வெள்ளி, 2 நவம்பர், 2018

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

0121. ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திர சத நாமாவளி

ஓம் ப்ரக்ருத்யை நம:
ஓம் விக்ருத்யை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம:
ஓம் ச்ரத்தாயை நம:
ஓம் விபூத்யை நம:
ஓம் ஸுரப்யை நம:
ஓம் பரமாத்மிகாயை நம:
ஓம் வாசே நம:
ஓம் பத்மாலயாயை நம:

ஓம் பத்மாயை நம:
ஓம் சுசயே நம:
ஓம் ஸ்வாஹாயை நம:
ஓம் ஸ்வதாயை நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் ஹிரண் மய்யை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் நித்ய புஷ்டாயை நம:
ஓம் விபாவர்யை நம:

ஓம் அதித்யை நம:
ஓம் தித்யை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் வஸுதாயை நம:
ஓம் வஸுதாரிண்யை நம:
ஓம் கமலாயை நம:
ஓம் காந்தாயை நம:
ஓம் காமாயை நம:
ஓம் க்ஷிரோதஸம்ப வாயை நம:
ஓம் அனுக்ரஹபதாயை நம:

ஓம் புத்யை நம:
ஓம் அநகாயை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:
ஓம் அசோகாயை நம:
ஓம் அம்ருதாயை நம:
ஓம் தீப்தாயை நம:
ஓம் லோக சோக விநாசிந்யை நம:
ஓம் தர்ம நிலயாவை நம:
ஓம் கருணாயை நம:
ஓம் லோகமாத்ரே நம:

ஓம் பத்மப்ரியாயை நம:
ஓம் பத்மஹஸ்தாயை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் பத்மஸுந்தர்யை நம:
ஓம் பக்மோத்பவாயை நம:
ஓம் பக்த முக்யை நம:
ஓம் பத்மனாப ப்ரியாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் பத்ம மாலாதராயை நம:
ஓம் தேவ்யை நம:

ஓம் பத்மிந்யை நம:
ஓம் பத்மகந்திந்யை நம:
ஓம் புண்யகந்தாயை நம:
ஓம் ஸுப்ரஸந்நாயை நம:
ஓம் ப்ரஸாதாபி முக்யை நம:
ஓம் ப்ரபாயை நம:
ஓம் சந்த்ரவதநாயை நம:
ஓம் சந்த்ராயை நம:
ஓம் சந்த்ர ஸஹோதர்யை நம:
ஓம் சதுர்ப் புஜாயை நம:

ஓம் சந்த்ர ரூபாயை நம:
ஓம் இந்திராயை நம:
ஓம் இந்து சீதலாயை நம:
ஓம் ஆஹ்லாத ஜநந்யை நம:
ஓம் புஷ்ட்யை நம:
ஓம் சிவாயை நம:
ஓம் சிவகர்யை நம:
ஓம் ஸத்யை நம:
ஓம் விமலாயை நம:
ஓம் விச்ய ஜநந்யை நம:

ஓம் புஷ்ட்யை நம:
ஓம் தாரித்ர்ய நாசிந்யை நம:
ஓம் ப்ரீதி புஷ்கரிண்யை நம:
ஓம் சாந்தாயை நம:
ஓம் சுக்லமாம்யாம்பரரயை நம:
ஓம் ச்ரியை நம:
ஓம் பாஸ்கர்யை நம:
ஓம் பில்வ நிலாயாயை நம:
ஓம் வராய ரோஹாயை நம:
ஓம் யச்சஸ் விந்யை நம:

ஓம் வாஸுந்தராயை நம:
ஓம் உதா ராங்காயை நம:
ஓம் ஹரிண்யை நம:
ஓம் ஹேமமாலின்யை நம:
ஓம் த ந தாந்யகர்யை நம:
ஓம் ஸித்தயே நம:
ஓம் ஸத்ரைணஸெம்யாயை நம:
ஓம் சுபப்ரதாயை நம:
ஓம் ந்ருப வேச்மகதாநந்தாயை நம:
ஓம் வரலக்ஷம்யை நம:

ஓம் வஸுப்ரதாயை நம:
ஓம் சுபாயை நம:
ஓம் ஹிரண்ய ப்ராகாராயை நம:
ஓம் ஸமுத்ர தநயாயை நம:
ஓம் ஜயாயை நம:
ஓம் மங்கள தேவதாயை நம:
ஓம் விஷ்ணு வக்ஷஸதலஸ்தி நம:
ஓம் விஷ்ணு பத்ந்யை தாயை நம:
ஓம் பரஸ்ந்நாக்ஷ்யை நம:
ஓம் நாராயண ஸமாச்ரிதாயை நம:

