செவ்வாய், 28 மே, 2019

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர் ஆகலாம்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

லஷ்மி கடாஷம்

லஷ்மி கடாஷம்

வெள்ளிகிழமை காலை சுக்ரஓரையில் சுக்ரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33 வாரம் வழிபடசெல்வம் கிடைக்கும்.

வெள்ளி, 24 மே, 2019

தாரா தந்திர பூஜை

தாரா தந்திர பூஜை

மந்திரம் அனைத்து தாராக்களும் பொதுவான மந்திரமாகக் கருதப்படுகிறாது

ஓம் தாரே துத்தாரே துரே ஸ்வாஹா

வெள்ளைத் தாரா தேவிக்கு மேற்கூறிய மந்திரத்துடன் மேலும் சில சொற்கள் இணைக்கப்படுகின்றன

ஓம் தாரே துத்தாரே துரே மம ஆயு: புண்ய ஞான புஷ்டிம் குரு ஸ்வாஹா

தாராவின் பீஜாக்ஷரம் தாம்( ஆகும்

தாரா தியானம்

விச்வவ்யாபக வாரிமத்ய விலஸத் ச்வேதாம்புஜன்மஸ்திதாம்
கர்த்ரீம் கட்க கபால நீலநளினை: ராஜத்கரா மிந்துபாம்
காஞ்சீ குண்டல ஹார கங்கணலஸத் கேயூரமஞ்ஜீரதாம்
ப்ராப்தைர் நாகவரை: விபூஷிததனும் ஆரக்த நேத்ரத்ரயாம்
பிங்காக்ரைகஜடாம் லலத்ஸ்வரஸனாம் தம்ஷ்ட்ராகராளானனாம்
சர்ம த்வைபிவரம் கடௌ விதததீம் ச்வேதாஸ்தி பட்டாளிகாம்
அக்ஷோப்யேண விராஜமான சிரஸம் ஸ்மேரானனாம் போருஹாம்
தாராம் சாவஹ்ருதாஸனாம் த்ருடகுசாம் அம்பாம் த்ரிலோக்யா: ஸ்மரேத்
தாரா காயத்ரி
ஓம் தாராயை வித்மஹே மஹோக்ர தாராயை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்.

வெள்ளி, 17 மே, 2019

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

நீர் நிலைகளில் இருந்து வருபவை அனைத்தும் மஹாலக்ஷ்மியின் அம்சம். பின்பு தொழில் வியாபாரம் சிறக்க நன்று பிரார்த்தனை செய்து அந்த கற்களுக்கு தயிர் அன்னம் சிறிது நிவேதனம் செய்ய வேண்டும்.

மறு நாள் அவற்றை அனைத்தையும் எடுத்து அதே போன்று ஓடும் நீர் நிலைகளில் போட்டு விட வேண்டும். இதை வெள்ளியன்று செய்தால் உத்தமம்.

பிரார்த்தனை மட்டுமே செய்ய வேண்டும்.

பரிகாரம் ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் சிறக்க பரிகாரம் செய்யும்

தொழில் மற்றும் வியாபாரங்களில் வெற்றி பெற நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன், “வாழைப்பழம், பேரிச்சம்பழம், முந்திரி, தேன், கல்கண்டு” போன்றவற்றை ஒன்றாக கலந்து “பஞ்சாமிர்தம்” தயாரிக்க வேண்டும். பின்பு உங்கள் பூஜையறையில் மகாலட்சுமியின் படத்திற்கு முன்பு பஞ்சமுக தீபம் ஏற்றி, வணங்கி பஞ்சாமிர்தத்தை லட்சுமிக்கு நிவேதனம் வைத்து, அதை பிரசாதமாக உண்ண வேண்டும். பிறகு அந்த பிரசாதத்தை உங்களிடம் பணிபுரியும் பணியாளர்கள் உண்ண கொடுக்க வேண்டும். இந்த பரிகாரம் உங்கள் தொழிலில் எப்போதும் நஷ்டம் ஏற்படாமல் காக்கும். தினமும் இந்த பரிகாரத்தை செய்ய முடியாதவர்கள் வாரத்தில் வெள்ளிக்கிழமையன்று மட்டும் செய்யலாம்.

