. புரட்டாசி சனிக்கிழமை

0113. புரட்டாசி சனிக்கிழமை

B. புரட்டாசி சனி

புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.
திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

புரட்டாசி சனி (Puraddasi Sani)
C. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
(I) வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
(II) வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
(III) துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.
எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.
சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும்.

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம் :

‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0112. You Tube Megala Home Channel

0112. You Tube Megala Home Puja Channel

மேகலா வீட்டில் மா பதியம் செய்வது எப்படி?

மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்
மேகலா வீட்டின் எண்ணெய் காப்பு
மேகலா வீட்டின் நாக வழிபாடு
மேகலா வீட்டின் யம தீபம்
மேகலா வீட்டின் சங்கு தீபம்
மேகலா வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி புஷ்ப யாகம்
மேகலா வீட்டின் பஞ்ச லட்சுமியில் நாணயங்கள் வழிபாடு

மேகலா வீட்டின் ஆடி மாசம் 4வது வெள்ளி தாமரை விதை & சங்கு பூஜை

மேகலா வீட்டின் ஆவணி மாதம் 1ம் ஞாயிறு சூரிய நமஸ்காரம்
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 2வது ஞாயிறு சூரிய குதிரை வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 3வது ஞாயிறு சூரிய அஸ்வ கலசம் வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 4வது ஞாயிறு சூரிய பித்ரு பூஜை

மேகலா வீடு கிரகபிரவேசம்
மேகலா வீட்டின் 2 வது படுக்கையறை அமைப்பு
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி I
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி II
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி III

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 செப்டம்பர், 2018

0111. கோமதி சக்கரம் வழிபாடு

0111. கோமதி சக்கரம் வழிபாடு

கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும்.

சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

நோய் தீர்க்கும் வைத்திய கற்களாக கோமதி சக்கர கல் பயன்படுகிறது.

வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்

கோமதி சக்கர வழிபாடு சகல பாவமும் விலகும்.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை.
இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள்.

கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.

நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

1 . அன்னை பூஜை - தொப்பு = ஓம் ஹ்ரீம் மாதாவே நமக;
ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என 21 முறை கூறவும்.

2 . தந்தை பூஜை - மார்பு = ஓம் ஹ்ரீம் பிதாவே நமக; என 21 முறை கூறவும்.

3 . குரு பூஜை - குரு = ஓம் ஹ்ரீம் குருவே நமக; என 21 முறை கூறவும்.

4 . பித்ரு பூஜை - நெற்றிக்கண் = ஓம் ஹ்ரீம் பித்ரு தேவதாய நமக; என 21 முறை கூறவும்.

5 . குல தெய்வ பூஜை - உச்சி தலை = ஓம் ஹ்ரீம் குலதேவதாய நமக; என 21 முறை கூறவும்.

6 . பிரம்மா சரஸ்வதி (கல்வி) பூஜை - கட்டைவிரல், சுண்டுவிரல் இவ்விரு விரல்களால் மட்டும் =
ஓம் நமோ பிரம்ம தேவாய நமக என ஏழு முறை கூறவும்.
அடுத்து ஓம் ஐம் சரஸ்வத்யை நமக என ஏழுமுறை கூறவும்.

7 . லட்சுமி நாராயனர் (செல்வம்) பூஜை - வலது கை ஐந்து விரல்களாலும் பிடித்து மார்பு குழியில் வைத்து =
ஓம் நமோ நாராயணாய நமக என எட்டு முறை கூறி
பின்பு ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக என எட்டு முறை கூறி வணங்கவும்.

8 . சக்தி சிவன் (வீரம்) பூஜை - கட்டைவிரல் மோதிரவிரல் இவ்விரு விரல்களை மட்டும் =
ஓம் சிவசிவ ஓம் என ஒன்பது முறை கூறி
பிறகு ஓம் ஹ்ரீம் பராசக்தியே நமக என 9 முறை கூறி வணங்கவும்.