ஓம் தாரித்ர்ய த்வம்ஸிந்யை நம:
ஓம் தேவ்யை நம:
ஓம் ஸர்வோபத்ரவ நிவாரிண்யை நம:
ஓம் நவ துர்காயை நம:
ஓம் மஹாகாள்யை நம:
ஓம் ப்ரம்ம விஷ்ணு சிவாத்மி நம:
ஓம் த்ரிகால ஜ்நாநஸம் காயை பந்நாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம:

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம்

குங்கும அர்ச்சனை மற்றும் புஷ்பங்களால் அர்ச்சிக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் – மகாலட்சுமியின் பார்வை பட்டு எல்லா வளமும் பெறுவீர்களாக.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 1 நவம்பர், 2018

0120. தீபாவளி

0120. தீபாவளி

தீபத் திருநாள் / தீப ஒளித்திருநாள்.
தீப ஒளித்திருநாள் என்பது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்ற, ஓர் இந்துப் பண்டிகையாகும்.
இப்பண்டிகை ஐப்பசி மாதத்தில் திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, துவிதியை ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.
'தீபம்' என்றால் ஒளி, விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.
தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய்

1. முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்றும் யம தீபம்.
2. இரண்டாம் நாள் சதுர்த்தசி அன்று நரக சதுர்த்தசி தீபாவளி திருநாள்.
3. மூன்றாம் நாள் அமாவாசை அன்று கேதார கௌரி விரதம்
4. நான்காம் நாள் பிரதமை அன்று கார்த்தீக ஸ்நானம்
5. ஐந்தாம் நாள் துவிதியை அன்று யமத் துவிதியை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 28 அக்டோபர், 2018

0119. கங்கோத்பத்தி

0119. கங்கோத்பத்தி

கங்காஷ்டகம்

1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-

கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!

அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்

விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!

பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ, தொடுகிறார்களோ, அவர்கள் தேவலோக சுகம் பெறுவர் (கலிகல்மஷம் பாதிக்காமல்)

2.ப்ரஹ்மாண்டம் கண்டயந்தீ ஹரசிரஸி ஜடாவல்லி முல்லாஸயந்தீ

ஸ்வர்லோகாதாபதந்தீ கனககிரி குஹா கண்ட சைலாத் ஸ்கலந்தீ!

க்ஷே£ணூப்ருஷ்டே லுடந்தீ துரிதசயசமூ:நிர்பரம் பர்த்ஸயந்தீ

பாதோதிம் பூரயந்தீஸுரநகரஸரித் பாவநீ ந:புனாது!!

ப்ரும்மாண்டத்தை உடைத்துக் கொண்டும், ஸ்ரீ பரமேச்வரனின் ஜடாவல்லியை கிளு கிளுக்கச் செய்து கொண்டும், ஸ்வர்கத்திலிருந்து கீழே இறங்கி மேருமலைக் குகையின் பக்கத்து குன்றிலிருந்து விழுந்தோடி பூமியில் புரண்டு, மக்களின் பாப பட்டாளத்தை விரட்டியடித்து, பின் சமுத்திரத்தில் கலந்து நிரப்பிக்கொண்டுமிருக்கிற புண்யகங்கை நம்மை பரிசுத்தப்படுத்தட்டும்.

3.மஜ்ஜந் மாதங்க கும்பச்யுத மதமதிரா மோத மத்தாலிஜாலம்

ஸ்நாநை:ஸித்தாங்கநாநாம் குசயுக விகலத் குங்குமாஸங்க பிங்கம்மி

ஸாயம் ப்ராதர் முனீநாம் குசகுஸுமசயை:சன்ன தீரஸ்தநீரம்

பாயாத் நோ காங்கமம்ப:கரிகர மகரா க்ராந்த ரம்ஹஸ்தரங்கம் II

யானை தும்பிக்கையும், முதலைகளும் அலை வேகத்தை சற்றே தடுக்க, ஒடும் கங்கை ப்ரவாஹம் நம்மை காப்பதாக!அது, மூழ்கும் யானைகளின் காதோரம் ஜலப்பெருக்கால் வாசனை பெற்றதால் வண்டு மொய்க்கும் தண்ணீரையுடையது.
குளிக்கும் சித்தர் பெண்களின் மார்பகத்திலிருந்து குங்குமம் கரைந்து மஞ்சள் நிறமுள்ளது.
காலை மாலை வேளைகளில் முனிவர் பூஜை செய்வதால், தர்பை, புஷ்பம் ஆகியவை கரையோரம் தண்ணீர் மிதக்கின்றன.

4.ஆதௌ ஆதிபிதாமஹஸ்ய நியம வ்யாபாரபாத்ரே ஜலம்

பஸ்சாத் பன்னகசாயினோ பகவத:பாபோதகம் பாவனம்!

பூய:சம்புஜடா விபூஷணமணி:ஜஹ்நோர்மஹர் ஷேரியம்

கன்யா கல்மஷநாசினீ பகவதீ பாகீரதீ பாது மாம் !!

முதலில் பிரம்மதேவன் செய்யும் அனுஷ்டான பாத்திரத்தில் சுத்தஜலமாகவும், பிறகு, சேஷசாயியான ஸ்ரீமந் நாராயணரின் பாதோதகமாகவும், பின்னும், பரமேச்வரன் ஜடா மகுடத்தில் அலங்காரமணியாகவும், திகழ்ந்த ஜஹ்னுமஹர்ஷியின் மகளான கங்கை பாபத்தைப் போக்கி என்னைக் காக்கட்டும்.

5.சைலேந்த்ரா தவதாரிணீ நிஜஜலே மஜ்ஜத் ஜனோத்தாரிணீ I

பாராவாரவிஹாரிணீ பவபயச்ரேணீ ஸமுத்ஸாரிணீ I

சேஷாஹேரனு காரிணீ ஹரசிரோ வல்லீதலாகாரிணீ

காசீப்ராந்த விஹாரிணீ விஜயிதே கங்கா மநோஹாரிணீமிமி

காசீயருகில் ஒடி விளையாடும் அழகிய கங்கை ஹிமயமலையில் உற்பத்தியாக, தனது ஜ்லப்ரவாஹத்தில் மூழ்கிய ஜனங்களை உய்வித்து, சம்சாரபயம் நீங்கி, கடலோடு கலக்கிறது.
அது ஆதி சேஷன்போல், பரமேச்வரன் தலையில் பில்வதளம் போல் விங்குகிறது.

6.குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்

த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி!

த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்

ததா மாதச் சாதக்ரதவபதலாபோsப்யதிலகு: !!

ஹே கங்கைத்தாயே!உனது தண்ணீர் அலை பட்டுவிட்டாலே போதும் வீழ்ச்சி கிடையாது.
சற்று பருகினாலே வைகுண்ட லோக வாஸத்தை அருளுகிறாய்.
உனது பிரவாஹத்தில் ஸ்னாநம் செய்தவருக்கு இந்திரபதவி கூட எளிதாயிற்றே!

7.பகவதி தவ தீரே நீரமாத்ராசனோsஹம்

விகத விஷய த்ருஷ்ண:க்ருஷ்ணமாராதயாமி !

ஸகல கலுஷபங்கே ஸ்வர்கஸோபானஸங்கே

தரளதர தரங்கே தேவி கங்கே ப்ரஸீத !!

ஹே கங்காதேவி!பகவதி!மினுமினுப்பான அலைகள் கொண்டவளே!ஸகலபாபங்களையும் அகற்றுபவளே!ஸ்வாகத்தின் படிக்கட்டாக அமைந்தவளே!எனக்கு மனமிரங்கமாட்டாயா?உனது கரையோரம் உன் நீரை மட்டும் பருகிக்கொண்டு, பற்று அற்றவனாய், ஸ்ரீகிருஷ்ணனை ஆராதிக்கிறேனே!அனுமதியேன்.

8.மாதர் ஜாஹ்னவி சம்புஸங்கமிலிதே மௌலௌ நிதாயாஞ்ஜலிம்

த்வத்தீரே வபுக்ஷே£sவஸானஸமயே நாராயணாங்கரித்வயம் !

ஸாநந்தம் ஸ்மரதோ பவிஷ்யதி மம ப்ராணப்ரயாணோத்ஸவே

பூயாத் பக்திரவிச்யுதா ஹரிராத்வைதா த்மிகா சாச்வதீ !!

கங்காமாதாவே!ஸ்ரீசங்கரரின் தொடர்புடையவளே!உன்னை பிரார்த்திக்கிறேன்.
உனது கரையில் தங்கி தலை மேல் கைகூப்பிக்கொண்டு, உடல் பட்டுப்போகும் நேரத்தில் ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை தியானித்துக்கொண்டு ஆனந்தமாய் கழிக்கும் நேரம் பிராணவியோகமும் நேரலாம்.
அப்பொழுது ஹரியும்,

ஹரனும் ஒன்று, என்றே அசையாத (நிலையான) பக்தி எனக்கு உண்டாக வேண்டுமே.

