புதன், 5 செப்டம்பர், 2018

0111. கோமதி சக்கரம் வழிபாடு

0111. கோமதி சக்கரம் வழிபாடு

கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும்.

சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

நோய் தீர்க்கும் வைத்திய கற்களாக கோமதி சக்கர கல் பயன்படுகிறது.

வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்

கோமதி சக்கர வழிபாடு சகல பாவமும் விலகும்.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை.
இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள்.

கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.

நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

1 . அன்னை பூஜை - தொப்பு = ஓம் ஹ்ரீம் மாதாவே நமக;
ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என 21 முறை கூறவும்.

2 . தந்தை பூஜை - மார்பு = ஓம் ஹ்ரீம் பிதாவே நமக; என 21 முறை கூறவும்.

3 . குரு பூஜை - குரு = ஓம் ஹ்ரீம் குருவே நமக; என 21 முறை கூறவும்.

4 . பித்ரு பூஜை - நெற்றிக்கண் = ஓம் ஹ்ரீம் பித்ரு தேவதாய நமக; என 21 முறை கூறவும்.

5 . குல தெய்வ பூஜை - உச்சி தலை = ஓம் ஹ்ரீம் குலதேவதாய நமக; என 21 முறை கூறவும்.

6 . பிரம்மா சரஸ்வதி (கல்வி) பூஜை - கட்டைவிரல், சுண்டுவிரல் இவ்விரு விரல்களால் மட்டும் =
ஓம் நமோ பிரம்ம தேவாய நமக என ஏழு முறை கூறவும்.
அடுத்து ஓம் ஐம் சரஸ்வத்யை நமக என ஏழுமுறை கூறவும்.

7 . லட்சுமி நாராயனர் (செல்வம்) பூஜை - வலது கை ஐந்து விரல்களாலும் பிடித்து மார்பு குழியில் வைத்து =
ஓம் நமோ நாராயணாய நமக என எட்டு முறை கூறி
பின்பு ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக என எட்டு முறை கூறி வணங்கவும்.

8 . சக்தி சிவன் (வீரம்) பூஜை - கட்டைவிரல் மோதிரவிரல் இவ்விரு விரல்களை மட்டும் =
ஓம் சிவசிவ ஓம் என ஒன்பது முறை கூறி
பிறகு ஓம் ஹ்ரீம் பராசக்தியே நமக என 9 முறை கூறி வணங்கவும்.

இப்போது தாங்கள் பூஜித்த 6, 7, 8-வது சக்கர வழிபாடு விஷ்ணு லோகத்தை வழிபட்ட பலன் கிடைக்க செய்யும்.

9 . பௌர்ணமி (ஆகாயம்) பூஜை - சிவலோக வழிபாடாகும் = நல்லதே நடக்கும்.
மந்திரத்தின் இறுதியில் நமக இதற்கு மட்டும் சேர்க்க வேண்டாம். =
ஓம் ஹரீம் மகா காலபைரவாய நமக என்னும் மந்திரத்தை 21 முறை கூறவும்.

10 . அமாவாசை (பாதாளம்) பூஜை - வலது கை ஐந்து முனை விரல்களாலும் எடுத்து பூஜிக்க வேண்டும். = 11 . ஏகாதசி (லாபம்) பூஜை - இடது கையால் எடுத்து வலது கை உள்ளங்கையில் உங்கள் மார்பு உயரத்திற்கு நேராக கையை நீட்டவும்.=
நான் நேசிக்கும் அத்தனை லாபங்களையும் தட்டாமல் தயவுடன் தாருங்கள் .
என தயவுடன் வேண்டுதலாக கேட்கவும்.
இதையே மந்திரமாக பாவித்து 9 முறை திரும்ப திரும்ப கூறவும்.

12 . சிவராத்திரி (சுகம்) பூஜை - 11 பூஜை முடித்து சக்கரத்தை கீழே வைக்காமல் அந்த இரு கையும் அப்படியே தொப்புளுக்குக்கீழ் கொண்டுவந்து வைக்கவும் =
அத்தனை சுகங்களையும் இப்பிறவியிலேயே வேண்டி கேட்கிறேன் தாருங்கள்.
சங்கு சக்கரமும், உலக சுழியும் தங்கள் வசம் உள்ளதுபோல் நான் பெற நினைக்கும் நியாயமான சந்தோஷங்களைத் தாருங்கள்
என இதையே மந்திரமாக பாவித்து 9 முறை கூறவும்.

13 . ஜென்ம பூஜை - வலது கை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளவும். =
இனி நான் நி - னைத்தவையெல்லாம் ஜெயமாகும்.
எல்லாம் என் வசியமே நம என 3 முறை கூறவும்.

பிறகு உங்கள் லக்கணம் தெரிந்தால்
ஓம் ஐம் (இவ்விடம் லக்கனபெயர் சொல்லவும்) உயிராய நம
உதாரனமாக உங்கள் லக்கணம் மேஷம் என்றால் ஓம் ஐம் மேஷம் உயிராய நம என 9 முறை கூறவும்.

அடுத்து ராசி தெரிந்தால்
ஓம் ஸ்ரீம் ராசிபெயர் உடலாய நம
என 9 முறை கூறவும். அடுத்து உங்கள் பெயர் மந்திரம் 21 முறை கூறவும்.

ஓம் ஹ்ரீம் தங்கள் பெயர் ஆத்மாவே நம
(மேற்க்கண்டதுதான் பெயர் மந்திரம் யாருடைய பெயரையும் மந்திரத்தின் நடுவில் சேர்த்து சொல்லலாம் .இது யாவருக்கும் பொதுவானதாகும்) .

இவ்வாராக பெயர் மந்திரம் 21 முறை கூறவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: