புதன், 16 பிப்ரவரி, 2011

004. விநாயக‌ர் அகவல்

004. விநாயகர் அகவல்

மேஷம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
மிதுனம் விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வழிபட்டு அர்ச்சனை
அபிஷேகம் செய்யுங்கள்.
கடகம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
சிம்மம் விநாயகர் அகவலை தினமும் சொல்லுங்கள். 
விருச்சிகம் விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
தனுசு விநாயகர் அகவல் சொல்லுங்கள்.
கும்பம் விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வழிபட்டு அர்ச்சனை,
அபிஷேகம் செய்யுங்கள்.
கும்பம் விநாயகர் அகவல் பாராயணம் செய்யலாம்.
மீனம் தினசரி விநாயகர் அகவல் படிக்கலாம்.

எழுதியவர்: ஔவையார்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

``ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே''

அதாவது விநாயகரை மனமுருக வேண்டி
வழிபடுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும்
அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும்
என்பதையே இது உணர்த்துகிறது.

விநாயகரை வழிபடுவோருக்கு வினைகள் ஏதும் வராது.
ஐந்து கரத்தானை வணங்குவோருக்கு ஞானம் பெருகி,
நலம் பல பெருகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

003. விநாயகரு‌‌க்கு கொழு‌க்க‌ட்டை

003. விநாயகரு‌‌க்கு கொழு‌க்க‌ட்டை

கடகம் விநாயகருக்கு கொழுக்கட்டை நைவேத்யம் செய்து வணங்கவும்.

விநாயகரு‌‌க்கு ரொ‌ம்பவு‌ம் ‌பிடி‌த்தமான மோதக‌த்தை‌த் தயா‌‌ர்
ப‌ண்‌ணி‌க் கொ‌ள்ளலா‌‌ம்.
அதாவது தே‌ங்கா‌ய் பூ‌ரண‌த்தை உ‌ள்ளே வை‌த்து
செ‌ய்ய‌ப்படும் கொழு‌க்க‌ட்டை.
இ‌திலு‌ம் ஒரு த‌த்துவ‌ம் இரு‌க்‌கிறது.
மேலே இரு‌க்கு‌ம் மாவு‌ப் பொரு‌ள்தா‌ன் அ‌ண்ட‌ம்.
உ‌ள்ளே இரு‌க்கு‌ம் வெ‌‌ல்ல‌ப் பூ‌‌ரண‌‌ம்தா‌ன் ‌பிர‌ம்ம‌ம்.

அதாவது நம‌க்கு‌ள் இரு‌க்கு‌‌ம் இ‌‌னிய குண‌ங்களை மாயை
மறை‌க்‌கிறது.
இ‌ந்த மாயையை உடை‌த்தா‌ல் அதாவது வெ‌ள்ளை மாவு‌ப்
பொருளை உடை‌த்தா‌ல், உ‌ள்ளே இ‌னிய
குணமான வெ‌ல்ல‌ப் பூ‌ரண‌ம் நம‌க்கு‌க் ‌கிடை‌க்கு‌ம்
(விநாயகரு‌க்கு முத‌ன் முறையாக இ‌ந்த‌க் கொழு‌க்க‌ட்டையை ‌
நிவேதன‌ம் செ‌ய்தது வ‌சி‌ஷ்‌ட மு‌னிவருடைய
மனை‌வியான அரு‌ந்த‌தி).

பி‌ள்ளையாரு‌க்கு கொழு‌க்க‌ட்டை ம‌ட்டு‌மி‌ல்லாம‌ல்,
அவரவ‌ர் வச‌தி‌‌க்கே‌ற்ப எ‌ள்ளுரு‌ண்டை, பாயச‌ம் எ‌ன்று‌ம்
நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌‌ம்.
பா‌ல், தே‌ன், வெ‌ல்ல‌ம், மு‌ந்‌தி‌‌ரி, அவ‌ல் என்று ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் ‌
சி‌றிதளவு எடு‌த்து ஒ‌ன்றாக‌க் கல‌ந்து அதையு‌ம் நைவே‌த்ய‌ம் செ‌ய்யலா‌ம்.
நிவேதன‌ப் பொரு‌ட்க‌ள் ஒ‌வ்வொ‌ன்‌றிலு‌ம் 21 எ‌ன்ற
கண‌க்‌கி‌ல் ‌சில‌ர் வை‌ப்பா‌ர்க‌ள்.
ஆனா‌ல், எ‌ண்‌ணி‌க்கை மு‌க்‌கிய‌மி‌ல்லை.
அவரவ‌ர் ஈடுபாடுதா‌ன் மு‌க்‌கிய‌ம். ‌
பிறகு க‌ற்பூர‌ம் கா‌ட்டி ‌விர‌த‌த்தை முடி‌க்கலா‌ம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

002. விநாயகரை வழிபடுதல்

002. விநாயகரை வழிபடுதல்

விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை
சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு
பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும்.
வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால்
வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப்
பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும்.
தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே
நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க
வேண்டும்.
அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப
வேண்டும்.
விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.

தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?

அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை
காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார்.
பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து
நின்றார்.
கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.
அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை
உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.
அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக்
கொண்டார்.
அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம்
வந்தது.

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி
தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான்.
விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார்.
அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு
பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர்.
அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும்
துவங்கியது.

தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?

மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த
விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார்.
ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத்
தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு
சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது
வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார்.
எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை
உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு.
தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன்
மூலம் தகர்த்தார்.
அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும்
ஏற்பட்டது.
சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

விநாயகருக்கு தேங்காய் மாலை

விநாயகருக்கு தேங்காய் மாலை அணிவித்து வணங்கி
வந்தால் திருமண தடைகள் அகழும்.
[5 OR 7 OR 9 OR 11 தேங்காய்]

அருகம்புல் மாலை ஏன்?

அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி
வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித்
தகித்து விடுவான்.
இவனை பிரம்மாவாலும் ,தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை.
அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர்.
சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி
கட்டளையிட்டார்.
விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார்.
அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான்.
விநாயகர் அனலாசுரனுடன் மோதினார்.
ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.
கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான்.
விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை.
அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர்
அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின்
தலை மேல் வைத்தார்.
அவரது எரிச்சல் அடங்கியது.
அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான்.
அன்று முதல் தன்னை
அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர்
கட்டளையிட்டார்.

கேது

விநாயகரை வழிபட்டால் வந்தால் கேதுவால் ஏற்பட்ட
திருமண தடைகள் அகழும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

01. பொங்கல் நல்வாழ்த்து

01. பொங்கல் நல்வாழ்த்த பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!

மங்களம் பொங்குக!

பொங்கும் மங்களம்

பொங்கல் வைக்க நல்ல நேரம்:  காலை- 7.30 மணி முதல் 8.30 மணி
வரை

பொங்கல் தத்துவம்

பொங்கல் திருவிழா ஏன் கொண்டாடப்படுகிறது என்றால், பொங்கலுக்கு
முதல் நாளான போகிப்பண்டிகையின் போது நம்மிடமுள்ள கெட்ட
குணங்கம் போகின்றன.
பொங்கல்  பண்டிகையன்று நம்மிடம் நல்ல குணங்கள் பொங்கிப் பெருக
ஆரம்பிக்கின்றன.
மறுநாள் காணும் பொங்கல் எதிர்வரும் (காணும்) காலங்களில் நல்ல
எண்ணங்கள் எங்கும் எதிலும் நீடித்து நிற்க இறைவன் அருள்புரிய
கொண்டாடப்படுகிறது.

ஆரோக்கியம் தரும் ஆதித்தன்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி.
உலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் உடல்
ஆரோக்கியம் இல்லாவிட்டால் செல்வத்தால் பயனில்லை.
சுவரை வைத்துத் தானே சித்திரம் என்றும்கூட சொல்வதுண்டு.
அதனால் மனிதவாழ்விற்கு மன, உடல் ஆரோக்கியம் மிகவும்
அவசியம்.
இதற்குரிய தெய்வமாக சூரியன் இருக்கிறார்.
இவருக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் Sun Day செந்தாமரை மலரிட்டு
வணங்கினால் ஆரோக்கியம் உண்டாகும்.
கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யாதே என்பது சூரியனின்
பெருமையை எதிர்மறையாகக் கூறுவதாகும்.
இப்பழமொழி கண் பெற்ற பயனே சூரியனைக் கண்டு மகிழ்வதற்கு என்று
குறிப்பிடுகிறது

சூரியனை வழிபடும் பொங்கல் திருநாள்

சூரியன் ஒரு ராசிக்குள் நுழைகிற நாள் தான் அந்தந்த தமிழ் மாதத்தின்
முதல் நாள்.
சூரியன் ஒரு ராசிக்குள் எத்தனை நாட்கள் இருக்கிறானோ அதுவே அந்த
மாதத்தின் மொத்த நாட்கள்.
இப்படி சூரியன் மகர ராசிக்குள் நுழைகிற நாளே “பொங்கல் திருநாள்’.

தை மாதத்தின் முதல் நாள் அன்று தான் சூரியன் வடக்கு நோக்கிய
பயணத்தைத் தொடர்கிறான்.
இதை உத்தராயணம் என்கின்றனர்.
மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மக்கள் சூரியனை வழிபட்டு
வருகின்றனர்.
முன்னோர் மரபில் நம்பிக்கை உள்ள குடும்பங்களில் பொங்கல் நாளன்று
அதிகாலையில், அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வீட்டில்
பொங்கல் இடுவார்கள்.
கோவில்களில் சூரியனுடைய வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது.
இவற்றுள் காலத்தால் முந்தியது மாமல்லபுரத்தில் தர்மராஜா ரதத்தில்
உள்ளது.
11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கிருக்கி மாவட்டத்தில் கங்கை
கொண்ட சோழபுரத்தில் கட்டிய கலை நுட்பம் நிறைந்த ஒப்பற்ற
கோவிலில் சூரிய இயந்திரம்
ஒன்றை அமைத்துள்ளான்.

குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டத்தில் சூரியனுக்கு ஒரு கோவில்
கட்டி இருக்கிறான்.
கன்னியாகுமரி கோவிலில் சூரியனுடைய ஒளி அம்மனின் மூக்குத்தியில்
படுகிறது.
ஆவுடையார் கோவில், திருப்பாதிரிப் புலியூர், கும்பகோணம் கோவில்
ஆகியவற்றில் நாள்தோறும் காலையில் சூரிய ஒளி இறைவன் மீது
படுகிறது.

இதன் மூலம் கோவில் அமைப்பில் சூரியனுக்கே முதல் முக்கியத்துவம்
என்று தெரிகிறதல்லவா.
ஒருநாள் என்பது சூரிய உதயம் தொடங்கி மறுநாள் சூரிய உதயம் வரை
உள்ள காலப் பகுதியாகும்.
“உதய நாழிகை’ என்பதைக் கொண்டே ஒருநாளின் தொடக்கத்தை
கணக்கிடுகின்றனர்.
இவ்வாறாக சூரியனை முன்னிலைப் படுத்தியே இந்துக்களின் பண்டிகைகள்
கொண்டாடப் படுகின்றன.
இதில் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.

சூரியனுக்கு 12 பெயர்

ஆதித்தன், பாஸ்கரன், ரவி, ஞாயிறு என்று சூரியனுக்கு பலபெயர்கள்
உண்டு.
ரஸ்மி புராணத்தில் சூரியனுக்கு பன்னிரண்டு பெயர்கள்
சொல்லப்பட்டுள்ளது.
மித்திரன், ரவி, சூரியன், பானு, ககான், பூஷ்ணன், ஹிரண்யகர்பன், மரீசி,
ஆதித்யன், சவித்ரு, அர்க்கன், பாஸ்கரன் என்பவையே அவை.

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -
சூரியன் - சிவன்

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன்
(முருகப் பெருமான்)

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

அறுவடைத் திருநாள்

*தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாளாக
கொண்டாடி மகிழ்கிறோம் அறுவடைத் திருநாள் உலகில் 22
நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்காவில் நன்றி கூறும் திருநாளாக, ஜப்பானில் புதிய சுவை
திருநாளாக, சீனாவில் “சங் செய்’ என்ற பெயரில் இப்படி பல்வேறு
பெயர்களில் அறுவடைத் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

* நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், ஜப்பானியர்கள்
குதிரைக்கு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.

நன்றி காட்டும் நல்லநாள்

உழவர்கள் நெல் அறுவடை செய்து மகிழ்ந்திருக்கும் வேளையில்,
விவசாயத்திற்கு துணைபுரிந்த சூரியன், பணியாட்கள் மற்றும்
கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் அமைந்த விழா
பொங்கல் விழா.
சூரியன் தன் செங்கதிர்களால் உலகிற்கு ஒளியூட்டுகிறார்.
கடல்நீரை ஆவியாக்கி மழை பொழியச் செய்கிறார்.
கிருமிகளை அழித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டுகிறார்.
மண்ணில் உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.
அவருக்குரியதாக இந்த நாள் அமைந்துள்ளது.
சூரியனுக்குரிய நாளாக தைப்பொங்கலும், கால்நடைகளுக்குரிய நாளாக
மாட்டுப்பொங்கலும், உறவினர்,நண்பர்கள், வேலையாட்களைப்
பாராட்டும்விதத்தில் காணும்பொங்கலும் அமைந்துள்ளன.

‘பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக கொண்டாடி வரும் தமிழ்நாட்டு
மக்கள், இனி தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை
இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா
என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு,
வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட,
புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன்மானம் போற்றிப் பாடியும்
ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும், தமிழ்ப் புத்தாண்டு இதுவெனத்
துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிவர்’ என்று
முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார்.

அதையொட்டி தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல்
திருநாளை தமிழ் மக்கள் சிறப்பாகவும், இனிப்பாகவும் சர்க்கரைப்
பொங்கலுடன் கொண்டாட இருக்கிறார்கள்.