9.கங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேத் ப்ரயதோ நர:மி

ஸர்வபாப விநிர்முக்தோ விஷ்ணு லோகம் ஸ கச்சதி !!

புண்ணியமான இந்த கங்காஷ்டகத்தை சித்த சுத்தியுடன் படிப்பவர் பாபமெல்லாம் நீங்கி விஷ்ணு லோகம் எய்துவர்.

கங்காஷ்டகம் முற்றிற்று.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

சனி, 27 அக்டோபர், 2018

0118. ஸ்ரீ ராம ஜெயம்

0118. ஸ்ரீ ராம ஜெயம்

ஆஞ்சநேயருக்குரிய தாரக மந்திரம், ‘ஸ்ரீ ராம ஜெயம்’.
"ராம' என்றாலும்"பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள்.

இந்த மந்திரத்தை உச்சரித்தால் அவர் மனம் மகிழ்ந்து பக்தர்கள் கேட்கும் வரங்களைத் தருவார்.

ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர்.
வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர்.

ஆஞ்சநேயரை வணங்கி எழுத துவங்கலாம்.
இதனால் எடுத்த செயல்கள் வெற்றியடையும்

ஸ்ரீராம ஜெயத்தை முதன்முதலாக எழுத விரும்பும் பக்தர்கள், அனுமன் ஜெயந்தியன்றும், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அருகிலுள்ளக் கோவிலுக்கு வந்து மந்திரம் எழுதத் தொடங்கலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0117. தீபாவளி லட்சுமி குபேர பூஜை

0117. தீபாவளி லட்சுமி குபேர பூஜை

வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும்.

பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும்.

நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும்.
அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான்.

விநாயகர் துதி

மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும்

தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

குபேர மந்திரங்கள்

‘ஓம் ய க்ஷய குபேராய
வைஸ்ரவணாய
தந தா நியாதி பதயே
தந்தாந்ய ஸம்ருத்திம்மே
தேவி தாபய ஸ்வாஹா’

(அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும்.
தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

‘மகாலட்சுமி தாயே! என் கடன்கள் விரைவில் தீர வேண்டும்.
எனக்கு லாபம் கிடைக்க வேண்டும்நை

வைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும்.

பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும்

குபேர தீபம்

வீட்டுவாசலில் நின்றபடி நமது இடதுபுறம் குபேர விளக்கை ஒரு மரப்பலகை அல்லது தட்டில் வைத்து கிழக்கு பார்த்து தீபம் எரியும்படி வைக்க வேண்டும்.
முதலில் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஊற்றி இரு திரிகளை ஒரு திரியாக்கி ஏற்ற வேண்டும்.

லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் உகந்தது.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூராட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும்.

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும்.
இந்த பூஜை சிறப்பு மிக்கது.

தொடர்ந்து 9 வெள்ளிக்கிழமைகள் அல்லது 9 பவுர்ணமி என பூஜிக்க வேண்டும்.
அதே தினங்களில் 9 நாட்கள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும்.

9 நாட்களும் பூஜித்த நாணயங்களை லட்சுமி தேவியின் உண்டியலில் போட வேண்டும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 15 அக்டோபர், 2018

0116. அர்த்த நாரீஸ்வரர்

0116. அர்த்த நாரீஸ்வரர்

பிருங்கி முனிவர் அதிதீவிர சிவபக்தர்.
ஆதியும் அந்தமும் இல்லாத நாயகன்.
கயிலைநாதன் தான் என்றும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்றெல்லாம் கூறி உள்ளார்ந்த பக்தியுடன் சிவனை மட்டுமே வணங்குவார்.

தன் கணவரை விட்டு ஒரு கணமும் பிரியா வரம் வேண்டும் என்று தவமிருந்தாள்.
கடுமையான தவத்திற்கு இளகிய இறைவன் பார்வதியை காண பூலோகம் வந்தார்.
சிவனை கண்ட பார்வதி ஒரு நாளும் உமை விட்டு பிரியாக வரம் வேண்டும் என்று வேண்டினாள்.

பார்வதியின் எண்ணத்தை உணர்ந்த இறைவனும் தன்னுடலுடன் பார்வதியை இணைத்து அர்த்தநாரீஸ்வரராய் ஆனார்.
இவ்வாறு அம்பிகை இறைவனின் உடலில் ஒரு பாதியாகி, கணவரிடம் இருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள் தான் கேதார கெளரி விரதநாள்.