செவ்வாய், 14 மே, 2019

ஸ்ரீ வாசுகி ஜெயந்தி

ஸ்ரீ வாசுகி ஜெயந்தி 13/05/2019

Sree Naga Kannika Yantra ஸ்ரீ-நாக கன்னிகா யந்திரம்

ராகு தோஷத்தினால் பாதிக்கப்பட்டு திருமணமாகாத பெண்கள், ஞாயிறு ராகு காலத்தில் (மாலை 4.30 - 6.00) துர்க்கையை தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. இதுபோல் தொடர்ந்து 11 வாரம் செய்து 12-வது வாரம் குங்கும அர்ச்சனை செய்யவும். திருமணம் கூடிவரும். திருமணமானவர்கள் இல்வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து விடுதலை பெற வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் 10.30 - 12.00) தீபம் ஏற்றி வழிபடுதல் நன்று. 108 எலுமிச்சம் பழத்தை மாலையாக்கி அம்மனுக்கு சாற்றி நாகதேவதையை சந்தோஷப்படுத்தலாம்.

ஆடி மாதம் முழுவதும் நாகதேவி பூஜை என்னும் சர்ப்ப பூஜை செய்வார்கள்.

பால் அபிஷேகம் செய்து மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு, மலர் தூவி அலங்காரம் செய்து மஞ்சள் வஸ்திரத்தை (புதிதாக) உடுத்தி, தேங்காய் உடைத்து, வெற்றிலைப் பாக்கு, பழம், சர்க்கரைப் பொங்கலுடன் கற்பூர ஆரத்தி எடுத்து மனதார பூஜித்து வந்தால் சகல நாக தோஷமும் தீரும்.

கணவன்-மனைவிக்குள் சண்டை அடிக்கடி தொடர்ந்து வரும் நிலை உள்ளவர்கள் வெள்ளி அல்லது செம்பினால் செய்த ஒன்றைத் தலை நாக தேவதை உருவத்தை, வீட்டில் பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம் செய்து மலர்களால் அல்லது குங்குமத்தால் 41 நாட்கள் அர்ச்சனை செய்து அதை திருநாகேஸ்வரம் கோவில் உண்டியலில் சேர்ப்பித்தால் பலன் கிடைக்கும்.

நாகங்களின் கடவுளாக விளங்குகிறார் மானசா தேவி. ஒரு முறை கடுமையான விஷத்தில் இருந்து சிவபெருமானை மானசா காப்பாற்றியுள்ளார் என வங்காள மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். தன் பக்தர்கள் மீது மிகுந்த பாசம் மற்றும் கருணையை கொண்டுள்ளார் அவர். தன்னை வழிப்பட மறுப்பவர்களிடம் அதே அளவிற்கு சீற்றத்தையும் காண்பிப்பார்.

மழைக்காலத்தில் தான் மானசா தேவியை வணங்குவார்கள். அதற்கு காரணம் இந்நேரத்தில் தான் பாம்புகள் மிகவும் முனைப்புடன் செயல்படும். மானசா தேவிக்கான சடங்குகளை இந்தியாவில் உள்ள வட கிழக்கு வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகமாக பின்பற்றுகின்றனர். கருவளம், பாம்பு கடியில் இருந்து குணமடைய மற்றும் பெரியம்மை, கொப்புளிப்பான் போன்ற வியாதிகளில் இருந்து குணமடையவும் இவரை வணங்குகின்றனர்.

திங்கள், 13 மே, 2019

Lunar Worship in Megala House Worship worship 27/06/2018

Megala House Poojairoom

வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன

வெள்ளிப் பாத்திரங்களை பளிச்சென்று மின்ன

வீட்டில் உள்ள வெள்ளிப் பாத்திரங்களை மீண்டும் புதியது போல் மின்னச் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூஜை அறையில் உள்ள வெள்ளிக் குத்துவிளக்கு மற்றும் வெள்ளி சிலைகளை சுத்தம் செய்வது வழக்கமாக இருக்கும். அப்படி அவற்றை சுத்தம் செய்யும் போது, அதனை பளிச்சென்று கொண்டு வர நன்கு சோப்பு பயன்படுத்தி தேய்ப்போம்.

இருப்பினும் அவற்றால் நம் உடலில் உள்ள சக்தி தான் குறையுமே தவிர, வெள்ளிப் பொருட்களானது பளிச்சென்று ஆகாது. ஆனால் வெள்ளிப் பொருட்களை ஒருசில இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று மின்னச் செய்யலாம். இங்கு வெள்ளிப் பொருட்களை புதிது போன்று பளிச்சென்று மின்ன செய்யும் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில் சில நிமிடங்கள் ஊறவைத்து குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போதுமானது.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

மருத்துவ புத்தரின் பூஜை

மருத்துவ புத்தரின் பூஜை

பெளத்தர்கள் பெளர்ணமியை முன்னிட்டு புத்த பூஜையில் ஈடுபட்டனர்.