இப்போது தாங்கள் பூஜித்த 6, 7, 8-வது சக்கர வழிபாடு விஷ்ணு லோகத்தை வழிபட்ட பலன் கிடைக்க செய்யும்.

9 . பௌர்ணமி (ஆகாயம்) பூஜை - சிவலோக வழிபாடாகும் = நல்லதே நடக்கும்.
மந்திரத்தின் இறுதியில் நமக இதற்கு மட்டும் சேர்க்க வேண்டாம். =
ஓம் ஹரீம் மகா காலபைரவாய நமக என்னும் மந்திரத்தை 21 முறை கூறவும்.

10 . அமாவாசை (பாதாளம்) பூஜை - வலது கை ஐந்து முனை விரல்களாலும் எடுத்து பூஜிக்க வேண்டும். = 11 . ஏகாதசி (லாபம்) பூஜை - இடது கையால் எடுத்து வலது கை உள்ளங்கையில் உங்கள் மார்பு உயரத்திற்கு நேராக கையை நீட்டவும்.=
நான் நேசிக்கும் அத்தனை லாபங்களையும் தட்டாமல் தயவுடன் தாருங்கள் .
என தயவுடன் வேண்டுதலாக கேட்கவும்.
இதையே மந்திரமாக பாவித்து 9 முறை திரும்ப திரும்ப கூறவும்.

12 . சிவராத்திரி (சுகம்) பூஜை - 11 பூஜை முடித்து சக்கரத்தை கீழே வைக்காமல் அந்த இரு கையும் அப்படியே தொப்புளுக்குக்கீழ் கொண்டுவந்து வைக்கவும் =
அத்தனை சுகங்களையும் இப்பிறவியிலேயே வேண்டி கேட்கிறேன் தாருங்கள்.
சங்கு சக்கரமும், உலக சுழியும் தங்கள் வசம் உள்ளதுபோல் நான் பெற நினைக்கும் நியாயமான சந்தோஷங்களைத் தாருங்கள்
என இதையே மந்திரமாக பாவித்து 9 முறை கூறவும்.

13 . ஜென்ம பூஜை - வலது கை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளவும். =
இனி நான் நி - னைத்தவையெல்லாம் ஜெயமாகும்.
எல்லாம் என் வசியமே நம என 3 முறை கூறவும்.

பிறகு உங்கள் லக்கணம் தெரிந்தால்
ஓம் ஐம் (இவ்விடம் லக்கனபெயர் சொல்லவும்) உயிராய நம
உதாரனமாக உங்கள் லக்கணம் மேஷம் என்றால் ஓம் ஐம் மேஷம் உயிராய நம என 9 முறை கூறவும்.

அடுத்து ராசி தெரிந்தால்
ஓம் ஸ்ரீம் ராசிபெயர் உடலாய நம
என 9 முறை கூறவும். அடுத்து உங்கள் பெயர் மந்திரம் 21 முறை கூறவும்.

ஓம் ஹ்ரீம் தங்கள் பெயர் ஆத்மாவே நம
(மேற்க்கண்டதுதான் பெயர் மந்திரம் யாருடைய பெயரையும் மந்திரத்தின் நடுவில் சேர்த்து சொல்லலாம் .இது யாவருக்கும் பொதுவானதாகும்) .

இவ்வாராக பெயர் மந்திரம் 21 முறை கூறவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

0110. பித்ரு பூஜை

0110. பித்ரு பூஜை

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

0109. சங்கு தீபம்

0109. சங்கு தீபம்

இறைவழிபாட்டுக்கு பல வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்
அதில் தன ஆகார்ஷனத்திற்க்கென சில தீப வழிபாடுகள் உள்ளன
இந்த தீபங்கள் பணவரவை மட்டுமன்றி தீய எண்ணங்கள் தீய சக்திகளின்
ஆதிக்கத்தையும் கண் திருஸ்டி ஏவல் பில்லி சூன்ய பாதிப்பில் இருந்தும்
நம்மை காக்கிறது,

சங்கில் இடம்புரி வலம் புரி என இரண்டு வகை உள்ளது
வலம்புரி சங்கிற்க்கு அபார சக்தி உள்ளது
ஆனால் சங்கு தீபம் ஏற்ற இரண்டு வகையுமே ஏற்றது

உங்கள் சக்திக்கு தகுந்தாற்போல சிறிய அல்லது பெரிய சங்கு வாங்கி
அதை முதலில் சுத்தமான நீரில் கழுவி பின்பு பண்ணீரில் பத்து நமிடம்
ஊற வைத்து அதை சுத்தமான துணியில் துடைத்து விட்டு சந்தனம்
குங்குமம் வைக்கவும்

ஒரு தட்டில் சிறிது பச்சரிசியில் மஞ்சள் கலந்து பரப்பி அதன் மேல் சங்கை
வைத்து நல்லெண்னை மற்றும் பசு நெய் சம அளவில் நிரப்பி திரி
விளக்கேற்றவும்சங்கை சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும்.

லட்சுமிக்கு பசு நெய், நாராயணனுக்கு நல்லெண்ணெய் விட்டு
தீபம் ஏற்ற வேண்டும்.

இடம் புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிகப்பு சேலை துண்டு
திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஸ்டதிய
சக்திகளும் தரிதிரங்களும் விளகும்.

வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும்.
இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்...

'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’
'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும்,
'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

சங்க மத்யே ஸ்திதம் தோயம்ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்..

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்னும் சங்கு காயத்ரியை 3 or 11 முறை

ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்,

உங்களின் கோரிக்கையை வைக்க அது விரைவில் நிறைவேறும்
ஒரு கோரிக்கை நிறைவேறியதும் அடுத்த கோரிக்கை வைக்கவும

துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில்
செய்து முடிக்கலாம்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி,
ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி
எல்லாம் சங்கு தீபம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 1 ஜனவரி, 2018

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

0108. பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் ?

01. கன்னி மூலை (தென்மேற்கு) வீற்றிருக்கும் விநாயகர்.
நிருதி (தென்மேற்கு) மூலை

02. கிழக்கு – இந்திரன் யானை

03. வடக்கு திசைக்கு – குபேரன்.

04. வாயு மூலை வடமேற்கு தெற்கே தெய்வங்களை வைத்து வடக்கு முகமாக (சிவசக்தி
சொரூபம்) வைத்து வணங்கி வந்தால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
வாயு மூலை வடமேற்கு அனுமன்

05. பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை,
மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, பசு, கண்ணாடி, உள்ளங்கை,
தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

06. தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

07. இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும்,
மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.
அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும். 

08. சங்கு

09. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது சிறப்பு.

010. வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க
வேண்டும்.
அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி
பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.

011. சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில்
உபயோகிக்கவேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

0107. கடன் தீர பரிகாரம்

0107. கடன் தீர பரிகாரம்

அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக 
குறையும்.

I. செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரை

03 : 00 AM TO 04 : 00 AM
06 : 00 AM TO 07 : 00 AM
01 : 00 PM TO 02 : 00 PM
08 : 00 PM TO 09 : 00 PM

II. ராசிகளுக்கேற்ற பொது மைத்ர முகூர்த்த நேரம்

மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி 
ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை 
மிதுனம் - புதன் காலை 7:30 - 9 
கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6 
சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30 
கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30 
துலாம் - சனி காலை 10:30 - 12:00 
விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30 
தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12 
மகரம் - சனி காலை 8 - 10:30 
கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30 
மீனம் - வியாழன் காலை 3 -10:30.

III. குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்,

கிழமைகள் பகல் பொழுது இரவுப் பொழுது

ஞாயிறு 03.00 - 04.30; 09.00 - 10.30
திங்கள் 01.30 - 03.00; 07.30 - 09.00
செவ்வாய் 12.00 - 01.30; 12.00 - 01.30
புதன் 10.30 - 12.00; 03.00 - 04.30
வியாழன் 09.00 - 10.30; 01.30 - 03.00
வெள்ளி 07.30 - 09.00; 12.00 - 01.30
சனி 06.00 - 07.30; 10.30 - 12.00

IV. கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்,

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

எண் தமிழ் மாதம் தேதி (கள்)

1 சித்திரை 6,15
2 வைகாசி 7, 16, 17
3 ஆனி 1,6
4 ஆடி 2, 10, 20
5 ஆவணி 2, 9, 28
6 புரட்டாசி 16, 29
7 ஐப்பசி 6, 20
8 கார்த்திகை 1, 4, 10, 17
9 மார்கழி 6, 9, 11
10 தை 1, 2, 3, 11, 17
11 மாசி 15, 16, 17
12 பங்குனி 6, 15, 19

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 8 மார்ச், 2017

0106. அனுபவ பரிகாரங்கள்

0106. அனுபவ பரிகாரங்கள்

*மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!
*ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை
வழிபாடு செய்வது நல்லது.
*குடும்பத்தில் தாங்க முடியாத சிரமங்கள் ஏற்படும் போதும் உடனடியாக
அருகிலுள்ள ஆலயத்தில் மூலவரிற்கு தெடர்ந்து 48 நாடகள் தீபம் ஏற்றி வழிபட்டு
வர சிரமங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
*கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு
அபிசேகம் செய்தாலும் அரிசி மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் விரைவில்
கடன்கள் அடைப்படும்.
*வெள்ளிக்கிழமை சுக்ர ஓரைலயில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்து வேறுபாடு
நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
*தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி
வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
*குலதெயவ குறை உள்ளவர்கள் மண் அகலில் வாழைத்தண்டு நூல் திரியினால்
நல்லெண்ணை தீபம் வீட்டில் ஏற்றினால் குலதெய்வ குற்றமும் குலதெய்வ
சாபமும் நீங்கும்.
*சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில்
போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு
அரிசியில் புதையுமாறு செய்யவும்.
அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை இட்டு
புதையுமாறு வைக்கலாம்.
இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க
பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை காகைக்கு இட்டு விடலாம்.
*வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை
கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
*புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7,
சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு
புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
*தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை
மாலை சாற்றி வழிபடவும்
*கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற
கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல
பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள்,
பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
*சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட
தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
*21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
*சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி 
தூரத்திற்கு செய்வினை அணுகாது.
*பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு
ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
*சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால்
கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் . 
*வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து
குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும்.
குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு
குளிக்கலாம்.
*வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை
அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள்
பொடியைத் தடவியும் வைக்கலாம்.
இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.
பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை
சுற்றி தெருவில் வீசிவிடவும்.
*வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்…
*'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம்,
விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 5 மார்ச், 2017

0105. அர்ச்சனை,தீபம் வழிபாடு

0105. அர்ச்சனை,தீபம் வழிபாடு

மேஷம் சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்யவும்.
ரிஷபம் துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்வது நல்லது.
கன்னி துர்கை, தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.
விருச்சிகம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

மேஷம் அரளிப்பூவை வாங்கி மாலையாகக் கட்டி அருகிலிருக்கும்
முருகன் கோயிலிலுள்ள வேலுக்கு சார்த்தி அர்ச்சனை செய்து
வணங்கவும். 
ரிஷபம் மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
விருச்சிகம் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன்
கோயிலுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் அர்ப்பணித்து அர்ச்சனை
செய்து  வணங்கவும். 
விருச்சிகம் அருகிலிருக்கும் ஆலயத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா
சமேதராக உள்ள முருகபெருமானை அரளி மாலை சாத்தி அர்ச்சனை
செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்
உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.