கேதார கெளரி விரதம். 21 நாள் விரதம் இருந்து தீபாவளி தினத்தன்று சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும். தம் மாங்கல்யபலம் நீடிக்கவும் கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைபிடிக்கின்றனர்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த விரதத்தினை திருமால் அனுஷ்டித்து வைகுந்த பதவியைப் பெற்றதுடன்
பிரம்மன் அனுஷ்டித்து உலகைப் படைக்கும் உயர் பதவியினைப் பெற்றார்.
இந்திரன் அனுஷ்டித்து பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையினையும் வாகனமாகக் கொண்டார்.

ஸ்ரீ் அர்த்த நாரீஸ்வரர் காயத்ரி
ஓம் தபஸ்ய ச வாம பாகமாய வித்மஹே
சிவசக்த்யாய தீமஹி
தன்னோ அர்த்த நாரீஸ்வரா ப்ரசோதயாத்!

இவ்விரதத்தினை அனுஷ்டிப்பதால் ஐஸ்வரியம் பெருகும்.
வறுமையொழியும், நினைத்த காரியம் கை கூடும் என்பது அனுபவ உண்மை.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0115. சங்கர-நாராயணர்

0115. சங்கர-நாராயணர்

சங்கன் மற்றும் பதுமன் எனும் நாக அரசர்களுக்குள் சிவனே பெரியவர், திருமால் பெரியவர் என்ற வாதம் எழுந்தது.
தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர்.
இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை அவர்களுக்கு தெரிவிக்க, இருவரும் இணைந்து காட்சி தரும்படி அம்பாள் தவமிருந்தாள்.
இதையடுத்து, இருவரும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணராக காட்சி தந்தனர்.

ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த ஆடித் தபசு

சிவன் மற்றும் விஷ்ணு ஒரே தெய்வம், இரண்டு தெய்வங்களை ஒரே வடிவமாக வணங்க வேண்டுமென்று சைவ சமயத்தவர்களும் இந்துக்களும் விரும்பினர்.

ஆடி தபசு
தை மாத கடைசி வெள்ளிக்கிழமை

ஸ்ரீ் சங்கர நாராயணர் காயத்ரி

ஓம் சிவா-விஷ்ணு ச ஏக ரூபமாய வித்மஹே
தபஸ் சக்த்யாய தீமஹி
தன்னோ சங்கர நாராயண ப்ரசோதயாத்!

Sri Sankara Narayana Gayathri

Om Siva-Vishnu cha Yega Roobamaya Vithmahe
Thapas Sakthyaya Theemahi
Thanno SankaraNarayana Praschothayath

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0114. தத்த ஜெயந்தி

0114. தத்த ஜெயந்தி

தத்தாத்ரேயர்

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் ப்ரஹ்மா,விஷ்ணு,சிவன் என்ற மும்மூர்த்திகளும் சேர்ந்து மகனாகப் பிறந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்தது தான் ஸ்ரீ தத்தாத்ரேய அவதாரம்.

இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.

இந்து சமயப் பிரிவினர் இவரை திருமாலின் வடிவமாகக் கருதுகின்றனர்.

அவதாரங்களில் 'சிறந்த அவதாரம்' என்று வியாசரால் வணங்கப்பட்டவர்.

'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

இதை செய்யும் சித்தி செய்த உடல்கட்டு மந்திரம் போட்டுக் கொள்ளவும்.

விரைந்து அருள் செய்பவர்.இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற ,கடன் தீர ,அடமானம் வைத்த பொருள் ,நகைகளை மீட்ட,காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||

ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம் :-

1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||

2.ஓம் குரு தத்த நமோ நமஹ||

குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 9 செப்டம்பர், 2018

0113. புரட்டாசி சனிக்கிழமை

0113. புரட்டாசி சனிக்கிழமை

B. புரட்டாசி சனி

புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
"புரட்டாசி சனி" என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் புரட்டாசி மாதத்தில் (தமிழ் மாதம்) வரும் சனிக்கிழமைகளில் சனிபகவானை நினைந்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.

ஜாதக ரீதியாக சனி கிரகத்தால் சிரமம் அனுபவிப்போர், பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இதனால், பெருமாளின் அருளால் சிரமங்கள் பல மடங்கு குறையும்.
திருப்பதி சீனிவாசனுக்கு புகழ்பெற்ற பிரம்மோற்சவ நிகழ்ச்சி புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

ஜாதக அமைப்பின்படி சனி, புதன் திசை நடப்பவர்கள் எள் நல்லெண்ணெய் தீபம் போட்டு வழிபட தடைகள் அனைத்தும் நீங்கும். பாவங்கள் நீங்கி புண்ணியமும் சுபயோக சுபங்களும் கூடி வரும்.

