புதன், 7 நவம்பர், 2018

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

0125. பஞ்சாங்கம் படியுங்கள்

சித்திரை முதல் நாளன்று வீடுகளை சுத்தம் செய்து வாசல் படிகளுக்கு மஞ்சள் - குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி சித்திரைத் தாயை நாம் ஒவ்வொருவரும் வரவேற்க வேண்டும்.
சித்திரை முதல் நாள் காலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தூய ஆடைகளை அணிய வேண்டும்
பிறகு அந்த வருட பஞ்சாங்கத்திற்கு மஞ்சள் தடவி, பூஜை அறையில் இறைவனின் சந்நிதானத்தில் வைக்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து விநாயகர், நவக்கிரகஙக்ள், குல தெய்வம் ஆகியவைகளுக்கு பூஜை செய்து வழிபட வேண்டும்.
பின் பூஜையில் வைத்த பஞ்சாங்கத்தை எடுத்து அதில் உள்ள பலன்களைப் படிக்க வேண்டும்.
இன்றும் சில கிராமங்களில் வீட்டு திண்ணை பொது மண்டபங்களில் பெரியவர்கள் இத்திருநாளன்று அமர்ந்து பஞ்சாங்கம் படிக்க மற்றவர்கள் கேட்கும் வழக்கம் உள்ளது.

சித்திரை முதல் நாள் பஞ்சாங்கம் படிப்பதால் ஏராளமான பலன்கள் கிடைக்கும்.
விரதத்தைப் பற்றிச் சொன்னால், ஆயுள் விருத்தியும், திதியைப் பற்றிச் சொன்னால், செல்லச் செழிப்பும் காரணத்தை பற்றிச் சொன்னால் பலவித காரிய நிவர்த்திகளும் உண்டாகும்.
அதே போல, நட்சத்திரங்களைப் பற்றிச் சொன்னால் பாவங்கள் தீரும்.
யோகத்தைப் பற்றிச் சொன்னால், வியாதிகள் குணமடையும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: