ஞாயிறு, 16 டிசம்பர், 2018

0162. மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்

0162. மார்கழி முதல் புதன்கிழமை குசேலர் தினம்

மார்கழி மாத முதல் புதன்கிழமையன்று குருவாயூர் கோவிலில் குசேலர் தினம் கொண்டாடப்படுகிறது.

"குசேலம்" என்றால் கிழிந்து நைந்துபோன துணியைக் குறிக்கும்.
ஏழ்மையின் காரணமாக அத்தகைய ஆடையை அணிந்திருந்த படியால், சுதாமா என்ற அவரது இயற்பெயர் மறைந்து குசேலர் என்ற பெயராலேயே அழைக்கப்படலானார்.

கண்ணன் சிறுவயதில் சாந்தீபனி என்ற முனிவரின் குருகுலத்தில் வேதங்கள் பயின்றபோது, அவரின் நெருங்கிய நண்பராக இருந்தவர் சுதாமா.
திருமணம் முடிந்து 27 குழந்தைகள் பெற்றெடுத்து மிகவும் வறுமையில் வாடினார் சுதாமா.
இவரது மனைவி பெயர் "க்ஷுத்க்ஷாமா(சுசீலை) என்பதாகும்.
பசியால் வருந்தி மெலிந்த தேகம் உடையவள் என்பது இப்பெயரின் பொருள்.
தங்கள் வறுமை நீங்கும் பொருட்டு சுதாமாவின் இளமைக்கால நண்பரான யாதவ குல அரசன் கண்ணனைப் போய் பார்த்து வரும்படி அவள் கேட்டுக் கொண்டு, கண்ணனுக்குக் கொடுக்கும் பொருட்டு பலரிடம் யாசகம் பெற்று நான்கு பிடி அவலை ஒரு கிழிந்த துணியில் முடிந்து தன் கணவனிடம் அளித்தாள் அவள்.

தன் இளமைக்கால நண்பனைக் கண்ட கண்ணன் மிகவும் மகிழ்ந்து, தனது மனைவி ருக்மிணியுடன் பணிவிடைகள் புரிந்தார். குசேலர் கொடுக்கத் தயங்கிய அவலை அவரே கையிலிருந்து பிடுங்கி ஒரு கைப்பிடி எடுத்து வாயில் போட்டுக் கொள்ள, அந்த நிமிடமே குசேலரின் வறுமை அகன்று குபேரனைப் போன்ற பெரிய செல்வத்தைப் பெற்றார் என்பது கதை.

ஸ்ரீ குருவாயூரப்பன் கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் மார்கழி மாத முதல் புதன்கிழமை குசேலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
அன்று அவலே முக்கிய நிவேதனமாக அமைகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்களும் கண்ணனின் தரிசனத்தால் குசேலருக்குக் கிடைத்த ஐஸ்வர்யம், செல்வச் செழிப்பு தங்களுக்கும் கிடைக்க வேண்டு மென்று வேண்டிக் கொண்டு, படிக்கணக்கில் இறைவனுக்கு அவல் காணிக்கை செலுத்துகின்றனர்.

குசேலர் தினமான மார்கழி மாத முதல் புதன் கிழமையன்று நம் வீடுகளிலும் குருவாயூரப்பன் படம் அல்லது கிருஷ்ணர் படம் வைத்துப் பூஜித்து, வெல்லம் கலந்த அவல் நிவேதனம் செய்து வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை.

குசேல சரித்திர ஸ்லோகம்

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூ ரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா?
கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந் தாள்.
ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது.
அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான கோபாலன் தாங் களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள்.
அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல் லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்

குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர் கிருஷ்ணனை காண புறப்பட்டார்.
லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை.
ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண் டார்.
அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா?

கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்
க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்
ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்
தவாதிஸம்பாவனயா து கிம் புன:

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார்.
அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
அப்படித்தானே?

ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்
கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்
யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை
ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே

நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள்.
குசேலர் பேரானந்தமடைந்தார்.
அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர் களே?
ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள்.
வரும்போது பெருமழையில் சிக்கினீர் களே?
பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா?

த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத
ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா
க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்
ரமா கிலோபேத்யகரம் ருரோத தே

குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார்.
நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமா கப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய்.
அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து நிறுத்தினார்கள், இல்லையா?

பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா
புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்
பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ
விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :

உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக் கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா?
இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா?

யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ
வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ
த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:
க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்

‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்திருப்பார்.
மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழ கிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார்.
ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா?

கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்
க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்
ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்
புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்

‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார்.
பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார்.
சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார்.
உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை அப்போது அவர் உணர்ந்தாரல்லவா?

ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்
ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ
த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ
மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.

ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்துகொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா?
இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.

இந்த குசேல சரித்திரத்தை படித்தால் செல்வம் பெருகும்...

இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும்.
சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும்.
உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

வியாழன், 13 டிசம்பர், 2018

0160. பாவை நோன்பு

0160. பாவை நோன்பு

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

ஆண்டாள் தமிழத்தில் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.

கலியுகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், மனிதர்கள் யாரையும் மணக்கமாட்டேன், பெருமாளையே மணப்பேன் என லட்சிய சபதம் கொண்டாள்.

திருமாலே தனக்கு கணவராக அமைய வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் ஆண்டாள் மேற்கொண்ட விரதமே பாவை நோன்பு. இதற்காக அவள், அதிகாலையில் துயிலெழுந்து தோழியரையும் அழைத்துக் கொண்டு நீராடச் சென்றாள். தான் பிறந்த ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனின் இல்லத்திற்குச் சென்று அவனை வணங்கி வந்தாள்.

திருப்பாவை ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 474 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

முதல் பாடல் திருப்பாவையின் நோக்கத்தை சுருக்கமாக எடுத்துச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து பாடல்கள் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரந்தாமனின் சிறப்புகளைச் சொல்கிறது. ஆறு முதல் 15 பாடல்கள் ஆழ்வார்களுக்கு ஒப்பான அடியார்களை தோழிகளாகக் கற்பனை செய்து அவர்களை எழுப்பிக்கொண்டு கோயிலுக்குச் செல்வதை எடுத்துச் சொல்கிறது.

காலை 4.30 மணிக்கே நீராடி, திருப்பாவை தினமும் 1 பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்

மார்கழி முதல்தேதியன்று மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் பாடலைத் துவங்க வேண்டும். மார்கழியில் 29 நாட்களே இருப்பதால், கடைசி நாளில் கடைசி இரண்டு பாடல்களை மூன்று முறை பாட வேண்டும்.

இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத உள்ளிட்ட பிடித்தமான பாடல்களைப் பாட வேண்டும்.

ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள். திருமணத்தடைகளும் நீங்கும்.

0159. சந்திராஷ்டம தின வழிபாடு

0159. சந்திராஷ்டம தின வழிபாடு

சந்திராஷ்டம தினத்தில் பல பிரச்சினை ஏற்படும். உங்களின் ஜாதகத்தில் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியது என்று குறித்துக்கொண்டு வந்தால் அது சந்திராஷ்டம நாளாக இருக்கும்.

27 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்டமம் ஏற்படும்.

கோட்சாரத்தில் ராசிக்கு 8ல் சந்திரன் வரும்போது சந்திராஷ்டமம் தான். அப்போது கண்டிப்பாக, மன நிலை கோபமாக அல்லது வருத்தமாக மேலும் குழப்பமாக இருக்கும்.

ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதேசந்திரன், லக்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

சந்திராஷ்டம தினத்தன்று எந்த முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். சந்திரன் மனோகாரகன் என்பதால், அன்றைய தினம் மனதின் தன்மை நிலையற்றதாக இருக்கும்.

கடுமையான சந்திராஷ்டம தினங்கள் எந்த ராசிக்கு?

கடுமையான சந்திராஷ்டம தினங்கள் என்று பார்க்கும் போது ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ராசிக்கு சந்திராஷ்டமம் வரும் போது மிகுந்த தாக்கத்தைத் தரும் காரணம் என்ன வென்றால் அவர்களின் ராசிக்கு எட்டாவது ராசியதிபதி பகையாக இருக்கும்.

மற்ற ஆறு ராசிகளான மேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ராசிக்கு சந்திராஷ்டமத்தாக்கம் குறைவாகவே காணப்படும். இதனைத்தான் அனுகூல சந்திராஷ்டம தினங்கள் என்றெல்லாம் சொல்வர்.

என்னதான் சந்திரன் மனக்காரன் என்றாலும், அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்படுத்துவது கேது தான்,

8ஆம் அதிபதியின் அதி தேவதை, சந்திரனின் அதி தேவதையான பார்வதி தேவி வழிபாடு, கேதுவின் அதி தேவதையான இந்திரன் வழிபாடு,

இறை வழிபாடு செய்து கீழ்கண்ட பரிகாரம் செய்ய நல்ல பலனைத் தரும்.

மேஷ ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து, சுப்ரமணியர் வழிபாடு செய்து அதன் பிறகு காரியங்களைச் செய்யத் தொடங்கலாம்.

ரிஷப ராசிக்காரர்கள் மொச்சை தானம் செய்து மகா லட்சுமியை வழிபட்ட பிறகு செயல்படலாம்.

மிதுன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டதும் காரியங்களைத் தொடங்கலாம்.

கடக ராசிக்காரர்கள் பச்சரிசி தானம் செய்து, அம்பிகை வழிபாடு முடித்து காரியத்தை தொடங்கலாம்.

சிம்ம ராசிக்காரர்கள் அவல் தானம் கொடுத்து, சிவன் வழிபாடு செய்த பிறகு காரியத்தைக் தொடங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள் தேன் தானம் செய்து, கண்ணபிரானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

துலாம் ராசிக்காரர்கள் சர்க்கரை தானம் செய்து, சாந்தரூப அம்பிகையை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

விருச்சிக ராசிக்காரர்கள் துவரை தானம் செய்து அங்காரகனை வழிபட்டு காரியங்களை தொடங்கலாம்.

தனுசு ராசிக்காரர்கள் பேரீச்சம் பழம் தானம் செய்து, குருபகவானை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் எள் போன்ற கருப்பு நிற உணவுப்பொருட்களை தானம் செய்து, அனுமனை வழிபட்ட பிறகு காரியத்தைத் தொடங்கலாம்.

மீன ராசிக்காரர்கள் கற்கண்டு தானம் செய்து, பைரவரை வழிபட்ட பிறகு காரியங்களைத் தொடங்கலாம்.

இதனால் சந்திராஷ்டமம் வரும் நாளில் தவிர்க்க முடியாக் காரியங்களை செய்யும் பொது தடங்கல்கள் வராமல் தவிர்க்கலாம்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம தினத்தை எளிதில் தெரிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரம் வரும் நாளே சந்திராஷ்டம தினமாகும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி -– அனுஷம், பரணி –- கேட்டை, கிருத்திகை –- மூலம், ரோகிணி – பூராடம், மிருகசீரிஷம் – உத்திராடம், திருவாதிரை –- திருவோணம், புனர்பூசம் – அவிட்டம், பூசம் – சதயம், ஆயில்யம் – - பூரட்டாதி, மகம் –- உத்திரட்டாதி, பூரம் – ரேவதி, உத்திரம் – அஸ்வினி, அஸ்தம் – பரணி, சித்திரை – கிருத்திகை, சுவாதி – ரோகிணி, விசாகம் – - மிருகசீரிஷம், அனுஷம் – திருவாதிரை, கேட்டை – புனர்பூசம், மூலம் – பூசம், பூராடம் – ஆயில்யம், உத்திராடம் – மகம், திருவோணம் – பூரம், அவிட்டம் – உத்திரம், சதயம் – அஸ்தம், பூரட்டாதி – சித்திரை, உத்திரட்டாதி – சுவாதி, ரேவதி – விசாகம்.

சந்திராஷ்டம தினங்களில் இறைவழிபாடு நன்மையா?

பொதுவாக இந்த தினங்களில் கோவிலுக்குச் சென்று வருவது நன்மை தரும்

சந்திராஷ்டம தினம் மற்றும் பௌர்ணமி , திங்கட்கிழமைகளிலும் இந்த துதியை பாராயணம் செய்து வந்தால் பாதிப்பில் இருந்து மீளலாம்.

சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.

Cantirasṭama patippukaḷai nikkum cantira pakavaṉ tuti

Swethambaran is the Vasuprabharanam
Svetesvuccadakam Suresavithirim
Durmayam Thuruthapavaramam Dhamtams
Shravathas mouthed quality Pramanamami Nithyam.

Meaning :

I have a white whiteness, a white whitish, who walks in the white horse, and has the salutations of the devotees worshiped in the hands of both hands, holding the seals, and giving the gifts, the Amrutha and the pearl of Srivatasam.

மந்திரங்களை ஜபிப்பதும் மிகவும் நல்லது. மேலும், சந்திரனை வழிபடுவதும் மிக்க நன்று.

திங்களுர் சென்று வருவதும் நன்மை தரும்.

சந்திரனின் காயத்ரி மந்திரம்

பத்மத் வஜாய வித்மஹே

ஹேம ரூபாய தீமஹி|

தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||

(அல்லது)

ஒம் நிஷாகராய வித்மஹே

கலா நாதாய தீமஹி

தந்நோ: சந்த்ரப்ரசோதயாத்!!

சந்திரனின் காயத்ரி மந்திரத்தை சந்திராஷ்டம தினத்தன்று 108 முறை உச்சரிப்பது மிகவும் நல்லது. அன்று ஏற்படும் பிரச்சினைகள் குறையும், மனம் சாந்தியடையும்.

Mantras are very good. And it is better to worship the moon.

Things are also good for traveling.

Chandran's Gayatri Mantra

Padmat Wajaya Vidmahey

Hema Rupai Taimahi |

Thanono Soma: Brododayat ||

(Or)

Oh nishakara vidmahee

Kala Nathaya Taimahi

Thanono: Chandraprasadayath !!

Chandran's Gayatri Mantra is celebrated 108 times on Chandrasaktham day. Problems will be reduced and will be calm.

விநாயகர், அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு பால் அபிஷேக பொருளாக வழங்கினால் சந்திராஷ்டம கெடுபலன்கள் நேராது.

குருவின் ஆதிக்கம்பெற்ற விரளி மஞ்சளை கையில் காப்பாக கட்டிக்கொண்டால் சந்திராஷ்டம தோஷம் பலம் இழந்துவிடும்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

0158. ஆத்யந்த பிரபு

0158. ஆத்யந்த பிரபு விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். ஆதி' என்றால் முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. எந்த ஒரு ஆன்மிக நிகழ்ச்சியும் விநாயகரை வணங்கியே தொடங்கப்படுவது போல் ராமதூதனான அனுமனை வணங்கி அந்த நிகழ்ச்சியை நிறைவு பெறச் செய்ய வேண்டும் பிள்ளையார் பிடித்து குரங்கில் முடிந்தது’ என்பார்கள். அதற்கு ‘மஞ்சளில் பிள்ளையார் பிடித்து ஆரம்பித்து, மாருதிக்கு மங்களம் பாடித் துதித்து மங்களகரமாய் நிறைவடைந்தது’ என்று பொருள். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர். இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்! மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megalahomechannel@gmail.comக்கு அனுப்பவும். நன்றி, R.Megala Gopal.

சனி, 24 நவம்பர், 2018

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

0157. தத்தாத்ரேயர் வழிபாடு

நித்ய சஞ்சீவிகளில் ஸ்ரீ தத்தாத்ரேயரும் ஒருவர்.
பூவுலகில் சகல உயிர்களும் ஞானத்தோடு வாழவேண்டும் என்று எண்ணிய மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து குருவாக உருவம் பெற்று வந்த அவதாரமே ஸ்ரீ தத்தாத்ரேயர்.

சப்தரிஷிகளில் ஒருவரான அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் தத்தாத்ரேயர்.
மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா மூவரையும் உள்ளடக்கிய தத்தாத்ரேயர்.
இவரை திரிமூர்த்தி எனவும் அழைப்பர்.

இவரது 'தத்தாத்ரேயர் சாந்தி மந்திரம்' மனஅமைதி உண்டாக, திருஷ்டி, தீவினைகள் விலக ஜெபிக்கப்பட்டு வருகிறது.

செல்வவளம் உண்டாக, பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலக இந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.

ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-

1.நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாதா ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||

2.பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||

Shri Dattatreya Shanti Mantras: -

1.Imasthe Lord Dattatreya Jagatthae |
Sarva Badha Chiramangam Guru Shanti Prayach May

2.Butta Pathacha Yasya Smarana Mathrathah |
Duradeva Balayante Dattatreya Namasamtham ||
Prechchi Manchu Hoom Image Svaha ||

குடும்பத்தில் அமைதி, மனநிம்மதி உண்டாகும்.
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில்
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.

தேங்காய் வாங்கி அதை மஞ்சள்,பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.

புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.

மீன்டும் நாளை உங்கள் கருத்து மற்றும் சந்தேகங்களை Email : megala5112010@gmail.comக்கு அனுப்பவும்.

நன்றி,
R.Megala Gopal.

புதன், 21 நவம்பர், 2018

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

0155. நித்ய பஞ்சாயதன பூஜை

ஒவ்வொருவரும் தினமும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமான கர்மாக்களில் தேவதா ஆராதனை ஒன்று, அதிலும் முக்கியமானது ஸ்ரீ பஞ்சாயதன பூஜை.

விநாயகர்,சூரியன், அம்பிகை, விஷ்ணு, ஈசுவரன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் தினமும் இதற்குரிய மந்திரத்தை உச்சரித்து பூஜித்து வந்தால் சிறப்பான மேன்மை அடையலாம்.
அங்கங்களோடு விக்கிரகங்களாக இல்லாமல் இந்த ஐந்தையும் இயற்கையாகவே கிடைக்கும் ஐந்து வஸ்துக்களில் ஆவாஹனம் செய்து பூஜை செய்வது ஒரு சம்பிரதாயம்.

இந்துக்கள் வீடுகளில், நதியிலிருந்து எடுக்கப்பட்ட விஷேஷ கற்களை வைத்து செய்யப் படும் பூஜை இது.

I. விநாயகருக்கு பீஹாரில் சோனபத்ராவில் உருவான சோணபத்ரக் கல் சிவப்பு நிறக் கல் , கங்கையிலே கலக்கிற சோணா (ஸோன் என்பார்கள்) நதியில் கிடைக்கிறது.

II. சூரியனுக்குரிய சூரியாகாந்தக் கல் ஸ்படிகம் தஞ்சாவூரில் வல்லத்துக்குப் பக்கத்தில் கிடைக்கிறது.

III. அம்பிகையின் ஸ்வரூபமான ஸ்வர்ணமுகி சிலா என்ற கல் ஆந்திராவில் ஸ்வர்ணமுகி ஆற்றில் கிடைக்கிறது.
அது தங்க ரேக் ஓடிய கல்.

IV. விஷ்ணுவின் வடிவமான ஸாலக்கிராமம் நேபாளத்தில் கண்டகி நதியில் கிடைக்கும்.

V. ஈசுவரனுக்குரிய பாண லிங்கம் நர்மதை நதியில் ஓங்கார குண்டத்தில் கிடைக்கிறது.

ஆக, இந்த ஐந்தையும் ஓரிடத்தில் வைத்தால் இந்தத் தேசம் முழுவதையுமே ஒன்று சேர்த்து வைத்தது போல் ஆகும்.

இவற்றோடு சுப்ரம்மணிய உபாஸனையையும் நிலை நாட்டினார்.
எனவே, மேலே சொன்ன ஐந்தோடு நாமும் ஒரு வேலை வைத்து வேலாயுதனான குமார ஸ்வாமியையும் பூஜிக்கலாம்.

தீர்த்தத்தில் அபிஷேகம் பண்ணி, சந்தனம், குங்குமம் அக்ஷதை வைத்து, அர்ச்சனை செய்து நைவேத்தியம் காட்டலாம்.

உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்து நிற்கவும், செல்வம் தழைத்தோங்கவும் உதவுகிறது நித்ய பஞ்சாயதன பூஜை.
இதனை நீங்கள் தினமும் செய்து வந்தால் உயர்ந்த பொருளாதாரம் நிலைத்து நிற்கும்.
இந்த நித்ய பஞ்சாயதன பூஜைகள் செய்வதால் பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கிறது.
நிம்மதியான வாழ்வும், செழிப்பான பொருளாதாரமும் கிட்டுகிறது.