சர்க்கரைப் பொங்கல்

தேவையான பொருட்கள்

2 டம்ளர் பச்சரிசி
3/4 டம்ளர் பாசிப்பருப்பு
3 டம்ளர் பால்
3 டம்ளர் வெல்லம் (தூள் செய்தது)
25 கிராம் முந்திரிப் பருப்பு
25 கிராம் திராட்சை
1 முடி தேங்காய்
மிகச் சிறிய துண்டு பொடி செய்தது பச்சை கற்பூரம்
200 கிராம் நெய்
6 ஏலக்காய் (பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் பாலும், தண்ணீருமாக சேர்த்து 8 டம்ளர் தண்ணீர்
வைத்துக் கொதிக்க விடவும்.

அரிசியையும், வறுத்த பாசிப்பருப்பையும் நன்கு களைந்துக் கொள்ளவும்.

நன்றாக கழுவிய அரிசியையும், பாசிப் பருப்பையும், கொதிக்கும் பால்
கலந்த தண்ணீரில் போட்டு, அடிக்கடி கிளறி விடவும்.

நன்றாக தண்ணீர் சுண்டி, குழைய வெந்தபின் வெல்லத்தைப் போட்டு,
பாகாகி கெட்டியாகும் வரை அடுப்பை மெல்ல எரியவிட்டு,அடிப்பிடிக்காமல்
கிளறி விடவும்.

நான்கு ஸ்பூன் நெய்யை அதில் சேர்த்தால் அடிப்பிடிக்காது.

வெல்லம், கெட்டியாகிச் சேர்ந்தபின், முந்திரிப் பருப்பு, திராட்சை, தேங்காய்
துருவல் இவைகளை மீதமுள்ள நெய்யில் வறுத்துப் போட்டு, ஏலப்பொடி,
பச்சைக் கற்பூரப்பொடி போட்டு மீதமுள்ள நெய்யை விட்டு கிளறி
இறக்கவும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்

சிறப்பான தை முகூர்த்தம் சுபநிகழ்ச்சி நடத்துவதற்குரிய மாதங்களில்
முகூர்த்தங்கள் அதிகமுள்ள மாதமாக தை அமைந்துள்ளது.
பெண்ணுக்கு திருமணம் பேசும் பெற்றோர், வரும் தையில்
கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சொல்வது வழக்கம்.
அக்காலத்தில் மார்கழியில் பெரும்பாலும் அறுவடை முடிந்துவிடும்.
அதனால், உழவர்கள் கையில் தை மாதம் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
இதைப் பயன்படுத்தி கல்யாணச் செலவு செய்யலாம் என்பதால் தான் தை
பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி உண்டானது.
இப்பழமொழிக்கு வேறொரு பொருளும் சொல்வதுண்டு.
வயலில் அறுவடை முடிந்து விட்டதால், பயிர்பச்சை இல்லாமல் வரப்பு
நடப்பதற்கு ஏதுவாக காலியாக இருக்கும்.
அதனையும் தைபிறந்தால் வழிபிறக்கும் என்பர்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

00. விநாயகர் மூர்த்தங்கள் :

00. விநாயகர் விநாயகர் என்ற பெயர் இந்து சமய ஆண்பால் கடவுள்களுள் ஒன்றான யானை முகத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள உருவத்தை குறிக்கும். இந்துக்களின் புராணக்கதைகள், இக்கடவுள், மற்றைய இந்துக்கடவுள்களான சிவன், பார்வதி ஆகியோரின் பிள்ளையாக சித்திரிக்கிறது. முருகன் எனும் கடவுளின் அண்ணனாகவும் இக்கடவுள் கருதப்படுகிறது. இக்கடவுளின் வாகனமாக மூஞ்சூறு கருதப்படுகிறது. 32 விநாயகர் மூர்த்தங்கள் : உச்சிஷ்ட விநாயகர் உத்தண்ட விநாயகர் ஊர்த்துவ விநாயகர் ஏக தந்த விநாயகர் ஏகாட்சர விநாயகர் ஏரம்ப விநாயகர் சக்தி விநாயகர் சங்கடஹர விநாயகர் சிங்க விநாயகர் சித்தி விநாயகர் சிருஷ்டி விநாயகர் சுப்ர பிரசாத விநாயகர் சுப்ர விநாயகர் தருண விநாயகர் திரியாட்சர விநாயகர் துண்டி விநாயகர் துர்கா விநாயகர் துவி முக விநாயகர் துவிஜ விநாயகர் நிருத்த விநாயகர் பக்தி விநாயகர் பால விநாயகர் மகா விநாயகர் மும்முக விநாயகர் யோக விநாயகர் ரணமோசன விநாயகர் லட்சுமி விநாயகர் வர விநாயகர் விக்ன விநாயகர் வீர விநாயகர் வெற்றி விநாயகர் ஹரித்திரா விநாயகர் மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும்.
நன்றி, R.Megala Gopal.