வெள்ளி, 2 நவம்பர், 2018

0123. சாளக்கிராம வழிபாடு

0123. சாளக்கிராம வழிபாடு

கல்லிலும் புல்லிலும் தூணிலும் துரும்பிலும் கடவுளைக் கண்டவர்கள் நம் முன்னோர்கள்.
அதன்படி சாளக்கிராம ஸ்படிக கற்களாக வடிவம் கொண்ட மகாவிஷ்ணுவை வழிபடுவது காலம் காலமாக பல குடும்பங்களில் இருந்து வரும் ஒரு பழக்கம்.
சாளக்கிராமத்தினால் உருவாக்கப்பட்ட ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், சந்தன கோபாலன் போன்ற தெய்வ மூர்த்தங்கள் உண்டு. எல்லாக் கோயில்களிலும் இந்தச் சாளக்கிராம பூஜை முக்கிய இடம் பெறுகிறது.
சாளக்கிராம பூஜை முடிந்த பிறகுதான் மூலவருக்கும் இதர தெய்வங் களுக்கும் பூஜை செய்வார்கள்.
பச்சரிசியை ஒரு தட்டில் கொட்டி அதன்மீது சாளக்கிரா மத்தை வைத்துச் செல்வது சிலர் வழக்கம்.
பால், நீர் அபிஷே கம் செய்து சாதம், பருப்பு, பாயசம், நெய் என்று நைவேத்யம் செய்யலாம்.
சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்த நீரை தலையில் தெளித்துக் கொண்டால் வைகுண்ட லோகப் பேறு கிடைக்கும் என்பர். சாளக்கிராம கற்கள் பின்னப்பட்டு உடைந்து விட்டாலும் அதை செப்பு, வெள்ளி கம்பிகளில் இணைத்து வைத்து பூஜைக்குப் பயன்படுத்தலாம். அதை பூஜையிலே வைத்து அபிஷேக ஆராதனை செய்யலாம்.
ஆடி மாதம் சாளக்கிராம வழிபாடு

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

கருத்துகள் இல்லை: