ஞாயிறு, 26 நவம்பர், 2017

0107. கடன் தீர பரிகாரம்

0107. கடன் தீர பரிகாரம்

அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக 
குறையும்.

I. செவ்வாய்க்கிழமையன்று, செவ்வாய் ஓரை

03 : 00 AM TO 04 : 00 AM
06 : 00 AM TO 07 : 00 AM
01 : 00 PM TO 02 : 00 PM
08 : 00 PM TO 09 : 00 PM

II. ராசிகளுக்கேற்ற பொது மைத்ர முகூர்த்த நேரம்

மேஷம் - வியாழன் காலை 9 - 10:30 மணி 
ரிஷபம் - வெள்ளி 8 மணி முதல் 10:30 வரை 
மிதுனம் - புதன் காலை 7:30 - 9 
கடகம் - திங்கள் மாலை 4 :30 - 6 
சிம்மம் - ஞாயிறு காலை 11 - 12:30 
கன்னி - வெள்ளி மாலை 5 - 6:30 
துலாம் - சனி காலை 10:30 - 12:00 
விருச்சிகம் - வியாழன் மாலை 3 -5 :30 
தனுசு - செவ்வாய் காலை 10:30 - 12 
மகரம் - சனி காலை 8 - 10:30 
கும்பம் - திங்கள் மாலை 3 - 5:30 
மீனம் - வியாழன் காலை 3 -10:30.

III. குளிகை காலத்திலும் கடன் அடைக்கலாம்,

கிழமைகள் பகல் பொழுது இரவுப் பொழுது

ஞாயிறு 03.00 - 04.30; 09.00 - 10.30
திங்கள் 01.30 - 03.00; 07.30 - 09.00
செவ்வாய் 12.00 - 01.30; 12.00 - 01.30
புதன் 10.30 - 12.00; 03.00 - 04.30
வியாழன் 09.00 - 10.30; 01.30 - 03.00
வெள்ளி 07.30 - 09.00; 12.00 - 01.30
சனி 06.00 - 07.30; 10.30 - 12.00

IV. கரிநாள் உள்ள நாட்களிலும் கடன் அடைக்கலாம்,

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கரிநாட்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

எண் தமிழ் மாதம் தேதி (கள்)

1 சித்திரை 6,15
2 வைகாசி 7, 16, 17
3 ஆனி 1,6
4 ஆடி 2, 10, 20
5 ஆவணி 2, 9, 28
6 புரட்டாசி 16, 29
7 ஐப்பசி 6, 20
8 கார்த்திகை 1, 4, 10, 17
9 மார்கழி 6, 9, 11
10 தை 1, 2, 3, 11, 17
11 மாசி 15, 16, 17
12 பங்குனி 6, 15, 19

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 8 மார்ச், 2017

0106. அனுபவ பரிகாரங்கள்

0106. அனுபவ பரிகாரங்கள்

*மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!
*ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் வெள்ளியில் ஐந்து சிரசு நாகர் வைத்து பூஜை
வழிபாடு செய்வது நல்லது.
*குடும்பத்தில் தாங்க முடியாத சிரமங்கள் ஏற்படும் போதும் உடனடியாக
அருகிலுள்ள ஆலயத்தில் மூலவரிற்கு தெடர்ந்து 48 நாடகள் தீபம் ஏற்றி வழிபட்டு
வர சிரமங்கள் அனைத்தும் படிப்படியாக குறையும்.
*கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி எந்த தெய்வத்திற்க்கு
அபிசேகம் செய்தாலும் அரிசி மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் விரைவில்
கடன்கள் அடைப்படும்.
*வெள்ளிக்கிழமை சுக்ர ஓரைலயில் நவக்கிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
கற்கண்டு போட்டு நெய்தீபம் எற்றி வழிபட கணவன் மனைவி கருத்து வேறுபாடு
நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
*தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, அதற்குரிய மந்திரங்களை சொல்லி
வந்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும்.
*குலதெயவ குறை உள்ளவர்கள் மண் அகலில் வாழைத்தண்டு நூல் திரியினால்
நல்லெண்ணை தீபம் வீட்டில் ஏற்றினால் குலதெய்வ குற்றமும் குலதெய்வ
சாபமும் நீங்கும்.
*சமையல் அறையில் அரிசியை சிறிது எடுத்து கொண்டு ஒரு பாத்திரத்தில்
போட்டு அதில் ஓரிரு நாணயங்களை முதலில் குடும்ப தலைவர் கையால் இட்டு
அரிசியில் புதையுமாறு செய்யவும்.
அவ்வப்போது மற்ற குடும்ப உறுப்பினர்கள் ஓரிரு நாணயங்களை இட்டு
புதையுமாறு வைக்கலாம்.
இது வீட்டில் எப்போதும் அரிசியும் செல்வமும் இருந்து கொண்டே இருக்க
பண்டைய காலத்தில் செய்து வந்த ஒரு முறை.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றி விடவும்.
நாணயங்களை எடுத்து கொண்டு அரிசியை காகைக்கு இட்டு விடலாம்.
*வீட்டின் பின்புறம் கற்றாழை செடி ஒன்றை வளர்த்து வர நிதி நிலைமை
கட்டுக்குள் அடங்கி இருக்கும்.
*புதிய வீடு அல்லது கடைகளுக்கு : முழு மஞ்சள் 7, கொட்டை பாக்குகள் 7,
சிறிய வெள்ளி தகடு,உலோகத்தால் ஆன நாகர்-2,
இவற்றை எல்லாம் மூடியுடன் கூடிய வெண்கல கலசத்தில் இட்டு மேற்கு
புறமாக வைத்திருக்க சகல நன்மைகளும் உண்டாகும்.
*தொடர்ந்து 5 வெள்ளிக்கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை
மாலை சாற்றி வழிபடவும்
*கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற
கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல
பரிகாரம் ஆகும்.
ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள்,
பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
*சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி 12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட
தொழில், வழக்கு சாதகமாதல், பில்லி, சூனியம், ஏவல் நீங்கும்.
*21 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.
*சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி 
தூரத்திற்கு செய்வினை அணுகாது.
*பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு
ஏற்றி வழிபட சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.
*சிறிது கல் உப்பை ஒரு கின்னத்தில் போட்டு ,கழிவறையில் வைத்தால்
கெட்டசக்திகளை இழுத்து கொள்ளும் ஆனால் அடிக்கடி உப்பை மாற்ற வேண்டும் . 
*வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து
குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும்.
குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு
குளிக்கலாம்.
*வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை
அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள்
பொடியைத் தடவியும் வைக்கலாம்.
இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.
பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை
சுற்றி தெருவில் வீசிவிடவும்.
*வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்…
*'ஓம்' ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம்,
விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீடு முழுவதும் ஒலிக்க விடவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 5 மார்ச், 2017

0105. அர்ச்சனை,தீபம் வழிபாடு

0105. அர்ச்சனை,தீபம் வழிபாடு

மேஷம் சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி அர்ச்சனை செய்யவும்.
ரிஷபம் துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்வது நல்லது.
கன்னி துர்கை, தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.
விருச்சிகம் முருகருக்கு விளக்கேற்றி அர்ச்சனை செய்யுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

0104. அர்ச்சனை,பூமாலை சாத்துக

மேஷம் அரளிப்பூவை வாங்கி மாலையாகக் கட்டி அருகிலிருக்கும்
முருகன் கோயிலிலுள்ள வேலுக்கு சார்த்தி அர்ச்சனை செய்து
வணங்கவும். 
ரிஷபம் மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். 
விருச்சிகம் செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் அம்மன்
கோயிலுக்கு செவ்வாய்க் கிழமைதோறும் அர்ப்பணித்து அர்ச்சனை
செய்து  வணங்கவும். 
விருச்சிகம் அருகிலிருக்கும் ஆலயத்தில் இருக்கும் வள்ளி தேவசேனா
சமேதராக உள்ள முருகபெருமானை அரளி மாலை சாத்தி அர்ச்சனை
செய்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கி வாழ்வில் இன்பம்
உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

திங்கள், 6 பிப்ரவரி, 2017

0103. பிரதட்சிணம்,தீபம் வழிபாடு

0103. பிரதட்சிணம்,தீபம் வழிபாடு

மேஷம் சனிக்கிழமை நவகிரகத்தைச் சுற்றி எள் விளக்கேற்றுங்கள்.
9 வாரம்.
துலாம் சனிக்கிழமை நவகிரகம் சுற்றி நல்லெண்ணெய்
விளக்கேற்றுங்கள். 8 வாரம்.
மீனம் வியாழக்கிழமை நவகிரகம் சுற்றி நெய்தீபம் ஏற்றவும். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0102. சிதறு தேங்காய்

0102. சிதறு தேங்காய்

கடகம் முக்கியமான பணிகளுக்குச் செல்லும் முன் விநாயகருக்கு சிதறு
தேங்காய் உடைத்துவிட்டு செயலில் இறங்குங்கள்.
சிம்மம் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பணியைத் துவக்கவும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

0101. தசை மற்றும் புக்தி பரிகாரங்கள்

0101. தசை மற்றும் புக்தி பரிகாரங்கள்

சந்திரன் பரிகாரம்

திங்கட்கிழமைகளில் விரதம் இருந்தல்
பௌர்ணமி நாட்களில் தேனும் சர்க்கரையும் கலந்து செப்பு பாத்திரத்தில் சந்திரனுக்கு படைத்தல்
செம்பருத்தி பூவால் அர்ச்சனை செய்தல்
திருப்பதி சென்று வெங்கடாசலபதியை வழிபடுதல்
சந்திரனின் அதிதேவதையான பார்வதியை திங்களன்று வணங்குதல்,
2 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை அணிதல்
வெள்ளை நிற ஆடைகளை உபயோகத்தால் போன்றவை சந்திரனுக்கு செய்யும் பரிகாரங்களாகும்.
முத்தை உடலில் படும்படி அணிவது நல்லது.

ராகுவிற்குரிய பரிகாரங்கள்;

ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை  பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது,

குருவுக்குரிய பரிகாரங்கள்

வியாழக் கிழமைகளில் விரதமிருந்து குரு தட்சினா மூர்த்திக்கு கொண்டை கடலையை ஊற வைத்து மாலையாக கோர்த்து,
மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து நெய் திபமேற்றி வழிபடுவது நல்லது.
வெண் முல்லை மலர்களால் குருவுக்கு அர்ச்சனை செய்வது உத்தமம்.

சனிக்குரிய பரிகாரங்கள்

சனிக்கிழமைகளில் விரதமிருந்து கறுப்பு துணி, கறுப்பு எள்ளை முட்டை கட்டி அகல் விளக்கில் வைத்து எள் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி வழிபடுவது,
சனிபகவானுக்கு கறுப்பு நிற வஸ்திரம் சாற்றி, நீல நிற சங்கு பூக்களால் அர்ச்சனை செய்வது,
எள் கலந்த அன்னம் படைத்து காக்கைக்கு வைப்பது,
ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது உத்தமம்.
சனிப் பரீதி ஆஞ்சநேயரையும் துளசிமாலை, வடைமாலை வெண்ணை முதலியவற்றை சாற்றி வழிபடுவது உத்தமம்.
நீலக்கல்லை அணிவது உத்தமம்.

புதன் பகவானுக்கு பரிகாரங்கள்

விஷ்ணு பகவானை புதன் கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்வது,
சதர்சன ஹோமம் செய்வது,
சதர்சன எந்திரம் வைத்து வழிபடுவது
பச்சை பயிறு, பச்சை நிற ஆடை,நோட்டு புத்தகங்கள் போன்றவற்றை படிக்கும் பிள்ளைகளுக்கு தான அளிப்பது நல்லது.
மரகதக்கல் மோதிரத்தையும் அணியலாம்.

கேதுவுக்குரிய பரிகாரங்கள்

தினமும் விநாயகரை வழிபடுதல்,
கேதுவுக்குரிய மந்திரங்களை ஜபித்தல்,
சதூர்த்தி விரதம் இருத்தல்,
வைடூரிய கல்லை மோதிரத்தில் பதித்து உடலில் படும் படி அணிதல் போன்றவை கேதுவால் உண்டாக கூடிய தீய பலன்களை குறைக்க உதவும்.

சுக்கிர திசைக்குரிய பரிகாரங்கள்

வெள்ளி கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி வெள்ளை நிற தாமரைப் பூவால் அர்ச்சனை செய்வது,
வைரக்கல் மோதிரம் அணிவது,
மொச்சை பயிறு, தாலி கயிறு மஞ்சள் குங்குமம் போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் செய்வது உத்தமம்.
வைரக்கல்லை அணியலாம். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

0100. தீபமிட்டு , தானம் செய்யது வழிபாடு

0100. தீபமிட்டு , தானம் செய்யது வழிபாடு

விருச்சிகம் செவ்வாய்க்கிழமை முருகருக்கு நெய் விளக்கேற்றி துவரம்பருப்பை
அளியுங்கள். 9 வாரம்.
மகரம் வியாழக்கிழமை குரு பகவானுக்கு கருப்புக் கொண்டைக் கடலையை
காணிக்கையாக செலுத்தி நெய் விளக்கேற்றுங்கள். 3 வாரம்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வியாழன், 26 ஜனவரி, 2017

099. ரத்த தானம்

099. ரத்த தானம்

மிதுனம் செவ்வாய்க் கிழமைகளில் இளைஞர்கள் ரத்த தானம் செய்வது
சிறந்த பரிகாரம்.
கடகம் ரத்ததானம் செய்யுங்கள்.
கன்னி இயன்றபோது ரத்ததானம் செய்யுங்கள்.
விருச்சிகம் செவ்வாய்க்கிழமை இளைஞர்கள் ரத்த தானம் செய்யலாம்.
மகரம் முடிந்தால் இரத்த தானம் செய்யுங்கள். 

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 24 ஜனவரி, 2017

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

098. அர்ச்சனை, நிவேதனம் வழிபாடு

ரிஷபம் வெள்ளிக்கிழமையில் பெருமாளுக்கு வெண் தாமரையால்
அர்ச்சனை செய்து மொச்சை சுண்டல் நிவேதனம் செய்து வழிபட
வாழ்வில் வளம் பெறும்.
குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
துலாம் வெள்ளிக்கிழமை நவகிரக சந்நதியில் சுக்கிரனுக்கு அர்ச்சனை
செய்து மொச்சை அளியுங்கள்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

வெள்ளி, 6 ஜனவரி, 2017

097. கடன் தொல்லை நீங்க

097. கடன் தொல்லை நீங்க

வழிபாடு :

கணகதாரா ஸ்தோத்திரம் வெள்ளிக்கிழமையில் படித்தல் நன்று,
வீட்டில் லக்ஷ்மி படத்திற்கு லட்சுமி அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்து
பூஜித்தால் கடன் தொல்லை நீங்கி வளம் பெறலாம்.

ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம்:-

அங்கம் ஹரே:புனகபூஷன
மாச்ரயந்தீ
ப்ருங்காங்கனேவ முகலாபரணம்
தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதி
ரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம
மங்கல தேவதாயா: 1

முக்தா முஹீர்விதததீ
வதனே முராரே:
ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி
கதாகதானி
மாலா த்ருசோர் மது கரீவ
மஹோத்பலே யா
ஸாமே ச்ரியம் திசது
ஸாகர ஸம்பவாயா: 2

ஆமீலிதாட்ச மதிகம்ய
முதா முகுந்தம்
ஆனந்த கந்த மநிமேஷ
மனங்கதந்த்ரம்
ஆகேகர ஸ்தித கனீனிக
பக்ஷ்ம நேத்ரம்
பூத்யை பவேன்மம
பூஜங்க சயாங்கனாயா 3

பாஹ் வந்தரே மது ஜித: ச்ரித
கெளஸ்துபே யா
ஹாராவலீவஹரி நீலமயி
விபாதி
காமப்ரதா பகவதோபி
கடாட்ச மாலா
கல்யாண மாவஹதுமே
கமலாலயாயா: 4

காலாம்புதாலி லலிதோரஸி
கைடபாரே:
தாராதரே ஸ்புரதியா
தடிதங்கனேவ
மாதுஸ்ஸமஸ்த ஜகதாம்
மஹனீய மூர்த்தி
பத்ராணி மேதிசது
பார்கவநந்தனாயா: 5

ப்ராப்தம் பதம் ப்ரதமத:
கலு யத்ப்ரபாவாத்
மாங்கல்ய பாஜி மதுமாதினி
மன் மதேன
மய்யாபதேத்ததிஹமந்தர மீட்சணார் தம்
மந்தாலஸம் சமகராலய கன்யகாயா: 6

விச்வாம ரேந்த்ர பதவீ
ப்ரமதான தட்சம்
ஆனந்த ஹேதுரதிகம்
முரவித்விஷோ அபி
ஈஷன் நிஷீ தது மயிக்ஷண
மீக்ஷணார்த்தம்
இந்தீவரோதர ஸஹோதர
மிந்திராயா 7

இஷ்டா விசிஷ்ட மதயோபி
யயா தயார்த்ர
திருஷ்ட்யாத்ரி விஷ்டப
பதம் ஸ லபம் லபந்தே
திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர
திப்திரிஷ்டாம்
புஷ்டிம் க்ருஷீஷ்ட
மம புஷ்கர விஷ்டராயா 8

தத்யாத் தயானுபவனோ
த்ரவிணாம் புதாராம்
அஸ்மிந்ந கிஞ்சன விஹங்க
சிசெள விஷன்ணே
துஷ்கர்ம தர்மமபனீய
சிராயதூரம்
நாராயண ப்ரணயனீ
நயனாம் புவாஹ: 9

கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலய
மேலிஷீ ஸம்ஸ்திதாயை
தஸ்யை நமஸ்த்ரி புவனைக
குரோஸ்தருண்யை! 10

ஸ்ருத்யை நமோஸ்து
சுபகர்ம பலப்ரஸீத்யை
ரத்யை நமோஸ்துரமணீய
குணார்ணவாயை
சக்த்யை நமோஸ்து
சதபத்ர நிகேதெனாயை
புஷ்ட்யை நமோஸ்து
புருஷோத்தம வல்லபாயை 11

நமோஸ்து நாலீக நிபானனாயை
நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
நமோஸ்து நாராயண வல்லபாயை: 12

நமோஸ்து ஹேமாமபுஜ பீடிகாயை
நமோஸ்து பூ மண்டல நாயிகாயை
நமோஸ்து தேவாதி தயாபராயை
நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13

நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தனாயை
நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
நமோஸ்து தாமோதர வல்லபாயை 14

நமோஸ்து காந்த்யை கவலேக்ஷணாயை
நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15

ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய
நந்தனானி
ஸாம்ராஜ்யதான
விபவானி ஸரோருஹாணி
த்வத் வந்தனானி துரிதா
ஹரணோத்யதானி
மாமேவ மாதரனிசம்
கலயந்து மான்யே 16

யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
ஸந்தனோதி வசனாங்க மானஸை
த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17

ஸரஸிஜ நிலயே ஸரோஜ
ஹஸ்தே
தவல தராம்சுக
கந்த மால்ய சோபே
பகவதி ஹரிவல்லபே
மனோஜ்ஞே
த்ரிபுவன பூதிகரி
ப்ரஸீத மஹ்யம் 18

திக்தஸ்திபி கனக கும்ப
முகாவஸ்ருஷ்ட
ஸ்வர்வாகினி விமலசாரு
ஜலாம்னு தாங்கீம
ப்ராதர் நமாமி ஜகதாம்
ஜனனீம் அக்ஷே
லோகாதி நாதக்ரு ஹிணீம்
அம்ருதாப்தி புத்ரீம் 19

கமலே கமலாட்ச வல்லபேத்வம்
கருணாபூர தரங்கிதைரபாங்கை
அவலோகய மாமநிஞ் சனானாம்
ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா 20

ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரன்வஹம்
த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
குணாதிகா குரிதர பாக்ய பாகினோ
பவந்தி தே புவி புத பாவிதாசயா 21

கடன் உள்ள காலங்களில் இறைவழிபாட்டிற்காக பொருட்செலவு செய்தல்,
பணம் செலவு செய்தால் கூடாது.
இன்னும் சொல்லப்போனால் கடன் வாங்கி கற்பூரம்கூட ஏற்றக்கூடாது.
இறைவனை மனதால் துதித்தலே அதிக பலனை தரும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

செவ்வாய், 3 ஜனவரி, 2017

096. வைகுண்ட ஏகாதசி

096. வைகுண்ட ஏகாதசி

ஒரு வருடத்தில் வரும் 24 ஏகாதசிகள் :

1. உற்பத்தி (ஏகாதசி) - மார்கழி - க்ருஷ்ண (பக்‌ஷம்) - சகல பாக்கியங்களும்
கிடைக்கும்.
2. மோட்ச - மார்கழி - சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்
3. ஸபலா - தை - க்ருஷ்ண - பாப நிவர்த்தி (உலும்பகன் மோட்சம்)
4. புத்ரதா - தை - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும் (சுகேதுமான் விரதம் இருந்து
பிள்ளைகள் பெற்றான்)
5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண - அன்ன தானத்திற்கு ஏற்றது
6. ஜயா - மாசி - சுக்ல - பேய்க்கும் மோட்சம் உண்டு (மால்யவான் பேயான சாபத்தில்
இருந்து விடுதலை பெற்றான்)
7. விஜயா - பங்குனி - க்ருஷ்ண - ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனிவரின்
உபதேசப்படி, விரடம் இருந்த நாள்
8. ஆமலதீ - பங்குனி - சுக்ல - கோதானம் செய்ய ஏற்றது
9. பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண - பாபங்கள் அகலும்
10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்
11. வருதிந் - வைகாசி - க்ருஷ்ண - ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும் (சிவன், ப்ரம்மன்
தலையை அறுத்த தோஷம் நீங்கிய நாள்)
12 மோஹினி - வைகாசி - சுக்ல - பாவம் நீங்கும்
13. அபார - ஆனி - க்ருஷ்ண - குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்
14. நிர்ஜலா (பீம) - ஆனி - சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு (நீர் அருந்தக்
கூடாது - பூமியில் நீர் குறைந்து இருக்கும் நாள்)
15. யோகினீ - ஆடி - க்ருஷ்ண - நோய் நீங்கும் (குபேரன் பணியாளன் ஹேமநாதன்
விரதம் இருந்து குஷ்ட நோய் நீங்கிய நாள்)
16. சயிநீ - ஆடி - சுக்ல - தெய்வ சிந்தனை அதிகமாகும் - திரிவிக்கிரமனாய்த்
தோன்றி, பின் பாற்கடலில் சயனித்த நாள் (பெயர்க் காரணம்)
17. சாமிகா - ஆவணி - க்ருஷ்ண - விருப்பங்கள் நிறைவேறும்
18. புத்ரஜா - ஆவணி - சுக்ல - புத்ர பாக்கியம் கிடைக்கும்
19. அஜா - புரட்டாசி - க்ருஷ்ண - இழந்ததைப் பெறலாம் - அரிச்சந்திரன் விரதம்
இருந்த நாள்
20. பத்மநாபா - புரட்டாசி - சுக்ல - பஞ்சம் நீங்கும்
21. இந்திரா - ப்பசி - க்ருஷ்ண - பித்ருக்கள் நற்கதி பெறுவர்
22. பாபாங்குசா - ப்பசி - சுக்ல - கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாபங்கள்
அகலும்
23. ரமா - கார்த்திகை - க்ருஷ்ண - உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்
24. ப்ரபோதின் - கார்த்திகை - சுக்ல - பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்
25 - கமலா - (சில வருடங்களில் மட்டும்) - மகாலட்சுமி அருள் கிடைக்கும்

மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி
எனப்படுகின்றது.

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக்
கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட
ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருநாளும் திருமாலின் திருவுரு வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு
வாகனங்களில் உலா வருகிறது.
ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி என அழைக்கப்படும்
உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில்
வீற்றிருக்க வடக்கு வாயில் ("பரம்பத வாசல்", சொர்க்க வாசல்" என்றும்
அழைக்கப்படுகிறது) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர்
கூட்டம் கூடும்.
இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.

