சனி, 17 நவம்பர், 2018

0140. மேகலா வீட்டின் பூஜை அறை அமைத்தல்

0139. மேகலா வீட்டின் தீபாவளி அன்று காலை லஷ்மி குபேர் நாணயங்கள் வழிபாடு 06/11/2018

0138. மேகலா வீட்டின் ஆடி மாசம் இரண்டாவது வெள்ளி லக்ஷ்மி கௌடி பூஜை 27/07/2018

0137. மேகலா வீட்டின் பூஜை அறை ஏற்பாடு வீடியோ

0136. மேகலா வீட்டின் சாளக்கிராமம்

0135. மேகலா வீட்டின் தினமும் எற்றபடும் தீபம்

0133. மேகலா வீட்டில் பூஜையறை ஏற்பாடு

0132. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை லஷ்மி குபேர் நாணயங்க...

0131. மேகலா வீட்டின் தீபாவளிக்கு முதல் நாள் திரயோதசி அன்று தனத் திரயோதசி மற்று...

030. மேகலா வீட்டின் ஐப்பசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை கதிர் போட்ட நாணய வழிபாடு...

0129. மேகலா வீட்டின் சங்கு தீபம்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

0128. துளசி கல்யாணம்

0128. துளசி கல்யாணம்

ஸ்ரீ துளசி தேவிக்கும் ஸ்ரீமான் நாராயணனுக்கும் (கிருஷ்ணனுக்கும்) கல்யாணம்

கார்த்திகை மாத வளர்பிறை துவாதசி திதிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர்.

கார்த்திகை மாதம் சுக்ல த்வாதசி அன்று நெல்லி மரத்தை துளசிச் செடிக்கருகே நடுவார்கள்.

துவாதசியன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து நீராடியபின்,

கருகமணி, நகைகள் அணிவித்து அலங்காரம் செய்யலாம்.
வெற்றிலை, பாக்கு, பழங்கள், மஞ்சள், மணமுள்ள மலர்கள், தேங்காய் படைத்து, குத்துவிளக்குகள் ஏற்றி வைக்கவேண்டும்.

சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்யலாம்.
மகாவிஷ்ணு நெல்லிமரமாகத் தோன்றினார் என்பதால், ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து துளசி மாடத்தில் சொருகி வைத்து, இரண்டுக்கும் பூஜை செய்யவேண்டும்.

"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹான துளஸிம் விவாஹ விதி
நேச்வர பயோக்ருதைஸ்ச ஸேவாபி கன்யாவத்
வந்திதாம் மயா த்வத் ப்ரியாம் துளஸிம்
துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'

என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்யவேண்டும்.

துளசி பூஜை செய்வதால் எட்டுவகை செல்வங்களும் கிட்டும்.
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
சுமங்கலிகள் சுகமுடன் நீடூழி வாழ்வர்.

வெள்ளி, 9 நவம்பர், 2018

0127. கன்னன் - கண்ணன்

0127. கன்னன் - கண்ணன்

கன்னன் - கண்ணன்.
இரண்டும் இருவரது பெயர்கள்.
முன்னவன் கர்ணன், பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் கன்னன் எனவும், கிருஷ்ணன் கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார்.
இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.

I. கர்ணனுக்கு மறு பெயர் கன்னன்?
"தோரோட்டியின் மகன்' என்று ஏசப்பட்டவன்.

II. கிருஷ்ணனுக்கு மறுபெயர் கண்ணன்?
பார்த்தனுக்குச் (அர்ச்சுனனுக்கு) சாரதியாகக் குதிரை ஓட்டி, எல்லாராலும் பூஜிக்கப்பட்டவன்.