புதனுக்கு சனி பகவான் நட்பு கிரகம். அதனால் சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்தால் சனியின் சங்கடத்திலிருந்து காக்கும் கடவுளான பெருமாள் நம்மைக் காப்பார்.

புரட்டாசி சனி (Puraddasi Sani)
C. திருப்பதி வெங்கடாசலபதிப் பெருமாளை புரட்டாசி சனிக்கிழமைகளில் வணங்குவது பெரும் புண்ணியம்.
பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
(I) வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும்.
(II) வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு.
(III) துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது.

மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும்.
பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.

புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில்.
எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள்.
அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார்.
சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

‘ஓம் நமே நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி நாராயணனை வழிபட வேண்டும்.

ஸ்ரீனிவாச காயத்ரி மந்திரம் :

‘ஓம் நிரஞ்ஜநாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத்’

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0112. You Tube Megala Home Channel

0112. You Tube Megala Home Puja Channel

மேகலா வீட்டில் மா பதியம் செய்வது எப்படி?

மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்
மேகலா வீட்டின் எண்ணெய் காப்பு
மேகலா வீட்டின் நாக வழிபாடு
மேகலா வீட்டின் யம தீபம்
மேகலா வீட்டின் சங்கு தீபம்
மேகலா வீட்டின் கிருஷ்ண ஜெயந்தி புஷ்ப யாகம்
மேகலா வீட்டின் பஞ்ச லட்சுமியில் நாணயங்கள் வழிபாடு

மேகலா வீட்டின் ஆடி மாசம் 4வது வெள்ளி தாமரை விதை & சங்கு பூஜை

மேகலா வீட்டின் ஆவணி மாதம் 1ம் ஞாயிறு சூரிய நமஸ்காரம்
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 2வது ஞாயிறு சூரிய குதிரை வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 3வது ஞாயிறு சூரிய அஸ்வ கலசம் வழிபாடு
மேகலா வீட்டின் ஆவணி மாதம் 4வது ஞாயிறு சூரிய பித்ரு பூஜை

மேகலா வீடு கிரகபிரவேசம்
மேகலா வீட்டின் 2 வது படுக்கையறை அமைப்பு
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி I
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி II
வாங்க மேகலா வீட்டை பார்க்கலாம் பகுதி III

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 5 செப்டம்பர், 2018

0111. கோமதி சக்கரம் வழிபாடு

0111. கோமதி சக்கரம் வழிபாடு

கோமதி சக்கரத்தை வழிபாடு செய்தால் மூன்று லோகத்தையும் வழிபட்ட பலன் கிட்டும்.

சிவப்பு வண்ண துணியின் மேல் வைத்து பயன்படுத்தினால் இந்த கோமதி சக்கரம் மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத்தரும்.

கோமதி சக்கர கல்லை பூஜிப்பவர்கள் மோட்சம் அடைகிறார்கள்.

நோய் தீர்க்கும் வைத்திய கற்களாக கோமதி சக்கர கல் பயன்படுகிறது.

வாஸ்து குறை, நோய்குறை ,தோஷ குறை நீக்க பயன்படுத்தினர்

கோமதி சக்கர வழிபாடு சகல பாவமும் விலகும்.

கோமதி சக்கரம் உள்ள இடத்தில் சிவகோபம் சக்தி கோபம் உண்டாவதில்லை.
இல்லத்தில் மூதேவி வணக்கத்திற்குரியவளாக மாறுவாள்.

கோமதி சக்கரத்தில் மகாலட்சுமியின் சின்னம் உள்ளதால் அவ்விடம் குபேர வாசம் உண்டாகும்.

நீத்தாருக்கு திதி கொடுக்காத தோஷம் முதல் கடின தோஷங்கள் இக்கோமதி திருவல சுழியை பயன்படுத்துவதன் மூலம் விலகுகிறது.

1 . அன்னை பூஜை - தொப்பு = ஓம் ஹ்ரீம் மாதாவே நமக;
ஓம் ஹ்ரீம் மாதாவே நமக; என 21 முறை கூறவும்.

2 . தந்தை பூஜை - மார்பு = ஓம் ஹ்ரீம் பிதாவே நமக; என 21 முறை கூறவும்.

3 . குரு பூஜை - குரு = ஓம் ஹ்ரீம் குருவே நமக; என 21 முறை கூறவும்.

4 . பித்ரு பூஜை - நெற்றிக்கண் = ஓம் ஹ்ரீம் பித்ரு தேவதாய நமக; என 21 முறை கூறவும்.

5 . குல தெய்வ பூஜை - உச்சி தலை = ஓம் ஹ்ரீம் குலதேவதாய நமக; என 21 முறை கூறவும்.