பல அறிஞர்களின் வீ டுகளும் அலுவலக அறைகளும் புத்தரின் அழகிய தோற்றம் உடைய சிலைகளையோ அல்லது படங்களையோ கொண்டிருக்கின்றன.

Laughing Buddha சிரிக்கும் புத்தர்

கிழக்கு திசையில் வைத்தல்

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும். பொதுவாக குடும்பத்திற்குள் உள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சச்சரவு, வாக்குவாதம் மற்றும் சண்டைகள் அடிக்கடி ஏற்பட நேரிடலாம். வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரங்களில், இவரை கிழக்கு திசையில் வைப்பதால், உங்களுக்கு போதிய நிவாரணத்தை அது அளிக்கும்.

தென் கிழக்கு திசையில் வைத்தல்

சிரிக்கும் புத்தரை அறை, ஹால், படுக்கையறை அல்லது உணவருந்தும் அறையின் தென் கிழக்கு திசையில் நீங்கள் வைத்தால், மிகுதியான அளவில் எதிர்ப்பாராத அதிர்ஷ்டத்தையும், வீட்டின் வருமானத்தை உயர்த்திடவும் அவர் உதவிடுவார். சிரிக்கும் புத்தரை தென் கிழக்கு பகுதியில் வைத்தால், உயர்ந்த பதவிகளில் வசிப்பவர்களும், அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்கள் எதிரிகளின் நடவடிக்கைகளைத் தடுக்கும் ஆற்றலை பெறுவார்கள். இந்த திசையில் வைப்பது மன அழுத்த நிவாரணியாக செயல்பட்டு, மனநிலையை மேம்படுத்தும்.

வேலை மேஜையின் மீது வைத்தல்

சிரிக்கும் புத்தரை அலுவலக மேஜையின் மீதோ வீட்டிலுள்ள வேலை மேஜையின் மீதோ வைத்தால், உங்களுக்கு தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் கிட்டும். மாணவர்கள் இச்சிலையை தங்களின் படிப்பு மேஜையின் மீது வைத்துக் கொண்டால், தங்களது கல்வி செயல்திறனில் அதிக செறிவு ஏற்படும். கவனச் சிதறல் இல்லாமல் அவர்களால் மனதை ஒருநிலைப்படுத்தி படிக்க முடியும். அதேப்போல் இதனை உங்களது அலுவலக மேஜையின் மீது வைக்கும் போது உடன் பணிபுரிபவர்கள், கீழ்மட்ட ஊழியர்கள் மற்றும் மேல்மட்ட ஊழியர்களிடம் சண்டை சச்சரவுகள் தடுக்கப்படும்.
அதிர்ஷ்டத்தை கொண்டு வர இதனை வீட்டின் தலை வாசல் கதவை நோக்கி வைக்க வேண்டும்.

பைசையகுரு சூத்திரத்தில் மருத்துவ புத்தரின் மந்திரங்கள்

:நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்யே பைஷஜ்ய-சமுத்கதே ஸ்வாஹா

namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye bhaiṣajya-samudgate svāhā

ஓம் நமோ பகவதே பைஷஜ்யகுரு வைடூர்யப்ரபராஜாய ததாகதாய அர்ஹதே சம்யக்சம்புத்தாய தத்யதா: ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

oṃ namo bhagavate bhaiṣajyaguru vaidūryaprabharājāya tathāgatāya arhate samyaksambuddhāya tadyathā: oṃ bhaiṣajye bhaiṣajye mahābhaiṣajye bhaiṣajye rāja samudgate svāhā

ஓம் பைஷஜ்யே பைஷஜ்யே மஹாபைஷஜ்யே பைஷஜ்யே ராஜ சமுத்கதே ஸ்வாஹா

ஓம் ஹுரு ஹுரு சண்டாளி மாதங்கி ஸ்வாஹா

தீய கருமங்களை நீக்கவும், நோய்களைக் குணப்படுத்தவும் மருத்துவ புத்தரின் மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது.

ஒரு கோப்பை தண்ணீரின் மீது 108 முறை மருத்துவ புத்தரின் மந்திரத்தை தீமையகல ஓதும் பொழுது (அகலோதுதல்), அந்த தண்ணீர் மருத்துவ புத்தரால் ஆசீர்வதிக்கப்பட்டதாகிறது. அந்த நீரைப் பருகினால் நோய்கள் குணமாகவதாக திபெத்தியர்கள் நம்புகின்றனர்

புத்த பூர்ணிமா

மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.