ஏகாதசி விரதம் இருக்கும் முறை

1.ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாளான
தசமியன்று பகலில் ஒரு_வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்
2 , ஏகாதசி அன்று அதிகாலையிலேயே கண்விழித்து குளித்து விட்டு, பூஜைசெய்து
விரதத்தை மேற்க்கொள்ள வேண்டும்.
3 , ஏகாதசி திதி_முழுவதும் முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக)
இருக்கவேண்டும்.
குளிர்ந்த நீரை குடிக்கலாம் .
ஏழு_முறை துளசி இலையை சாப்பிடலாம் .
ஏகாதசி குளிர்_மாதமான மார்கழியில் வருவதனால், உடலுக்கு வெப்பம்கிடைக்க
துளசியை சாப்பிடவேண்டும்.
பட்டினி கிடப்பதினால் , ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது.
குளிர்ந்த_நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள் நெய், காய்கனிகள்,பழங்கள்,
நிலக்கடலை, பால், தயிர் போன்றவற்றை இறைவனுக்கு படைத்து (பிரசாதமாக)
உண்ணலாம்.
4.இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும்,விஷ்ணு
சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் மற்றும் ரங்கநாதர் ஸ்துதி முதலியவற்றை
ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும்.
கண் விழிக்கிறோம் என்றபெயரில் சினிமா,டிவி பார்க்க கூடாது. .
5. ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது .
துவாதசி அன்று அதி காலையில் உணவு_அருந்துவதை பாரணை என
அழைக்கிறோம் .
துவாதசியன்று அதி காலையில் உப்பு, புளிப்பு போன்ற சுவை இல்லாத உணவாக
நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளைசேர்த்து பல்லில்_படாமல்
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!! என மூன்று முறை_கூறி ஆல் இலையில்
உணவுவிட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.
(அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய்_துவையல், வறுத்த சுண்டைக்காய்
ஆகியவை முக்கியமானவை.)
துவாதசி அன்று காலையில் 21 வகையான கறி சமைத்து உண்ணவேண்டும்.
இதில் அகத்தி கீரை, நெல்லிக்காய், சுண்டை காய் அவசியம் இடம்பெறவேண்டும்.
6.துவாதசியன்று வைஷ்ணவ நாட்காட்டியில்_காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில்
ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.
விரதத்தை முடிப் தேன்பது நீரை கூட அருந்தாமல் விரதம் இருந்தவர்கள் துளசி
தீர்த்தத்தையும், மற்றவர்கள் பகவானுக்கு தானிய_உணவை படைத்து
(பிரசாதமாக) உண்ணலாம்.
ஏகாதசிவிரதத்தை கடைபிடிப்பது போன்றே விரதத்தை முடிப்பதும் மிக மிக
முக்கியமாகும் இல்லாவிடில் விரதம்இருந்த முழுபலனும் கிடைப்பதில்லை.
7.உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும்.
அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதம் பத்தாவது திதியாகிய தசமி, பதினொன்றாவது திதியாகிய ஏகாதசி,
பன்னிரண்டாம் திதியாகிய துவாதசி என மூன்று திதிகளிலும் மேற் கொள்ளும்
விரதமாக அமைந்து உள்ளது.
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங் களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

095. அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் பகுதி = II

மூலவர் : வெங்கடாசலபதி
அம்மன் / தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : அரசமரம்
வருடம் : 2002 வருடம்
ஊர் : அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
மாவட்டம் : திருநெல்வேலி
மாநிலம் : தமிழ்நாடு
நாடு : இந்தியா

முகவரி : அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில்
அரசு அலுவலர் 'அ' குடியிருப்பு
திருநெல்வேலி - 627007
திருநெல்வேலி மாவட்டம்
தமிழ்நாடு மாநிலம்
போன் : +91-

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் 13ம் வருசாபிஷேகம் - ஆவணி மாதம்
29ம் தேதி (14.09.2016) சித்திரை நட்சத்திரமும். புதன்கிழமை கூடிய சுப‌தின‌ம்.


மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.