6 . பிரம்மா சரஸ்வதி (கல்வி) பூஜை - கட்டைவிரல், சுண்டுவிரல் இவ்விரு விரல்களால் மட்டும் =
ஓம் நமோ பிரம்ம தேவாய நமக என ஏழு முறை கூறவும்.
அடுத்து ஓம் ஐம் சரஸ்வத்யை நமக என ஏழுமுறை கூறவும்.

7 . லட்சுமி நாராயனர் (செல்வம்) பூஜை - வலது கை ஐந்து விரல்களாலும் பிடித்து மார்பு குழியில் வைத்து =
ஓம் நமோ நாராயணாய நமக என எட்டு முறை கூறி
பின்பு ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமக என எட்டு முறை கூறி வணங்கவும்.

8 . சக்தி சிவன் (வீரம்) பூஜை - கட்டைவிரல் மோதிரவிரல் இவ்விரு விரல்களை மட்டும் =
ஓம் சிவசிவ ஓம் என ஒன்பது முறை கூறி
பிறகு ஓம் ஹ்ரீம் பராசக்தியே நமக என 9 முறை கூறி வணங்கவும்.

இப்போது தாங்கள் பூஜித்த 6, 7, 8-வது சக்கர வழிபாடு விஷ்ணு லோகத்தை வழிபட்ட பலன் கிடைக்க செய்யும்.

9 . பௌர்ணமி (ஆகாயம்) பூஜை - சிவலோக வழிபாடாகும் = நல்லதே நடக்கும்.
மந்திரத்தின் இறுதியில் நமக இதற்கு மட்டும் சேர்க்க வேண்டாம். =
ஓம் ஹரீம் மகா காலபைரவாய நமக என்னும் மந்திரத்தை 21 முறை கூறவும்.

10 . அமாவாசை (பாதாளம்) பூஜை - வலது கை ஐந்து முனை விரல்களாலும் எடுத்து பூஜிக்க வேண்டும். = 11 . ஏகாதசி (லாபம்) பூஜை - இடது கையால் எடுத்து வலது கை உள்ளங்கையில் உங்கள் மார்பு உயரத்திற்கு நேராக கையை நீட்டவும்.=
நான் நேசிக்கும் அத்தனை லாபங்களையும் தட்டாமல் தயவுடன் தாருங்கள் .
என தயவுடன் வேண்டுதலாக கேட்கவும்.
இதையே மந்திரமாக பாவித்து 9 முறை திரும்ப திரும்ப கூறவும்.

12 . சிவராத்திரி (சுகம்) பூஜை - 11 பூஜை முடித்து சக்கரத்தை கீழே வைக்காமல் அந்த இரு கையும் அப்படியே தொப்புளுக்குக்கீழ் கொண்டுவந்து வைக்கவும் =
அத்தனை சுகங்களையும் இப்பிறவியிலேயே வேண்டி கேட்கிறேன் தாருங்கள்.
சங்கு சக்கரமும், உலக சுழியும் தங்கள் வசம் உள்ளதுபோல் நான் பெற நினைக்கும் நியாயமான சந்தோஷங்களைத் தாருங்கள்
என இதையே மந்திரமாக பாவித்து 9 முறை கூறவும்.

13 . ஜென்ம பூஜை - வலது கை உள்ளங்கையில் வைத்து மூடிக்கொள்ளவும். =
இனி நான் நி - னைத்தவையெல்லாம் ஜெயமாகும்.
எல்லாம் என் வசியமே நம என 3 முறை கூறவும்.

பிறகு உங்கள் லக்கணம் தெரிந்தால்
ஓம் ஐம் (இவ்விடம் லக்கனபெயர் சொல்லவும்) உயிராய நம
உதாரனமாக உங்கள் லக்கணம் மேஷம் என்றால் ஓம் ஐம் மேஷம் உயிராய நம என 9 முறை கூறவும்.

அடுத்து ராசி தெரிந்தால்
ஓம் ஸ்ரீம் ராசிபெயர் உடலாய நம
என 9 முறை கூறவும். அடுத்து உங்கள் பெயர் மந்திரம் 21 முறை கூறவும்.

ஓம் ஹ்ரீம் தங்கள் பெயர் ஆத்மாவே நம
(மேற்க்கண்டதுதான் பெயர் மந்திரம் யாருடைய பெயரையும் மந்திரத்தின் நடுவில் சேர்த்து சொல்லலாம் .இது யாவருக்கும் பொதுவானதாகும்) .

இவ்வாராக பெயர் மந்திரம் 21 முறை கூறவும்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

0110. பித்ரு பூஜை

0110. பித்ரு பூஜை

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம்.
அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ரு தோஷம் எனப்படும்.

காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடுவது பித்ரு தோஷத்திற்கு தகுந்த இறை பரிகாரமாகும்.

ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!சஹசிவ சூரியாய!
வா வா ஐயும் கிலியும் சவ்வும் வசி வசி ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினமும் காலையில் சூரியனை பார்த்து சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும்.

அனுஷம், பூசம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, திருவாதிரை, சுவாதி, சதயம், அவிட்டம் இந்த நட்சத்திரத்தில் அமாவாசை வருமானால், அன்றைய தினம் சிராத்தம் செய்தால், பித்ரு தோஷம் நீங்கும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

0109. சங்கு தீபம்

0109. சங்கு தீபம்

இறைவழிபாட்டுக்கு பல வகை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோம்
அதில் தன ஆகார்ஷனத்திற்க்கென சில தீப வழிபாடுகள் உள்ளன
இந்த தீபங்கள் பணவரவை மட்டுமன்றி தீய எண்ணங்கள் தீய சக்திகளின்
ஆதிக்கத்தையும் கண் திருஸ்டி ஏவல் பில்லி சூன்ய பாதிப்பில் இருந்தும்
நம்மை காக்கிறது,

சங்கில் இடம்புரி வலம் புரி என இரண்டு வகை உள்ளது
வலம்புரி சங்கிற்க்கு அபார சக்தி உள்ளது
ஆனால் சங்கு தீபம் ஏற்ற இரண்டு வகையுமே ஏற்றது

உங்கள் சக்திக்கு தகுந்தாற்போல சிறிய அல்லது பெரிய சங்கு வாங்கி
அதை முதலில் சுத்தமான நீரில் கழுவி பின்பு பண்ணீரில் பத்து நமிடம்
ஊற வைத்து அதை சுத்தமான துணியில் துடைத்து விட்டு சந்தனம்
குங்குமம் வைக்கவும்

ஒரு தட்டில் சிறிது பச்சரிசியில் மஞ்சள் கலந்து பரப்பி அதன் மேல் சங்கை
வைத்து நல்லெண்னை மற்றும் பசு நெய் சம அளவில் நிரப்பி திரி
விளக்கேற்றவும்சங்கை சுத்தம் செய்ய வேண்டும்.
அதன் மேற்பாகம் குறைந்தது 8 சந்தனப் பொட்டுகள் வைக்கவேண்டும்.

லட்சுமிக்கு பசு நெய், நாராயணனுக்கு நல்லெண்ணெய் விட்டு
தீபம் ஏற்ற வேண்டும்.

இடம் புரி சங்கில் இலுப்பை என்னை ஊற்றி சிகப்பு சேலை துண்டு
திரியிட்டு கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றி வந்தால் துஸ்டதிய
சக்திகளும் தரிதிரங்களும் விளகும்.

வலம்புரி சங்கு வழிபாடு நமக்கு வளத்தை கொடுக்கும்.
இடம்புரி சங்கு வழிபாடு நமக்கு இடர்களை நீக்கி நன்மையை உண்டாக்கும்...

'ஓம் ஸ்ரீம் கம் கணபதயே நம:’
'ஸ்ரீ குருப்யோ நம:’ என்று 3 முறை சொல்லி மலரிட்டு வணங்கியும்,
'சங்க பூஜாம் கரிஷ்யே’ எனச் சொல்லி வழிபடவும் வேண்டும்.

சங்க மத்யே ஸ்திதம் தோயம்ப்ராமிதம் சங்கரோபரி
அங்க லக்ஷ்ணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாதிகம் தஹேத்..

ஓம் பாஞ்சஜன்யாய வித்மஹே
பாவ மானாய த்மஹி
தந்நோ சங்க ப்ரசோதயாத்

என்னும் சங்கு காயத்ரியை 3 or 11 முறை

ஸ்ரீ லக்ஷ்மீ குபேராய நம என்று சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்,

உங்களின் கோரிக்கையை வைக்க அது விரைவில் நிறைவேறும்
ஒரு கோரிக்கை நிறைவேறியதும் அடுத்த கோரிக்கை வைக்கவும

துவங்கி 32, 48, 54 அல்லது 63 நாட்கள் என்ற எண்ணிக்கையில்
செய்து முடிக்கலாம்.

ஆடி மாத பூரம், புரட்டாசி மாத பவுர்ணமி,
ஆனி மாத சுக்லபட்ச அஷ்டமி, சித்திரை மாத பவுர்ணமி
எல்லாம் சங்கு தீபம்

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.